Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித புதைகுழி மீண்டும் தோண்டப்பட்டது.

Featured Replies

 

7%282072%29.jpg
-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்,  திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை (28) காலை 8.30 மணிக்கு குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது.

இதன்போது, மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மனித புதை குழி தோண்டும் போது உடற்கூற்று நிபுணர் ஆர்.எம்.பி.ராஜகருணா, அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி பி.யு.மடவல, தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்தின, பேராதணை பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி கே.நந்த சேன, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் டி.லக்சிறி விஜயசேன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வி.ரி.சுகதபால, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த ஆகியோரும் பிரசன்னமாகியிருந்னர்.

இதேவேளை குறித்த மனித எழுலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்திற்கு வருகைத்தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.

மனித எழும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமைவரை  தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (20) ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் இருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் நீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டிய போது மூன்று மண்டையோடுகளும் மனித எழும்புகளும் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தோண்டப்பட்டன.

இதன்போது சுமார் 10 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

DSC04274.JPG
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. (படங்கள்:- எஸ்.றொசேரியன் லெம்பேட்)
DSC04177%281%29.JPG
DSC04186%283%29.JPG
DSC04191%282%29.JPG
DSC04202.JPG
DSC04233.JPG
DSC04267.JPG
DSC04282.JPG
DSC04294.JPG
DSC04300%281%29.JPG
DSC04310.JPG
DSC04315.JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/94830-2013-12-28-10-12-47.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.