Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகத்தின் 15 வது முத்தமிழ்விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வரும் 63 தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகம் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஒன்லிசூபா என்னும் இடத்தில் முத்தமிழ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், தமிழ்ச்சோலை நிர்வாகிகளையும், மக்களையும், தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான இனியம் நடன நாட்டிய அசைவுடன் மாணவிகள் அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புச்செய்ய டென்மார்க்கில் இருந்து வந்திருந்த மக்கள் பேரவையின் ஒருங்கமைப்பாளரும், தேசவிடுதலைச் செயற்பாட்டாளருமான திரு. மகேசுவரன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்களும் ஏற்றிவைத்திருந்தனர்.

ABC_5000.JPG

ABC_5001.JPG

ABC_5002.JPG

தமிழ்ச்சோலைக்கீதம் மாணவர்களால் பாடப்பட்டது வரவேற்பு நடனம், மற்றும் வரவேற்புரையும் இடம் பெற்றது. வரவேற்புரையை தமிழ்ச்சோலையால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இணையவழிமூலமான பட்டம் படிப்பை நிர்வகித்து வரும் திரு. தனராஐ அவர்கள் ஆற்றியிருந்தார்.

ABC_5003.JPG

தெடர்ந்து நாடகம், வில்லுப்பாட்டு, தாயகப்பாடல்களுக்கான நடனங்கள், பட்டிமன்றம், நாட்டிய நாடகம் (சிலப்பதிகாரம்) பட்டிமன்றம்( இளம் சமுதாயத்தில்) கண்ணன்ராதை சிறுவர் நடனம், பரதநடனம், கிராமிய நடனம், வில்லிசை, கும்மி நடனம், இராவணன் நாடகம், இசையும் கதையும், போன்று 30 வரையிலான நிகழ்சிகள் நடைபெற்றிருந்தது.

ABC_5004.JPG

தமிழ்ச்சோலைகளின் ஆண்டுதோறுமான பணிகளைகளையும், பள்ளிகளின் ஆக்கங்களையும், நிர்வாககிகளின், மாணவச் செல்வங்களின் படங்களுடன், தமிழ் உணர்வாளர்கள் மற்றும், போராசிரியர்களின் வாழ்த்துக்களுடன் ஆண்டுமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் மலரினை தமிழ்ச்சோலை தலைமைப்பணியக பொறுப்பாளர் திரு. nஐயக்குமாரன் அவர்கள் வெளியிட்டு வைக்க சிறப்பு விருந்தினர் திரு. மகேசுவரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ABC_5005.JPG

சிறப்பு விருந்தினர் தமிழ்ச்சோலை நிர்வாகிகளுக்கு வழங்கி அவர்களை மதிப்பளித்திருந்தார். தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் தமிழ், தமிழ்க்கலை ஆசிரியர்களின் பத்து வருடங்கள் பனி நிறைவு பெற்றவர்களை மதிப்பளித்து வருகின்றது. அவ்வாறு பணியாற்றியவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்கள் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்திருந்தார். அத்துடன் தனது சிறப்புரையையும் வழங்கினார்.

ABC_5006.JPG

தமிழ் மொழி சிறக்கவும், தழைத்தோங்கவும் தமிழ்ச்சோலைகளும், தலைமைப்பணியகமும் ஆற்றுகின்ற பணியைப்பாராட்டியதுடன், எமது மொழி இன்னும் சிறக்க எமக்கு எங்கள் சொந்த மண் வேண்டும் அதை சனநாயகவழியில், சர்வதேசம் விரும்புகின்ற வழியில் நிச்சயம் பெற்றுவிட முடியும் அதை நாம் மற்றவர்கள் செய்யட்டும் சும்மா இருக்க கூடாது என்றும் தொரும் சனநாயகப்போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும். எதிர்வரும் மார்ச் 10ம் திகதி nஐனீவாவில் நடைபெறவிருக்கும் பேரணிக்கு வீட்டுக்கு ஒருவராவது நிச்சயம் வரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ABC_5007.JPG

திருக்குறள் மனனப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஒருங்கமைப்பாளர் திருமதி. அ. நகுலேசுவரி அவர்களும், பங்கு பற்றி சிறப்பித்த மாணவர்களுக்கு முன்னைநாள் அதிபரும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டருமாகிய திரு,சத்தியதாசன் அவர்களும், ஆண்டு 12 தமிழ் மொழி பொதுத்தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச்சோலை தலைமைச் செயலகப்பொறுப்பாளர் திரு. nஐயக்குமாரன் அவர்களும் சான்றிதழ்வழங்கி மதிப்பளித்திருந்தார்.

பட்டப்படிப்பை மேற்கொண்டு சித்தியடைந்தவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. து. மேத்தா அவர்களும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளித்ததோடு மட்டுமல்லாது மதிப்பளித்தவர்கள் தமிழ்ச்சோலையின் தலைமைச்செயலகத்தின் செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், வாழ்த்துதல்களை கூறிச்சென்றனர்.

தமிழர் தொலைக்காட்சியினரான ரிரிஎன் தொலைக்காட்சியினர் தமிழ்ச்சோலையின் தலைமைப்பணியகத்தின் 15 வருடகால செயற்பாட்டினை ஆவனமாக தாயாரித்து வெண்திரையில் காட்சிப்படுத்தியிருந்தனர். மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற முத்தமிழ் விழா 2013 தமிழ்மொழி வாழ்த்து பாடலுடன், நல்வாய்ப்பு சீட்டிழுப்புடன் சரியாக 7.00 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் சிறப்புடன் இனிதே நிறைவு பெற்றது.

 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.