Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மறக்கப்பட்ட தேசியப் பற்றாளன்’ பிரான்ஸ் தடுப்புக்காவலில் இருந்து ஒரு அவலக்குரல்!

Featured Replies

Ranjan.jpg

 

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட போதிலும் புலம்பெயர் நாடுகளின் மக்கள் எழுச்சி சிங்கள இனவாத அரசுக்கு பாரிய நெருக்கடியாகவும் தலையிடியாகவுமே அமைந்துவருகின்றது. ஆனாலும் பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சியிலும் சிங்கள அரசின் கை ஓங்கியிருப்பதாக தெரியவந்திருக்கின்றமை மிகுந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இனவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளுக்கு நிகரான அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்தேறிவருகின்றமை பல சந்தர்ப்பங்களில் வெளித்தெரிவதில்லை. பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த றஞ்சன் என்றழைப்படும் ஸ்ராலின் சவரிமுத்து தமிழ்த் தேசிய உணர்வாளர் 2007ஆம் ஆண்டு பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதிகளுக்கு உதவிபுரிந்தமை, நிதியுதவி வழங்கியமை, சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தமை உட்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தண்டனைக் காலம் 2011ஆம் ஆண்டு நிறைவு பெற்று விடுதலையான போதிலும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் முழு நேரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளமையும் அதற்கு சொல்லப்படுகின்ற காரணங்களும் வேதனையளிப்பதாகவே அமைந்திருக்கின்றன.

அவரை வெளியில் அனுமதிப்பது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்ததாலேயே அவரை தடுத்துவைத்திருப்பதாக பொலிஸார் காரணம் சொல்லியிருக்கின்றனர். ஆனாலும் பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிடுகின்ற தமிழர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகின்ற போது அது நிச்சயமாக சிங்கள அரசினுடைய கைக்கூலிகளாவோ அல்லது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் செயற்படுபவர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காகவே தாயகத்தில் பல இலட்சம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான விடுதலை அமைப்புக்காக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவரை புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் மக்கள் தமக்கு எதிரான ஒரு நபராக கருதவே முடியாது. குறித்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறும் அவரால் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கோரியும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்ற எமது மக்களில் ஒரு கணிசமான தொகுதியினர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றினை அந்த நாட்டின் அரச தலைவருக்கோ, சட்டத்துறை தலைவர்களுக்கோ கையளிப்பதன் மூலம் எமது விடுதலைக்கான செயற்பாட்டாளர் ஒருவரை விடுதலை செய்ய முடியும்.

இலங்கையில் விடுதலைப்போராட்டத்தில் இணைந்து போராடிய போராளிகளைக்கூட புனர்வாழ்வு என்ற பெயரில் மீண்டும் சமூக வாழ்க்கைக்கு சிங்கள அரசு அனுமதித்திருக்கின்ற நிலையில் பிரான்ஸ் நாட்டில் 2007ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் தடுத்துவைத்திருக்கின்ற ஒரு உணர்வாளரை விடுவிப்பதற்கான முயற்சிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சொல்லப்படுகின்ற எவரும் முன்னெடுத்ததாக தெரியவில்லை.

மாற்று உடை வாங்குவதற்கோ, அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கோ வசதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அவர்கள் சிறையில் வாழ்க்கையில் தொலைத்துவருகின்ற அதேவேளை அவருடைய குடும்பமும் அவரை விட்டு அந்நியப்பட்டுச் சென்றிருப்பதாக தெரியவருகின்றது.

நாங்கள் எம்மைச் சூழ இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய வழிமுறைகள் இருந்தும் அவற்றினைத் தவறவிட்டு இன்னொரு கட்டத்திற்கு போவது சாத்தியமானத்தல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்ற எமது மக்கள் ஒவ்வொருவருடைய அர்ப்பணிப்புக்கள் நிறைந்த உணர்வுகளும் உண்மையானவ. வெளிப்படையானவை என்றாலும் கூட எமது மக்களைத் திரட்டி றஞ்சன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு எமது தலைமைச் செயற்பாட்டாளர்கள் பின்நிற்பதனை கைவிடவேண்டும்.

அவரை விடுவிப்பதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தவேண்டும் என்றோ, உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தவேண்டுமென்றோ எவரும் கோரவில்லை.. மக்கள் மத்தியில் கையெழுத்து வேட்டை ஒன்றினை முன்னெடுத்தல் என்ற மிக இலகுவான பணியினைக் கூட முன்னெடுப்பதற்கு தயங்குவது ஏன்? என்பது தான் புரியவில்லை. ஒவ்வொரு தலைமைச் செயற்பாட்டாளர்களும் தமக்கும் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் இன்னொருவர் தான் அவர்களை மீட்பதற்கு முன் வருவார் என்பதை புரிந்து கொண்டால் றஞ்சன் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தலாம்.

பிரான்ஸில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றஞ்சன் தமிழ்லீடர் இணையக்குழுமத்துக்கு வழங்கிய நேர்காணலின் சில ஒலிக்குறிப்புக்கள் வருமாறு:-

உங்கள் கைது தொடர்பில் கூறுங்கள்,

பதில் (ஒலி)

உங்கள் விடுதலை தொடர்பிலான தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில் (ஒலி)

இப்போது உங்கள் விடுதலைக்கு தடையாக இருக்கும் காரணம் என்ன?

பதில் (ஒலி)

உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில்?

பதில் (ஒலி)

நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பு என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் (ஒலி)

தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் -

 

http://tamilleader.com/?p=26771

Edited by கலையழகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.