Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸ்டர் கழுகு: தி.மு.க. கூட்டணி.. வேட்பாளர்கள் யார்.. யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 

p42.jpg

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பட்டியலோடு வந்தார் கழுகார்! 

''தி.மு.க. வட்டாரம் தன்னுடைய தேர்தல் முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டது. 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு முடிந்ததும், வேட்பாளர் நேர்காணல் தொடங்க ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். தி.மு.க-வை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், அதற்கு இதுநாள் வரை கருணாநிதியும் ஸ்டாலினும் பிடிகொடுக்கவில்லை. தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தைகளையும் தற்காலிகமாக தி.மு.க. நிறுத்தி வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் பேசப் போன தொழிலதிபர் ஒருவரிடம், 'என்னுடைய இலக்கு 2016-தான். இப்போது தி.மு.க-வை ஆதரித்துவிட்டால், அப்போது தி.மு.க-வை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாது’ என்று வெளிப்படையாகவே விஜயகாந்த் சொல்லிவிட்டாராம். இந்த நிலையில் சேர்ந்திருக்கும் கட்சிகளோடு மட்டும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவெடுத்துவிட்டதாம் தி.மு.க.!''

''தொகுதிகளின் எண்ணிக்கை ஏதாவது முடிவாகி உள்ளதா?''

''பல கட்சிகள் சேர்ந்திருந்தாலும்... விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்குத்தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் சூழ்நிலை இருக்கிறதாம். ஒவ்வொரு கட்சியாகச் சொல்கிறேன்... கேளும்!

விடுதலைச் சிறுத்தைகள் மூன்று தொகுதிகளைக் கேட்கிறது. சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகியவை அவை. சிதம்பரத்தில் திருமாவளவன் நிற்பார். கட்சியின் பொதுச்செயலாளர்கள் என்ற அடிப்படையில் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் ஆகியோருக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று நினைக்கிறார். பொருளாளர் முகமது யூசுப்புக்கு ஒரு தொகுதியை வாங்க நினைக்கிறாராம் திருமா. இவர் இஸ்லாமிய சமூகத்தவர் என்பதால், பொதுத் தொகுதி கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, தென்காசியை ஒதுக்க நினைக்கிறது தி.மு.க. அப்படி ஒதுக்கீடு செய்தால், கிருஷ்ணசாமியின் மகள் சங்கீதா அங்கு போட்டியிடலாம்.

p42a.jpg

p45c.jpg

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி, ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கக் கேட்டுள்ளது. அநேகமாக திருச்சியில் அந்தக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் நிற்கலாம். ஆனால், திருச்சியை நேரு விட்டுக்கொடுப்பாரா எனத் தெரியவில்லை. விட்டுக்கொடுக்கவில்லை என்றால், தி.மு.க. சார்பில் புதுகை அப்துல்லா என்பவர் போட்டியிடலாம். மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, ராமநாதபுரம், வேலூர் ஆகிய மூன்று தொகுதிகளை, தங்களுக்கு சாதகமானவை என்று கூறியுள்ளது. இவர்களுக்கு ராமநாதபுரம் கொடுத்தால், ஹைதர் அலி நிற்பார். மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்குக் கடுமையான போட்டி இருக்கிறது. எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது கடைசி நேரம் வரைக்கும் குழப்பமாக இருக்கும்!''

''அப்படிப் பார்த்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க. எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்யப்போகிறது?''

''விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டும், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி எனவும் ஒதுக்கத் திட்டமாம். ஐந்து தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குத் தரப்பட்டால் மீதம் 35 தொகுதிகளில் தி.மு.க. களம் காணும் என்பதே நிலைமை!'' என்று சொல்லிவிட்டு பட்டியலை நம்மிடம் கொடுத்தார் (பட்டியல் தனியாக வெளியிடப்பட்டுள்ளது).

பட்டியலைப் பார்த்துவிட்டு கழுகாரைப் பார்த்தோம்!

