Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் விவகாரத்தில் அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு : - இந்திய அரசுக்கும் கட்சிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஈழத்தமிழர் விவகாரத்தில் அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு : - இந்திய அரசுக்கும் கட்சிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ! 
[Tuesday, 2014-02-18 21:49:10]
Transitional_150news.jpg

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் இந்திய அரசுக்கும் இந்தியக் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்து, தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு ஆகிய விடயங்களை முன்னிறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தில், வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் , பன்னாட்டு சுயாதீன விசாரணைக் குழுவொன்றினை நிறுவுவதற்கான பிரேரணையை இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ முன்மொழிய வேண்டுமெனக் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

  

இதுவேளை, இலங்கைத்தீவில் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் ஈழத்தமிழர்கள் தீர்மானிப்பது குறித்து, அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் வாக்கெடுப்பு நடாத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்கும் வகையில்,ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சனையை அனைத்துலக சமூகத்தினதும், ஐநா மனித உரிமைப் பேரவையினதும் ஆதரவோடு, தீர்த்துவைப்பதற்கான தமது விருப்பினையும், பற்றுறுதியையும் தத்தம் தேர்தல் தளத்திலும் பிரகடனங்களிலும் முன்னுரிமை கொடுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் முழுவடிவம் :

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கும், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையினைப் பரிகாரம் கோரும் வகையில் (remedial fashion) முன்னெடுக்கும் போராட்டத்துக்குமான, இந்திய அரசியல் கட்சிகளின் ஆதரவினைத் தீவிரப்படுத்த வேண்டியும், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதற்கான உறுதியினை உள்ளடக்க கோரியும் முன்வைக்கும் தீர்மானம்.

ஈழத்தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினைக் காணும் இலட்சியத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு கொண்டுள்ள வழிவகைக்கு அமையவும்,

அனைத்துலக மனித உரிமைப் பிரகடன விதிகள், ஜெனீவாப் பிரகடனம், இன அழிப்பு மாநாட்டு விதிகள், ஏனைய அனைத்துலக உடன்படிக்கைகள், சட்டங்கள் என்பவற்றுக்கு அமைய, ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துலக நாடுகள் இயங்கத் தவறியமையால் ஏற்பட்ட தேக்க நிலையைக் கவனத்தில் கொண்டும்,

தண்டனையிலிருந்து விலக்களிக்கும் இலங்கைத்தீவின் இன்றைய நடத்தை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கும் அதன் உறுதிப்பாட்டுக்கும் ஆபத்தாக விளங்குவதைக் கவனத்திலெடுத்தும்,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் செயலாளர் நாயகம் அவர்கள், 31-3-2011ம் தேதியில் நியமித்த நிபுணர் குழுவினரது சிறிலங்காவுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறை, முன்னேற்றம் காணாதது குறித்து பெரிதும் கவலை கொள்வதாலும்,

மே 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த நான்கு ஆண்டுகாலப் பகுதியில், தமிழீழ மக்களின் இனநெருக்கடி தொடர்பாக, ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் மற்றும் அனைத்துலக மன்றுகள் ஊடான முன்னெடுப்புக்கள் யாவற்றினதும் மந்தகதிநிலை தொடர்பில் பெருங்கவலை கொள்வதாலும்,

நீண்டகாலமாக மிக ஆழமான கலாச்சார, அறிவுசார் நட்புறவைப் இந்திய மக்களோடு, ஈழத்தமிழ் மக்கள் பேணிவந்தவர்கள் என்பதனைக் கருத்தில் கொண்டும்,

இந்தியாவின்; தார்மீக பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு, இந்துமா கடலில் அதன் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டும், மேற்குறித்த அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப, தமிழரின் தேசியப் பிரச்சனை தொடர்பில் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தார்மீகக் கடப்பாடு இந்தியாவுக்;கு உண்டென்பதனை வலியுறுத்தியும்,

;பரிகாரம் பெறும் நீதிக்கானது என வங்காள தேசத்தின் சுதந்திரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் வகிபாக நிலைப்பாடு பற்றிக் கூறியதைக் கருத்திலெடுத்தும்,

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரில், மீறப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு சுயாதீன விசாரணை கோரி நிற்கும் இலங்கையில் வடமாகாண சபைத் தீர்மானத்தைக் கவனத்திலெடுத்தும்,

தமிழ் மக்களுக்கென சுதந்திரமும் - இறைமையும் - மதச்சார்புமற்ற தனிநாடமைக்க வேண்டுமெனத், 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, நடந்தேறிய தேர்தலின் போது, தாம் தெரிவுசெய்த பிரதிநிதிகளுக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினைக் கவனத்தில் கொண்டும்,

1983ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், தனிநாடுபற்றி அமைதியாகப் பேசுவதைக் குற்றச்செயலாகக் கருதுவதனால், இலங்கைத்தீவின் உள்ளே தமிழ் மக்களிற்கு தங்களுடைய அரசியல் அபிலாசைகளை பூரணமாக வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி மறுக்கப்பட்டமை மட்டுமல்லாது, அவர்களது பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்டதையும் கவனத்தில் எடுத்தும்,

120,000 மேற்பட்ட மக்களது பங்குபற்றலோடு, 2013ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம், ஈழத்தமிழ் மக்கள் தமது மரபுவழிவந்த தன்னாட்சி உரிமையைப் பரிகாரம் தேடும் வகையில் பிரயோகிக்கும் உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியதைக் கவனத்தில் எடுத்தும்,

2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் நாள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின்போது, இந்தியாவின் அனைத்து அரசியற்கட்சிகளையும், பின்வரும் கோரிக்கைகளை ஏற்றுச் செயலாற்றுமாறு அழைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(அ) சிறிலங்காவினது இனஅழிப்புக் குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கான, பன்னாட்டு சுயாதீன விசாரணைக் குழுவொன்றினை நிறுவுவதற்கான பிரேரணையை, வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ முன்மொழிய வேண்டுமெனவும்,

அத்துடன்,

(ஆ) இலங்கைத்தீவில் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் ஈழத்தமிழர்கள் தீர்மானிப்பது குறித்து, அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் வாக்கெடுப்பு நடாத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்கும் வகையில்,

ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சனையை அனைத்துலக சமூகத்தினதும், ஐநா மனித உரிமைப் பேரவையினதும் ஆதரவோடு, தீர்த்துவைப்பதற்கான தமது விருப்பினையும், பற்றுறுதியையும் தத்தம் தேர்தல் தளத்திலும் பிரகடனங்களிலும் முன்னுரிமை கொடுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்படி தீர்மானம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் நாளன்று இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின்போது நிறைவேற்றப்பட்டு ,அவைத்தலைவர் அவர்களினால் இத்தால் அத்தாட்சிப் படுத்தப்படுகின்றது.

இவ்வாறு அத்தீர்மானம் அமைந்துள்ளது.

நாதம் ஊடகசேவை

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103938&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.