Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது பத்திரிக்கையாளர் சந்திப்பு ! 

[Thursday, 2014-02-13 20:50:38]
TGTE-PM-200-seitrhycom.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெறுகின்றது. நியூ யோர்க்கில் இருந்து இணையத் தொழில்நுட்ப வழியூடாக (ஸ்கைப்) வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கும் இப்பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் கூடத்தில் 14-02-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இடம்பெறுகின்றதென, நா.தமிழீழ அராசங்கத்தின் ஊடகத்துறை அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு ஆகியனவற்றினை மையமாக கொண்டு, இந்திய கட்சிகளையும் - இந்திய அரசினையும் கோரும் தீர்மானம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இத் தீர்மானம் தொடர்பிலும் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தினை மையப்படுத்தி சமகால அரசியல் நிலவரங்கள் பற்றியும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்துரை இருப்பதோடு, ஊடகத்துறையினரின் கேள்விகளுக்கும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்கள் வழங்க இருக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தின் சார்பில் இராஜக்குமார் பழனிச்சாமி அவர்கள், இப்பத்திரிகையாளர் சந்திப்பான கள ஒருங்கிணைப்பினை மேற்கொண்டுள்ளார்.

நாதம் ஊடகசேவை

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103563&category=TamilNews&language=tamil

நாடு கடந்த ஸ்கைப் அரசாங்கம்

 

இப்படியே ஸ்கைப்பால போனால் அங்கால தெற்குப் பக்கம் தேங்காய்த் தோட்டமும்

வடக்கு பக்கம் தமிழீழமும் சாத்தியம் அண்ணை.

 

 

நாளை 14/02/2014 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

இடம் : சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு ஆகியனவற்றினை மையமாக கொண்டு இந்திய கட்சிகளையும் - இந்திய அரசினையும் கோரும் தீர்மானம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்டள்ளது.

இத்தீர்மானத்தினை தமிழகம் மற்றும் இந்திய ஊடகத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளுர் நேரம் காலை 11.30 மணிக்கு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் .

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் அவர்களும் ஸ்கைப் மூலமாக பங்கெடுப்பதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

பத்திரிக்கை நண்பர்கள் , தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். உருத்திரகுமாரன் அவர்களிடம் நேரடியாக கேள்விகளையும் கேட்கலாம்.

நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சார்பாக இராஜ்குமார் பழனிசாமி, 9566224027.

 

இராஜ்குமார் பழனிசாமி

(facebook: https://www.facebook.com/rajkumar.palaniswamy.5/posts/805066472841538)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.