''சிட்டிங் எம்.பி-க்களும் இருக்கிறார்கள்; புதிய முகங்களும் இருக்கின்றன; பணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்; அ.தி.மு.க-வில் இருந்து வந்து இதுவரை பதவி கிடைக்காதவர்களும் இருக்கிறார்கள்; வாரிசுகளும் இருக்கின்றனவே!'' என்றோம்.

''ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு, மூன்று வேட்பாளர்களைத் தேர்வுசெய்து வைத்துள்ளார்களாம் கருணாநிதியும் ஸ்டாலினும்! தென் சென்னை தொகுதி குஷ்புவுக்கு உறுதியாகிவிட்டது என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவரிடம்தான் அந்தத் தொகுதிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்யச் சொல்லி இருக்கிறாராம் கருணாநிதி. மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜனை நிறுத்த தலைமை நினைக்கிறது. ஆனால், தியாகராஜனுக்கு அதில் சம்மதம் இல்லையாம். அதேபோல், தமிழச்சி தங்கபாண்டியனை ராமநாதபுரத்தில் நிறுத்த கருணாநிதி நினைத்தார். ஆனால் அவர், 'தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என்று சொல்லிவிட்டாராம். அதனை தலைமையிடமும் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். துரைமுருகன், திண்டுக்கல் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, எ.வ.வேலு, பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் தங்களது வாரிசுகளை களம் இறக்கத் தயாராகி வருகிறார்கள். மாநாடு முடிந்ததும் தி.மு.க. களைகட்டும்!''

''பி.ஜே.பி. கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்த நிலைமையில் உள்ளது?''

''தே..மு.தி.க-வும் பா.ம.க-வும் சம்மதம் தெரிவிக்காமல் ரொம்பவே இழுத்தடிப்பதாக பி.ஜே.பி. நினைக்கிறது. விஜயகாந்த்துக்கு பி.ஜே.பி. கெடுவிதித்துவிட்டதை கடந்த இதழில் நான் சொல்லியிருந்தேன். இது விஜயகாந்த்துக்கு குழப்பம் கொடுத்துவிட்டது. அதனால்தான், வேட்பாளர் தேர்வில் இருந்தவர் சம்பந்தம் இல்லாமல், 'எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்?’ என்ற கேள்வியையும் கேட்டு வைத்தார். அவர்களில் பலரும் 'பி.ஜே.பி. கூட்டணிதான் வேண்டும்’ என்றார்களாம். அது விஜயகாந்த்துக்கு இன்னும் குழப்பம் கொடுத் துள்ளது. 'விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசலாம்’ என்று சொல்லிவிட்டாராம் ராமதாஸ்.''

'' 'யாரோடும் கூட்டணி இல்லை, யாருடனும் ராமதாஸ் பேசவில்லை’ என்று ஜி.கே.மணி பேட்டி அளித்தாரே?''

''10-ம் தேதி காலையில் மாதிரி நிதிநிலை அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். அப்போது இதுபற்றி நிருபர்கள் கேட்டார்கள். வயிறுகுலுங்கச் சிரித்த ராமதாஸ், 'எது நடந்தாலும் உங்களுக்குத் தெரிந்துதான் நடக்கும்’ என்றார். மறுபடியும் கேட்டார்கள். 'கத்தரிக்காய் முற்றினால், கடைத்தெருவுக்கு வரும்’ என்று சொல்லி மீண்டும் சிரித்தார். 'நீங்கள் கத்தரி போட்டுள்ளீர்களா?’ என்றார்கள் நிருபர்கள். 'எல்லாக் கட்சிகளும்தான் கத்தரி போட்டுள்ளது’ என்றார். கடைசியில், 'தி.மு.க., அ.தி.மு.க-வை ஒழிப்பதுதான் எங்களது நோக்கம்’ என்று சொல்லி பிரஸ்மீட்டை முடித்தார். ஜி.கே.மணி சொன்னதை ராமதாஸ் சொல்லவில்லையே... பி.ஜே.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை இல்லை என்றால், என்னமாய் கோபப்பட்டு இருப்பார் ராமதாஸ்!''

