Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா மீண்டெழுமா? சீனா காப்பாற்றுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா மீண்டெழுமா? சீனா காப்பாற்றுமா? 
[sunday, 2014-02-09 21:20:05]
thinakkural.jpg

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தினக்குரல் பத்திரிகை அந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு பாரிய தடைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


  

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவை நம்பியிருக்க வேண்டி நிலைக்கு சிறிலங்கா இப்போது தள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை சீனாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பது வெளிப்படையான உண்மை என்றும் தினக்குரல் தெரிவித்திருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரமும் வருமாறு,

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் ஒரு கால அவகாசத்தைக் கோரும் தந்திரோபாயத்துடனேயே மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. ஏற்கனவே இரண்டு தடவைகள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை மீண்டும் ஒரு வருட கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இப்போது முற்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மார்ச் மாத கண்டத்தைத் தாண்டிச் சென்றுவிட முடியும் என அரசாங்கம் சிந்தித்துச் செயற்படுகிறது.

இரண்டு தடவை காலக்கெடுவை வழங்கிய சர்வதேசம் மீண்டும் ஒரு தடவை அவ்வாறு செயற்படுமா என்பதற்கான பதிலை அறிவதற்கு மார்ச் இறுதி வரையில் காத்திருக்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவை நம்பியிருக்க வேண்டி நிலைக்கு இலங்கை இப்போது தள்ளப்பட்டுள்ளது.

குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஏன் அஞ்சவேண்டும் என கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கேள்வி எழுப்பியிருப்பது இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயமாகும்.

இறுதிப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும், இவை குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளே மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனைவிட நல்லிணக்கத்துக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதாவது, இது உண்மையில் வெளியேயிருந்து திணிக்கப்பட்ட ஒரு விடயமல்ல. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் படிதான் சர்வதேச சமூகம் கோரியிருந்தது. இது சர்வதேசத்தினால் திணிக்கப்படும் ஒரு விடயமாகக் காட்டிக்கொள்வது அரசாங்கத்தின் பிரச்சார உபாயமாக மட்டுமே இருக்கமுடியும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை போதுமானவை என தமிழ்த் தரப்பினர் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அது குறைந்தபட்சமான ஒன்றாகவே தமிழ்த் தரப்பினரால் பார்க்கப்பட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்தவிடயங்களை அது ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. காரணம் பரிந்துரைகளைக் கொடுத்திருப்பது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு. பரிந்துரையில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயலணிக்குழு ஒன்றும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையிலேயே இந்த செயலணிக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இப்போது சர்வசேத்திலிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக லலித் வீரதுங்கவையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருமளவுக்கு நம்பியிருக்கின்றார். ஜெனீவாவுக்கும் வாஷிங்டனுக்கு முதலில் அனுப்பப்பட்டவர் அவர்தான். அங்குள்ள நிலைமைகளை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான விஜயங்களாகவே அவை அமைந்திருந்தன.

கடந்த இரண்டு வருடங்களிலும் இலங்கையைப் பாதுகாப்பதில் பெரும் பங்கை வகித்தது இந்தியா. பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதன் காரத்தைக் குறைப்பதில் இந்தியா திரைமறைவில் பணியாற்றியது. இப்போது அவ்வாறு செயற்படும் நிலையில் இந்தியா இல்லை. இதனை புதுடில்லியே கொழும்புக்குத் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. இந்தியப்பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த வருடங்களைப் போல இந்த வருடமும் தம்மால் செயற்பட முடியாதிருப்பதை கொழும்புக்கு விளக்கியிருக்கின்றது டில்லி. இலங்கைக்கு உதவுவது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது டில்லிக்குத் தெரியும். அத்துடன், தம்மிடம் வருவதைவிட வாஷிங்டனுக்குச் செல்வதே பயனுள்ளதாக இருக்கும் எனவும் கொழும்புக்கு டில்லி ஆலோசனை வழங்கியிருந்தது.

இந்த ஆலோசனையின் பின்னர்தான் லலித் வீரதுங்க ஜெனீவாவுக்கும், அமெரிக்காவுக்கும் பறந்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களைக் கொண்ட பட்டியல் ஒன்றுடன் சென்ற அவர், ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்குக் கால அவகாசத்தைக் கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து கசிந்திருக்கும் தகவல்களின் படி அவரது அந்த விஜயம் எதிர்பார்த்த பலனைக்கொடுக்கவில்லை.

தமது நிலைப்பாட்டில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உறுதியாக உள்ளன. இந்தப் பின்னணியிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அடுத்த வாரம் சீனா விரையவுள்ளார். இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா கொண்டிருந்தாலும், ஜெனீவாவில் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணையை அதனால் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பது உண்மை.

பிரேரணை ஒன்று அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ளது என்பது குறித்து கொழும்புக்கு உத்தியோகபூர்வமாகவே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் இனி வெற்றிபெறப்போவதில்லை. இப்போது இரண்டு விடயங்களில்தான் கொழும்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஒன்று: கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் காரத்தைக் குறைத்தல்.

இரண்டு: வாக்கெடுப்பில் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவைத் தேடிக்கொள்ளல்.

கடந்த இரண்டு வருடங்களில் காரத்தைக் குறைக்கும் விடயத்தை இந்தியா செய்தது. அமெரிக்காவுடன் இந்தியாவுக்குள்ள நல்லுறவினால் இதனை இந்தியாவினால் செய்ய முடிந்தது. இம்முறை ஜப்பானை இதற்காக இலங்கை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், ஜப்பானினால் இதனைச் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் இலங்கைக்குள்ள அடுத்த தெரிவு பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதவைத் தேடுதல். அவ்வாறான ஒரு முயற்சியாகத்தான் அமைச்சர் பீரிஸ் சீனாவுக்கு விரையவுள்ளார்.

பிரச்சினை இன்று சர்வதேசத்திலிருந்து உருவானதல்ல. சர்வதேசம் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றது எனக்காட்டிக்கொண்டு தேசப்பற்றாளர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியின் சுதந்திரதின உரையிலும் இதனைக் காணமுடிந்தது. ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளிநாட்டிலிருந்து வந்ததல்ல. அது ஒரு உள்நாட்டுப் பொறிமுறை. இரத்தத்தைச் சிந்திப் பெற்றுக்கொண்ட போர் வெற்றியைக் கேள்விக்குறியாக்க சர்வதேசம் முற்படுவதாக அரச தரப்பினர் பாரிய பிரச்சாரம் ஒன்றை இன்று முன்னெடுக்கின்றார்கள். போரின்போது இடம்பெற்ற அத்துமீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் போரின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கும் விடயங்களா? அப்படியாயின் போரின் வெற்றியின் மூலம் அரசாங்கம் அடையவிரும்பியது என்ன என்ற கேள்வி எழுகின்றது.

போரில் அத்துமீறல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக்கூறும் அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஏன் தயங்கவேண்டும் என கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கேள்வி எழுப்பியிருப்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

 

நன்றி: தினக்குரல்

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifArticle.php?newsID=103307&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.