Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் காசு பறிக்கிறார்கள்???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று சுவிசில் இயங்கும் தேசிய தொலைக்காட்சியில் புலிகள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆhய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் யேகநாதன் பெரியதம்பி என்பவர் பேட்டி குடுக்கிறார் தனது மனைவி சிறீலங்கா போன போது இயக்கம் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக்கொண்டு காசு கேட்;டது என்று. தற்பொழுது வேறு சிலரையும் பேட்டி கண்டார்கள். சுவிசில் அவசர நிதி சேகரிப்பு பற்றி. அவர்களில் சிலர் தங்களிடம் இயக்கம் வற்புறுத்தி பணம் கேட்கிறது என்று.

இது பற்றி சுவிசில் உள்ள விடுதலைப்புலிகளின் பேச்சாளர் (எதோ ஒரு முக்கிய பதவியில இருக்கிறார். வேலையும் இல்லை ஒன்டும் இல்லi. எங்க இருந்து வருமானம் வருதோ தெரியா) சொன்ன கருத்து. ஆம் நாங்கள் காசு சேர்க்கின்றோம். தரமுடியாதவர்களை வங்கியிலோ அல்லது யாரிடமாவதோ கடன் வாங்கி தரும்படி கேட்கிறோம் (அதாவது தாங்களே வற்புறுத்தி பண்ம் சேர்க்கிறார்கள் என்பதை இவர் ஏற்றுக்கொள்கிறார்) அதனை திருப்பியும் கொடுப்போம் என்று சொல்கிறார்.

இப்படிக் குற்றச்சாட்டுகள்..சுவிஸில மட்டுமில்ல..எல்லா இடமும் வருகுது...என்னவோ புலிகளுக்கு இப்ப கெட்டகாலம் போல..! போறவன் வாறான் எல்லாம் புலி..புலி ஆதரவு, தேசியம்..தேசிய ஆதரவென்று சொல்லி..நல்லா ஏமாத்துறாங்கள்..! அதுதான் இந்த நிலை..! எனிப் புலி தேசிய ஆதரவாளர்களையும் சரியா இனங்காண ஒரு கருவி கண்டுபிடிக்கனும் போல..!

புகலிடத்தமிழர்கள் எல்லோரும் பங்களிப்புச் செய்யினம் என்றுமில்லை. பலர் பங்களிப்பா...அப்படி என்றால் என்ன என்று கேட்கினம்..எவ்வளவு காலம் செய்யுறது பங்களிப்பு என்றினம் சிலர்.. ஆனா இத்தனைக்கும் "சண்டை தொடங்கிட்டா என்ர தங்கைச்சியையும் எடுக்கலாம் என்று பாக்கிறன்..இப்ப கொஞ்சம் கஸ்டமா இருக்குது"...இதுதான் ஈழத்தமிழர்கள் பலரின் மனவோட்டம்..!

சும்மா சனத்தைப் பற்றி அபரிமிதமாப் படங்காட்டுறதை விட்டிட்டு..சனத்தைப் பற்றிய சரியான மதிப்பீட்டைச் செய்ய வேண்டிய கட்டாயம் எழுதிருக்குது. இப்படியான சனத்தாலதான் சிங்களவன் நன்மை பெறுகிறான். இவர்கள் ஈழத்தின் சோகத்தைக் காட்டி வாழ்வு தேடிக் கொண்டு..அந்தச் சோகத்தையே சுகமாக்கிக் கொள்பவர்கள்..! இப்படிப் பலர் இருக்கின்றனர்..எம்மத்தியில். இவர்களில் பலர் வெளிப்படையாக கதைக்கும் போது..தேசிய ஆதரவு என்றால் வாயளவில் விண்ணைத் தொட்டிடும். முன்னாள் போராளியோ என்று எண்ணத் தோன்றும்..! ஆனால்...???! எல்லாம் வருவாய்க்கு..சுயநலத்துக்கு என்பது பின்னால் தெரியும்..! இவர்களால் ஈழத்துக்கு என்ன நன்மை...இவர்களும் புகலிடத்தமிழர்கள் தான்..!

