Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டணி போட்டியிடுவது உறுதி!

Featured Replies

நேற்று சனிக்கிழமை மாலை 20 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் சென்னையில் ஒன்று கூடி பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் எவ்வாறு போட்டியிடுவது என்று விவாதித்தனர். திராவிடக் கட்சிகள், இந்திய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் இணையவில்லை என்றாலும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தங்கள் பலத்தை நாற்பது தொகுதிகளிலும் காட்டவுள்ளனர் என்பது மற்றும் உறுதி செய்யப்பட்டது. தமிழர் நாடு தமிழர் வசம் வருவதற்கு நூறாண்டு திட்டம் வகுக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக இந்த முன்னெடுப்பு நடக்க உள்ளது. தமிழர் அரசியல் 70 ஆண்டு காலம் பின்தங்கியுள்ள நிலையில் இனியாவது துணிந்து இன நலம் சார்ந்து தமிழர்கள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

இப்போது போட்டியிட்டு தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றி பெறும் என நாம் சொல்லவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டணி தமிழகத்தின் மாற்று அரசியலை வரும்காலத்தில் நிச்சயம் தீர்மானிக்கும் என்ற செய்தியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர் நாட்டை இன நலம் சார்ந்த தமிழர்களே ஆளும் வகை செய்வோம். விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் வெளியிடப்படும். வாழ்க தமிழ், வளர்க தமிழர் நாடு.

 

இராச்குமார் பழனிசாமி

(facebook)

. தமிழர் அரசியல் 70 ஆண்டு காலம் பின்தங்கியுள்ள நிலையில் இனியாவது துணிந்து இன நலம் சார்ந்து தமிழர்கள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

 

 

  • தொடங்கியவர்

தமிழ்சூரியன் அண்ணா அதற்குள் சந்தோசப்பட்டு விடாதீர்கள். பெரிய கட்சிகள் இணையவில்லை என்று மேலே போட்டுள்ளார்கள். :D

 

ம.தி.மு.க ஏற்கனவே பா.ஜ.க வுடன் கூட்டணி. நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. உதயகுமாரன் ஐயா ஆம் ஆத்மி கட்சியுடன் இணையப்போவதாக ஒரு செய்தி. ஆனால் அந்த முடிவை மாற்றி இதில் இணைவாரோ தெரியாது. பதில் இன்னும் தெரியவில்லை. எனவே யார் யார் இணைகிறார்கள் என தெரியாது. :rolleyes:

 

உண்மையில் இம்முறை தமிழகத்தில் வாக்கு பிரிவுகள் அதிகளவில் நிகழப்போகிறது. :rolleyes: நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு வாக்களியுங்கள், இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் திக்குத்திக்காய் நிற்கிறார்கள். ஏதோ நடப்பதை காண்போம். :rolleyes:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

தமிழர் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம். வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறது !

இன்று சென்னையில் தமிழ் அமைப்புகள் , கட்சிகள் , இயக்கங்கள் , தமிழ்ச் சான்றோர்கள் ஒன்று கூடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுவதென்று முடிவெடுத்து அதற்கான கூட்டமைப்பை உருவாக்கினர். நடந்த இந்த கலந்தாய்வில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒருமனதாக 'தமிழர் தேசிய கூட்டமைப்பு ' என்ற பெயரில் தேர்தலில் களமிறங்க முடிவெடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. இனி வரும் வாரங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் இனம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள் இணைய உள்ளன.

வரும் தேர்தலில் தமிழர்களுக்கு சார்பாக ஒரு கூட்டணியும் உருவாகாத நிலையில் , திராவிட , இந்திய தேசிய கட்சிகள் மீண்டும் பெரும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட உள்ள நிலையில் , தமிழர்களின் சார்பாக ஒரு வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டமைப்பு உருவாகி உள்ளது . ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் , தமிழர் உரிமைகள் அனைத்தும் மீட்கவும் இந்த கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட உள்ளது .

மிக முக்கியமான தமிழர்களின் நெடுநாள் கனவான ' தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் ' என்ற முழக்கத்தை முன்வைத்து இக் கூட்டமைப்பு செயல்பட உள்ளது. தேர்தல் கோரிக்கையாக தமிழர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி , வேலை வாய்ப்பு , கல்வி , சுகாதாரம் , விவசாயம் , பொருளாதாரம் , தொழில் வளர்ச்சி என அனைத்திலும் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கவும் தீர்மானம் இயற்றப்பட்டது. நம் மொழியை அரியணை ஏற்ற தமிழர்களுக்கான மொழிக் கொள்கை வகுக்கப்பட்டது. சாதிய சிக்கலை தீர்க்கவும் அனைத்து தமிழ்ச் சாதிகளையும் ஒன்றிணைக்கவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுத்துவ சமூகத்தை உருவாக்கவும் உறுதி ஏற்கப்பட்டது. அரசியல் ரீதியான பலத்தை பெறுவதற்கும் தமிழர்கள் இழந்த அரசியல் உரிமைகளை போராடிப் பெறுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. தமிழர் கல்வி உரிமை , வழிபாட்டு உரிமை , வழக்காடு உரிமை , நில உரிமை , சொத்து உரிமை , விவசாய உரிமை , இயற்கை வளங்கள் மீதான உரிமை , நீர் உரிமை அதிகார உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மீட்டெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு முன்னுரிமை என்ற அடிப்படை கோரிக்கையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழர் நலன் சார்ந்த பல்வேறு கொள்கைகளையும் தமிழ்ச் சான்றோர்கள் கூடி பேசி வரையறை செய்ய உள்ளனர்.

இக்கூட்டமைப்பில் முதல் கட்டமாக அதியமான் தமிழர் முன்னேற்ற கழகம் , திரு . அரிமாவளவன் தமிழர் களம் , பிரபாகரன் மறத்தமிழர் சேனை, தமிழர் பேரரசு கட்சி, திரு செல்வா, தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், இராஜ்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம், திரு இறைவன் வடதமிழ் நாடு மக்கள் சங்கம், செந்தில் மள்ளர் ,மள்ளர் மீட்புக் கழகம், பெருமாள்தேவன் தேவர் ஆராய்ச்சி மையம், அக்னி சுப்பிரமணியன், சீதையின் மைந்தன் , எழுகதிர் ஆசிரியர் திரு அருகோ, அருட்கண்ணனார், திரு முகிலன் தமிழ் பட்டரை, திருமாறன் மற்றும் பலரும் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களையும் தங்கள் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டனர் .

நாம் வகுத்துள்ள தமிழர் நல கொள்கையில் உடன்பாடுள்ள கட்சிகள் , அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணைந்து தேர்தலை சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கிறோம். வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது ஒரு புறம் , தமிழ்த் தேசிய அரசியலுக்கான அவசியத்தை மக்களுக்கு எடுத்தச் செல்வது இன்னொரு புறம். தமிழர் அரசியல் கட்டமைப்பு வலுவடையட்டும். தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்று தமிழர் வாழ்வு சிறக்கட்டும்.

 

தொடர்பு கொள்ள - 9566224027, 9047440542, 9943938548

 

இராச்குமார் பழனிசாமி

(facebook: https://www.facebook.com/rajkumar.palaniswamy.5/posts/803038793044306)

Edited by துளசி

போற போக்கை பார்த்தால் இம்முறையும் தமிழ் இன ஆதரவுக் கட்சிகள் பாராளுமன்றம் போக முடியாது போல உள்ளது  தமிழன் பெயரால் இன்னும் பல பிரிவுகளை உருவாக்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக போன்ற கட்சிகள் வெல்ல உறுதி கொள்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.