Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரம்பரியக் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் பல்துறைக் கலைஞர் சிலம்பாசான் தில்லை சிவலிங்கம் அவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் கரகாட்டம் போர் தேங்காய் அடித்தல் நாடகங்கள் மற்றும் பஜனைப் பாடல்கள் போன்ற கலை துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சிலம்ப ஆசான் தில்லை சிவலிங்கம் என அழைக்கப் படுகின்ற தில்லையம்பலம் தவராசா அவர்கள்.

8 வயதில் இருந்து சிலம்பம் சூரசங்காரம் அவர்களிடமும் பின் நடராசா சோதிசிவம் அவர்களிடமும் பயிற்சி பெற்று தமிழாராட்சி மாநாட்டில் சிலம்ப நிகழ்வில் வைத்து இவரது ஆசான் நடராசா சோதிசிவம் அவர்களினால் சிலம்பாசான் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர்

அதனைத் தொடர்ந்து தனது திறமையினால் நிறைய சிலம்ப மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் கூட சிலம்பம் பயிற்சியளித்து வருகின்றார். அமரர் சாண்டோ எம் துரைரத்தினம் அவர்களினால் சிலம்பச் சக்கரவர்த்தி என பட்டமளித்து கௌரவிக்கப் பட்டவர். தனக்குப் பின் சிலம்பத்துக்கான ஆசான் பட்டத்தினை தனது சிஷ்யன் தியாகராசா தவஞானராசா (சின்னக்கிளி மாஸ்ரர்) அவர்களுக்கு வழங்கியுள்ளார்

2011 இல் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையினால் சிலம்பக் கலைக்காக கலாசாரப் பேரவையின் உயரிய விருதான கலைப் பருதி விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளார்.
இவர் இளமை காலங்களில் நாடகத்துறையிலும் பெயர் பெற்றவர். “என்னதான் முடிவு” , “அப்பு உது தப்பு” ,”காத்தவராயன் கூத்து, வடமோடி கூத்து, வனித மனோகரி கூத்து ” ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இந்தியாவில் இருந்தபோது “சூத்திரதாரி ” நாடகத்தில் துரியோதனன் வேடமேற்று நடித்துள்ளார்.

பஜனை பாடல்கள் பாடுவதிலும் வல்லவரான இவர் மறவர் கலைக்குழு எனும் கலைக்குழுவை இயக்கி வருகின்றார். அந்த கலைக் குழுவானது பொலிகை மண் தவிர்ந்த வெளி இடங்களிலும் பஜனைப் பாடல்களின் மூலம் நன்கு அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கரகாட்ட நிகழ்வுகளிலும் இவரது உடுக்குப் பாடல்கள் சிறப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன. தற்போது 63 வயதாகும் இவர் இன்றும் கூட இளமை வேகத்தில் தனது கலைச் சேவையினை செய்து வருகின்றார்.

எம் மண்ணிற்கும் மக்களிற்கும் தனது கலைச் சேவையின் மூலம் பெருமை சேர்க்கின்ற இப் பல்துறை கலைஞரை வாழ்த்தி கௌரவிப்பதில் பொலிகை மண் இணையம் பெருமை கொள்கின்றது.

http://polikaiman.com/?p=1845



இவர் கடல் புலிகளின் தளபதி சூசை அவர்களின் அண்ணன் ஆவார்.
இவரை எனது சிறு வயது முதலே நான் அறிவேன். சிறு வயதில் பார்த்த "அப்பு உது தப்பு" நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது. பாடி நடிக்கும் திறமை உள்ளவர். அரசியல் காரணங்களுக்காக இவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் வந்தன, சொல்லொனா துயரங்களை குடும்பம் எதிர் கொண்டது. இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து கலைக்கு சேவை செய்ய இறைவனை வேண்டுகின்றேன்.
இவரது தம்பி சூசையும் கராத்தேயில் சிறந்து விளங்கியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.