இது உண்மையான தேசப்பற்றுள்ள புகலிடத்தமிழர்கள் வெகு சிலரைக் குறிக்கவில்லை..என்பதை கவனித்தில கொள்ளுங்கோ..! :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தொலைக்காட்சி செய்தியை பார்த்வுடன் எனக்கு கோபம் வந்தது தான். ஒரு சிலர் விடும் தவறுகளால் அனைவரையும் அப்படி சொல்வது தவறு என்று. ஆனால் புலிகளின் பேச்சாளரே தாங்கள் கட்டாயப்படுத்தி பணம் சேர்கிறம் என்பது போல் பேட்டியளிக்கும் போது நான் எப்படி அந்த தொலைக்காட்சி நிலையத்தை விமர்சிப்பது. இளையோர் அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவிக்க சொல்லி ஒரு அறிக்கை விட்டிருக்கு. எப்படி கண்டனம் தெரிவிப்பது? என்னவென்று சொல்லி தெரிவிப்பது? ஒரு சில முட்டாள் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் தான் இதற்கு காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுநேரப் பணியாளர்கள் என்று உங்கள் நாட்டில் இருக்கிறதா?? அதாவது சம்பளத்திற்கு வேலை செய்யும் முழு நேர பணியாளர்கள் வேறு எந்ந நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.

நாங்கள் அறிந்தவரை...நாங்கள் இருக்கும் பகுதியில் பலரும் பகுதியாகத்தான் செய்கின்றனர். ஆனால் பல மூத்த பணியாளர்கள் தாங்களாகவே விலகிட்டுப் போகினம்..! கேட்டா..இனியும் இருந்தா மரியாதையை இழந்திடுவம்..இவ்வளவு காலம் செய்ததும் வீணாகிடும் என்று பதில் சொல்லினம்...!

இங்கு இளையோரை தூண்டி விடுறதும்..சில கவுன்சிலர்கள் தான். அவை அடுத்த முறைக்கு கவுன்சிலராகிற கனவோடதான் செய்யினமே தவிர இளையோர் மத்தியில் தாயகப்பற்று வளர வேணும் என்றதுக்காக இல்லை. பல இளையோர் தங்களின் போராட்டக் குறிக்கோள் தெரியாமலே..சொல் பேச்சுப்படி செயற்படுகிறார்கள்..! இது ஒரு குறிக்கோளுடனான செயற்பாடுகளை இளையோர் தாங்களா உணர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்ல எந்த அளவுக்கு உதவும் என்றும் தெரியல்ல. சிலர் தங்கள் பிள்ளைகளைப் பிரபல்யப்படுத்தவும் இவ்வாறான செயற்பாடுகளில் இறக்கிவிடுகின்றனர்..! இதெல்லாம் தேசிய ஆதரவாகத்தான் வெளியில் காட்டப்படுகின்றன. வெகுசிலரே இதய சுத்தியோடு தாயகப்பற்றோடு செயற்படுகின்றனர். எல்லோரும் அப்படிச் செயற்பட்டுவிட்டால்..எந்தத் தகவலும் வெளியில் செல்லாமல் காத்திடலாம்...நடக்குமோ எம்மவர் மத்தியில்..நிச்சயம் இல்லை. உண்மையில் இவ்வாறானவர்கள் தான் இடைநடுவில் தங்கள் நோக்கங்கள் மாறி புலிகளுக்கும் தேசியத்துக்கும் எதிரான கருத்துக்களை விதைப்பவர்களாகின்றனர். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்கள் சுயநலத்துக்காக சிலவற்றை உச்சரிப்போரே அதிகம். உண்மையான பற்றுறுதி என்பது வெகு சிலரே...உண்டு..! :idea:

முழு நேர பணியாளர்கள் மெல்பெர்னில் உண்டு

இங்கு இலண்டனிலும் முழுநேரப் பணியாளர் இருக்கிறதா சொல்லுகினம். :roll:

ஓ...ஓஓ...

இங்கயும் வந்திட்டாங்கள சர்ச்iசைய கிளப்ப...

நானும் பார்த்தன்

அந்த நிகழ்வை

ஆன்hல் என்னால கருத்து சொல்ல முடியல...

ஏன்...??

எனக்கு சத்தியமா அந்த பாசை புரியல...கா...காh..கா...

அவதானி

நீங்களெல்லாம் அறிந்து உங்கள் பொன்னான கருத்துக்களையும் பதிக்க வேண்டுமென்பதற்காக நம்ம வெடிவேலு சா சா வடிவேலு கீழே நான் இணைத்துள்ள பக்கத்தில் மொழிப்பெயர்ப்பைப் தந்துள்ளார். நீங்கள் அங்கு சென்று பார்த்து உங்கள் பொன்னான கருத்தையும் இங்கு பதியுங்கள்.

:arrow: http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.