Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூர் அரசியல் காய் நகர்த்தல்களின் சர்வதேச இராஜதந்திரம்

Featured Replies

உள்ளூர் அரசியல் காய் நகர்த்தல்களின்

பின்னணியில் சர்வதேச இராஜதந்திரம்

`

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அணி திரண்டு விட்டன.

அந்நிலையில், "எல்லாவற்றுக்கும் மேலானதாக நாட்டைக் கருதி' ஒன்றுபட்டு செயற்பட வருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார். தேசிய அரசு மூலம் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஐ.தே.கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

ஐ.தே.கட்சியுடன் இணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டி யிட்டு, அந்தக் கட்சியின் தேசியப் பட்டியலில் தமக்குரிய பங்கையும் பெற்றுக்கொண்ட இ.தொ.காவையும், மலையக மக்கள் முன் னணியையும் ஐ.தே.க. அணியிலிருந்து பிரித்தாகிவிட்டது.

அடுத்து, அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அரசுப் பக்கம் வளைத்துப் போடும் நடவடிக்கைகள் மும்முரமாக நடக்கின்றன. ஏற்கனவே, அந்தக் கட்சித் தரப்பிலிருந்து அமைச்சுப் பதவிகளுக்காக அரசுப் பக்கம் குத்துக்கரணம் அடித்தவர்கள் போக எஞ்சியோருடன் ஹக்கீம் குழுவும் அணி தாவும் சாத்தியக்கூறுகள் பெரும்பாலும் தென்படுகின்றன.

இந்நிலையில் இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பக்கபலத்தையும், ஏற்கனவே தனது கட்சியிலிருந்து அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பதவிகளுக்காக "பல்டி' அடித்து அரசுப் பக்கம் சேர்ந்த ஐந்து எம்.பிக்களின் ஆதரவையும் பறிகொடுத்து வலுவிழந்திருக்கும் ஐ.தே.கட்சியை அரசுடன் "தேசிய அரசு' முயற்சியில் ஒண்றிணையுமாறு அழைப்பு விடுப்பதற்கு இதுவே பொருத்தமான சந்தர்ப்பம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதியிருக்கக் கூடும். அதுதான் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த அழைப்பை அவர் விடுக்க விழைவதன் பின்னணி என்று அவதானிகள் சிலர் கூறுகின்றனர்.

பௌத்த சிங்களத் தீவிரப் போக்குடைய பிரதான கட்சியான ஜே.வி.பியை அரசுக்குள் இழுத்துப்போட எடுத்த முயற்சிகள் பலன் தராத நிலையிலேயே தமது அரசைப் பலப்படுத்தும் மாற்று வழி யாக ஜனாதிபதி இந்த அதிரடி நடவடிக்கைகளை இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை அரசுக்குள் அரவணைத்தல், ஐ.தே.கட்சியை அரசில் இணையுமாறு அழைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், ஜனாதிபதி மஹிந்தவின் இந்த அரசியல் காய் நகர்த்தல்களுக்குப் பின்னால் உள்ளூர் அரசியல் மட்டுமல்லாமல் சர்வதேச இராஜதந்திர சமாளிப்புகளும் அடங்கியிருக்கின்றன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் பெரும் போராக வெடிக்கக் கூடிய மோசமான நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியில் சிரத்தையோடு பேச்சுகள், கலந்தாலோசனைகள், மதிப்பீடுகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் அந்நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், விசேட தூதுவர் ஹான்சன் போவர், இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் எனப் பலரும் பல் வேறு மட்டங்களில் இலங்கைப் பிரச்சினை குறித்து கலந்தாலோசனைகளை நடத்தியிருக்கின்றார்கள்.

இதேசமயம், இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலை மைகள் நான்கும் கூட அண்மையில் ஒன்று கூடியும், பின்னர் தங்களுக்குள் தனித் தனியாகவும் இலங்கை நிலைமை குறித்து விரி வாக ஆராய்ந்திருக்கின்றன.

இந்தச் சந்திப்புகளில் எல்லாம் தென்னிலங்கை அரசு தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கிய குறைபாடு ஒன்றுதான்.