''வைகோ திடீர் கோபம் ஏன்?''

p45aa.jpg''எத்தனைத் தொகுதிகள் என்று தெரியாமல், மோடி மேடையில் ஏற வேண்டாம் என்று நினைத்தாராம் வைகோ. ஆனால், அவரை எப்படியாவது கூட்டத்துக்கு அழைத்துச் செல்ல தமிழக பி.ஜே.பி. நினைத்தது. அவர் சம்மதிக்கவில்லை. கூட்டத்தை வாழ்த்தி அறிக்கை விட்டார். மோடியை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார். வைகோ முன்னதாகச் சென்றுவிட்டதால், மோடி பேச்சை டி.வி-யில் லைவ்வாக பார்த்தாராம். 'ஹிந்தியில் நீங்கள் பேசினாலும், உணர்ச்சிகரமாக இருந்தது’ என்று இவர் சொல்ல, 'சிறந்த பேச்சாளரான நீங்கள் சொல்கிறீர்களே!’ என்று அவர் சொல்லியிருக்கிறார். இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர். 'மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தமிழகக் கட்சி ஒன்று சம்பாதித்தது பற்றி நீங்கள் பேசிய விஷயம் சரியானது’ என்று வைகோ சொல்ல... மோடி சிரித்தாராம். 'தி.மு.க-வுடன் பி.ஜே.பி. கூட்டணி சேராது என்று இதன்மூலம் தெரியவந்ததாகச் சொல்கிறார்கள் ம.தி.மு.க-வினர்!''

''ஜெயலலிதா, பசும்பொன் போனது பற்றி ஏதாவது செய்தி உண்டா?''

''2010-ல் பசும்பொன் வந்த ஜெயலலிதாவிடம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர​சுவாமி, 'தேவர் சிலைக்கு தங்கக் கவசம் தேவை’ என்று கோரிக்கை வைத்தார். அதன் பிறகு நடந்த குருபூஜைகளுக்கு அவர் வரவில்லை. இப்போதுதான் தங்கக் கவசம் தயார் ஆனது. தேர்தல் நெருங்கிவருவதால் அதற்கு முன் இதனை செலுத்த வேண்டும் என்று ஜெயலலிதா திட்டமிட்டாராம். அதன்படி அவசர அவசரமாக இது தயார் ஆனது.

9-ம் தேதி ஜெயலலிதா வருகிறார் என்றதும், பக்கத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார். தங்கக் கவசத்துக்கு புனித நீர் தெளித்தார் ஜெயலலிதா. ஒவ்வொரு பாகமாக ஆதீனத்திடம் எடுத்துக் கொடுத்தார். அவற்றை நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு ஆதீனம் அணிவித்தார். தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட சிலைக்கு மலர் தூவி வணங்கிய முதல்வருக்கு, 'சிங்க முகம்’ கொண்ட செங்கோலை ஆதீனம் வழங்கினார். பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளைக் குறிப்பிட்டார். 'ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை இவருடைய முக்கியக் கொள்கைகளாக இருந்தன. இந்தக் கொள்கைகளைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன், தேவர் திருமகனாரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்துவிட்டது. அந்த லட்சியத்தை அடைய நீங்களும் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்’ என பேசி, மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக தான் இருக்கப்போவதை மறைமுகமாக உணர்த்திச் சென்றார். இதனை உன்னிப்பாகக் கவனியும். 'காங்கிரஸ் எதிர்ப்பு’ என்றுதான் சொன்னாரே தவிர, 'மதவாத எதிர்ப்பு’ என்று சொல்லவில்லை. 'மூன்றாவது அணியில் அங்கம் வகித்திருக்கும் அவர், அது சம்பந்தமாகப் பேசவில்லையே’ என்று சிலர் கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள்!'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

''மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் சித்தப்பா சந்திரசேகர மூப்பனார் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி. கபிஸ்தலம் அருகேயுள்ள சுந்தரபெருமாள் கோயில் பண்ணை வீட்டின் எதிரே, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாகப் பந்தல் அமைக்கப்பெற்று திருமணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்ட மு.க.ஸ¢டாலினை வரவேற்ற ஜி.கே.வாசன், ஸ்டாலினிடம் நீண்ட நேரம் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி நிலவரம் குறித்தும் சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்கள். இதில் அரசியல்ரீதியான முக்கியத்துவம் உண்டா என்பது அடுத்த வாரம் தெரியும்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

அட்டைப் படம்:  சொ.பாலசுப்ரமணியன்

 ''என் புத்தகத்துக்கு வரவேற்பு இருக்கிறதா?''

p45.jpg

எழுத்தாளர் சந்திரமௌலி, 'நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதற்கான வெளியீட்டு விழாவுக்கு தேதி கேட்டாராம் 'அல்லையன்ஸ்’ சீனிவாசன். 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கிறேன். தேர்தல் முடியும் வரை ஓய்வே இல்லை’ என்றாராம் மோடி. கடந்த 8-ம் தேதி சென்னை வந்த மோடியை இவர்கள் சென்னை விமானநிலையத்தில் சந்தித்துப் புத்தகத்தைக் கொடுத்துள்ளார்கள். 'என்னைப் பற்றிய புத்தகத்துக்கு வரவேற்பு இருக்கிறதா?’ என்று சிரித்தபடி கேட்டாராம் மோடி.  

 இணையதள ஆதரவில் அ.தி.மு.க.!

இணையதளம் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்து​பவர்களை மையமாக வைத்து நாடாளுமன்றத் தேர்தல் பற்றி சர்வே ஒன்றை எடுத்திருக்கிறது தேர்தல் தொடர்பான பகுப்பாய்வுகளை நடத்தும் ஒரு தனியார் நிறுவனம். 17 தொகுதிகளில் 3,000 பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் அ.தி.மு.க-வுக்குதான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பி.ஜே.பி. இருக்கிறது. இணையதளத்தில் இயங்கும் வாக்காளர்களை அரசியல் கட்சிகள் குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றன.

 கனிமொழியின் 'பகை' பேச்சு!

p45b.jpgமீண்டும் மேடைகளில் தோன்ற ஆரம்பித்துவிட்டார் கனிமொழி. கடந்த 2-ம் தேதி மதியம் திடீரென மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனிமொழி, ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு வெளியில் வர ஆரம்பித்துவிட்டார்.

தி.மு.க-வின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் நெல்லை மாவட்ட துணை அமைப்பாளரான விஜய்பிரவீன் திருமணத்தில் 9-ம் தேதி கலந்துகொள்வதாக தேதி கொடுத்திருந்தார். கனிமொழி வருவாரா என்ற தயக்கம் அந்தக் குடும்பத்துக்கு இருந்தது. வாக்குறுதி கொடுத்தது மாதிரியே வந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த கனிமொழி அங்கிருந்து திருமண மண்டபத்துக்கு வந்தார்.

''தி.மு.க மீது பரம்பரையாகவும் பாரம்பரியமாகவும் சிலருக்குப் பகை இருந்து வருகிறது. திராவிடத்தின் மீது கொண்ட பகையால் அண்ணா நினைவு தினத்தை ஒரு பத்திரிகையில், 'அண்ணாதுரைக்கு திவசம்’ என்று எழுதி இருந்தார்கள். அந்த அளவுக்கு இந்த இயக்கத்தின் மீதும் கொள்கைகள் மீதும் தீராத பகை நீடிக்கிறது. இந்தப் பகையுடன் மோதும் பொறுப்பு இளைஞர்களின் கையில் இருக்கிறது'' என்று கொள்கைப்பூர்வமாக மட்டும் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். மறுநாள் டெல்லி சென்றுவிட்டார் கனிமொழி!

http://www.vikatan.com/election/index.php?aid=5197

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.