Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சாங்­கத்­திற்கு சர்வதேச அழுத்­தங்­கள் கிடைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே காரணம்: - குண­தாச அம­ர­சே­கர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Dr-gunadasa-amarasekara150.jpg

எதிர்காலத்தில் அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே சம்­பந்­தனின் இலக்கு. சர்­வ­தேசம் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே காரணம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அதன் ஆத­ர­வினை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே வழங்கும். மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்­கத்தை விரட்­டு­வதே இவர்­களின் குறிக்கோள் எனவும் அவ் இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

  

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­விக்­கையில்:

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்­தி­யா­விற்கு செல்­வ­தற்­கான கார­ண­மென்ன? இலங்கை அர­சாங்­கத்தை வீழ்த்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீவி­ர­வாதக் கொள்­கை­யினை மீண்­டு­மொரு முறை இலங்­கையில் பரப்­பு­வதே சம்­பந்­தனின் இலக்கு. இதனை விரைவில் செயற்­ப­டுத்­தவே சம்­பந்தன் சர்­வ­தேச விஜ­யங்­க­ளையும் சர்­வ­தேச தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றார்.

ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் ஏனைய சர்­வ­தேச நாடு­களும் இலங்­கை­யுடன் பகைத்துக் கொண்­ட­மைக்கும் இன்று சர்­வ­தேச அழுத்தம் இலங்கை மீது காணப்­ப­டு­வ­தற்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தான கார­ண­மாகும். அவர்­களின் பழி­வாங்கும் நோக்­கமே இன்று சிங்­கள அர­சாங்­கத்தை ஆட்டிப் படைக்­கின்­றது.

மேலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை வீழ்த்தி ஆட்­சியை பிடிப்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் உள்ள குறிக்­கோள்­க­ளாகும். எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முழு ஆத­ர­வி­னையும் வழங்கும் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யினை கவிழ்த்து சர்­வ­தேச தலை­யீ­டு­களை இலங்­கைக்குள் கொண்டு வந்து இந்த நாட்டை சீர­ழிக்­கவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இதற்கான தீர்வினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டையும் பௌத்த சிங்கள மக்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100763&category=TamilNews&language=tamil

இல்லை சிறி லங்கா இனவெறி அப்பு.

90 மில்லியன் உலக தமிழரின் அழுத்தம்.

அவ்ருக்கு அரசியல் கொஞ்சம் புரிகிறது.  

 

இந்தியக்காங்கிரஸ் போர் நேரம் நிபந்தனை இல்லாத போர்க்குற்ற உதவிகள் செய்த நாடு. அந்த காங்கிரசாருக்கு அண்மையில் இலங்கை வருவதே முடியாமல் போய்விட்டது. மாற்றத்தின் ஆரம்ப காரணம் வைகோ, சீமான், நெடுமாறன், திருமுருகன் காந்தி..................பெரிய கட்சிகள் பங்கு இல்லை.

இப்போ இதில் ஜெயலலிதா, கருணாநிதி...... தமிழக பெரிய கட்சிகளும் உண்டு. இதைப்பார்த்து தமிழ்க காங்கிரசு திரும்பிவிட்டது. இது பா.ஜ.க (மத்தியை) இலங்கை பிரச்சனை பற்றி பேச வைக்கிறது. சம்பந்தர் இப்போது கம்யூனிஸ்டுகளையும் பேச வைக்கிறார். 

விடையம் இந்தியாவில் சூடு பிடித்து மத்திய தேர்தலில் வெல்வது இலங்கை தமிழர் சம்பந்தமான கொள்கை நிலைப்பாடு என்றதிலும் தங்க போகிறது. அப்படி வந்தால் காங்கிரஸ் முழுமனதாக மாறியேதான் ஆக வேண்டும்.

 

காங்கிரசின் இலங்கை தமிழர் அழிப்பு போக்கில் மாற்றம் வந்தால் புலம் பெயர் தமிழ் ஊடகங்களின் பாதுகாப்பு கொள்கை வெடித்த பலூன் ஆகிவிடும். இந்தியா திரும்பவும் இலங்கையில் இறங்கி தலையிட தடைகள் என்று ஒன்றும் இருக்காது. மகிந்தா சீனா கடன்களுக்கு பதில் சொல்ல முடியாது. சீனா வெளியே நிற்க வேண்டி வரும். இதை எல்லாம் அவர்கள் கூர்மையாக கவனிக்கிறார்கள். இத்னால் இந்தியா சென்றிருக்கும் சமப்ந்தரின் பயணம் இவருக்கு பயமாக இருகிறது. அவர் சம்பந்தை மட்டும் இலக்கு வைத்து தாக்குகிறார்.

அரசைக் கவிழ்க்க முனையும் அமெரிக்கா
Written by Tamil   //  January 6, 2014   //
3107Vimalஅரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அமெரிக்கா ஏனைய உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் நிறைவில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாக புலனாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

http://news.tamilstar.com/archives/56783#more

இவர்களுக்கு மற்றர்வர்களை குற்றம் சாட்டி திசை திருப்பி தங்கள் இனவாத அரசியலையும் இனக்கொலைகளயும் தொடர்ந்து செய்வதே தொழில் ஆகிவிட்டது.. இனவாத முகமூடியை சரியாக கிழித்தெறியாவிட்டால் இப்படியே பூச்சாண்டிக் கதைகள் தொடரும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.