அது ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நீதியான நீடித்து நிலைக் கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் விடயத்தில் தென்னிலங்கை ஒன்றுபடவில்லை என்பதுதான். இந்தத் தவறை தென்னிலங்கை தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும்போது சிறுபான்மை தரப்பினரை குறைசொல்வதில் அர்த்தமில்லை என்ற கருத்து நிலைப்பாடே இப்போது மேலோங்கி வருகின்றது.

பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டும் ஒன்றுபடாத நிலையில் சிறிய வீத மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பௌத்த சிங்களத் தீவிரப் போக்குக் கட்சிகள் இழுத்த இழுப்புகளுக்கு அரசு ஆடிக் கொண்டிருந்தால் யுத்தம் வெடிப்பது தவிர்க்க முடியாததே என்ற நிலைப்பாட்டைத்தான் இந்தியாவும் வெளிப்படுத்துவதாகத் தகவல்.

எதிர்வரும் 12 ஆம் திகதி பிரஸல்ஸில் கூடவிருக்கும் இணைத் தலைமை நாடுகளும் இந்தக் கூட்ட முடிவில் இக்கருத்தையே பிரதிபலிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. ஏற்கனவே, வடக்கு கிழக்கில் மனித உரிமைகளைப் பேணுவதில் அரசின் அசிரத்தை குறித்து இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு "நோட்டீஸ்' கொடுத்து விட்டன என்றும் தகவல்.

இந்நிலையில், 12 ஆம் திகதிக் கூட்டத்தின் முடிவில் (சில சமயம் இந்தக் கூட்டம் இலங்கை நிலைமையின் அவசரம் கருதி ஒரு வார காலம் முன் நகர்த்தப்படலாம்) காட்டமான அறிக்கை மூலம் இலங்கை அரசுத் தரப்புக்கு ஒரு "குட்டு' வைக்கப்பட அதிக வாய்ப்பு களுண்டு.

அதேசமயம், அடுத்த மாத நடுப் பகுதியில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அமெரிக்கா செல்கின்றார். இலங்கையில் மோசமான யுத்தம் வெடித்து அமைதி முயற்சிகளை நகர்த்த இயலாத போர் வெறியராக தாம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா செல்வதும் உலகத் தலைவர்களை அங்கு தாம் சந்திப்பதும் தமக்கு இம்சையான விடயங்களாக இருக்கும் என்பது ஜனாதிபதி மஹிந்தருக்குத் தெரியும்.

அதனால்தான், சர்வதேச மட்டத்தில் தனதும், தனது அரசினதும் நிலைமையைச் சீர்செய்ய உள்ளூர் அரசியலில் காய்களை வச மாக நகர்த்துகிறார் ஜனாதிபதி மஹிந்தர்.

இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, மு.கா. போன்றவற்றை அரசுக்குள் இழுப்பதன் மூலம் சிறுபான்மையினருக்குத் தாம் எதிரான வர் அல்லர் என்று சர்வதேசத்துக்குப் படம் போட்டாயிற்று. புலி களுக்காகத் துள்ளிக்குதிக்கும் தமிழகத்தின் வாயையும் சற்று அடக்க முடிந்திருக்கின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவை தேசிய அரசில் இணைய வருமாறு அழைப்பு விடுத்ததன் மூலம் மற்றைய பிரதான கட்சியுடன் இணைந்து இனப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் அரசு "உண்மையாகவே' உள்ளது என்று வெளிக்காட்டியாகி விட்டது.

உணவுக் கப்பல்களை வடக்கே அனுப்புவதில் சிரத்தை உள்ளவர் என்பதை கொழும்புத் துறைமுகத்துக்கு நேரில் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றுவதைப் பார்வையிட்டு நிரூபித்தமை போன்ற நடவடிக்கைகள் மூலம் வடக்கு, கிழக்கில் மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் அந்த மக்களின் நலன் ஆகியவற்றில் அக்கறையுள்ளவர் எனத் தம்மை இனங்காட்டியாகிவிட்டது.

இவைதான் ஜனாதிபதியின் உள்ளூர் அரசியல் நகர்வுகளுக் குப் பின்னால் உள்ள சூட்சுமங்கள். இந்த நடவடிக்கைகளின் பின் னால் பொதிந்துள்ள "உண்மைகளை' சர்வதேச சமூகம் சரியாகப் புரிந்துகொள்ளுமா என்பதே கேள்வி.

http://www.uthayan.com/editor.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.