Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய உலகில் தமிழினம் பின் தங்கி இருக்கிறதே...ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலம்பு நீர்படைக்காதை (159 - 179)

 

 

இளங்கோ வேந்தர்

 

இறந்ததற் பின்னர்

 

வளங்கெழு நன்னாட்டு

 

மன்னவன் கொற்றமொடு

 

செங்கோல்தன்மை தீதின்றோ! என

 

எங்கோ வேந்தே! வாழ்க!

 

என்றேத்தி மங்கல மறையோன்

 

மாடலன் உரைக்கும்

 

வெயில் வினங்கு மணிப்பூண்

 

விண்ணவர் வியப்ப

 

எயில் மூன்றெறிந்த இகல்வேல் கொற்றமும்

 

குறுநடைப் புறவின்

 

நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின்

 

இடும்பை நீங்க அரிந்துடம்பீட்டோன்

 

அறந்தருகோலும்

 

திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?

 

திதோ இல்லை செல்லற்காலையும்

 

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு

 

என்று அருமறை முதல்வன்

 

சொல்லக் கேட்டே

 

பெருமகன் மறையோற் பேணி

 

ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை

 

ஐயைந்து இரட்டி தோடர் போந்தை

 

வேலோன் தன் நிறை

 

மாடல மறையோன் கொள்க! என்றளித்தாங்கு

 


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ காவேரி பேஷா ஓடறதோன்னோ! நன்னா இருப்பேள் போங்கோன்னுட்டார்.

@ மன்னர் பெருமகன் ஏமாந்தான். புத்தாண்டு உருவாக்கம் தொடர்பான வல்லுநர் மரபறிவு முற்றாகப் புதைக்கப்பட்டது.

@ முக்காலமும் உணர்ந்த இளங்கோவடிகள் புரியும்படி எழுதியிருக்கிறார். இதுவரை புரிந்து கொள்ளத் தவறியது தமிழர் குற்றம். எங்கிருந்து எழும் கொற்றம் ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா

 

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீதி தவறாத அரசு நடத்தி கோலோச்சிவந்தார்கள். குமரிக்கடலில் (இன்றைய இந்தியப் பெருங்கடல்) சங்கம் அமைத்து தமிழ் வளர்ச்சியையும் மேற்கொண்டிருந்தார்கள். மூவேந்தர்களும் கணிய, வள்ளுவர்களால் விண்ணியல் கணிப்பு செய்து இயற்கையை ஏறக்குறைய கற்றறிந்தார்கள். அதில் அரச கமுக்கமும் அடக்கம். அதில் ஒன்றுதான் புத்தாண்டு உருவாக்கம். இது வல்லுநர்களால் தெளிவாக முன் மொழியப்பட்டது. அரசனுக்கும் அது தெரியும்.

 

ஆழிப்பேரலை போன்ற அழிவுகள் இவ்வல்லுநர்களால் முன் கூட்டியே முன் மொழியப்பட்டது. அரசனும் தனது கணிப்பைக் கொண்டு கணியர்களின் கூற்றைச் செவ்வனே தெரிந்து கொண்டபின் தான் வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்பாடுகள் தொடர்ந்தன. அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது.

 

பின் வேதியர்கள் வந்து தம் சூழ்ச்சியினால் அரசர்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அரசன் தன் அரசியல் கமுக்கம் தெரியாதவனாக்கப்பட்டான். வேதியர்கள் சொல்வதே வேதவாக்கானது. வள்ளுவ, கணியர்களின் கூற்று வேதியர்களால் நிராகரிக்கப்பட்டது மன்னனும் அறியாமல் வலையில் வீழ்ந்தான். தமிழ் அரசர்களும் தம் அறிவை இழந்தனர். தமிழ் மக்களும் தம் அறிவுத்திறமையை இழந்தனர். இதுதான் தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்.

 

இன்று தமிழர்கள் இவ்வேதியர்களை ஒதுக்கி நம் இழந்த அறிவுச் செல்வங்களை புதுப்பித்து முன்னோர்களின் அறிவு வழியில் தமிழர்கள் தொடர்ந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வு வளம் பெறும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் தலைநிமிர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்வதென்பது மிகவும் கடினமான விடையம். இருந்தும் முன்னேறவேண்டுமாகவிருந்தால், அவர்கள் கடைப்பிடிக்கும் சில்லறைத்தனங்களையெல்லாம் கைவிடல்வேண்டும்.

 

1. தமிழர்களது வரலாறு, கலாச்சாரம், தமிழ்மொழியின் சிறப்புமிகுதன்மை இவைதெரியாத படைப்பளிகளால் நாம் வாழும் தேசங்களெங்கும் கொண்டுவந்து குவிக்கப்படும் படைப்புக்களை விட்டெறிதல் வேண்டும்.

 

2. வீடு கட்டுகிறேன் அல்லது வாங்கிறேன் என்றுகூறி புலம்பெயர்தேசங்களில் பெரும்முதலீடுகளில் மான்சன்கள் வாங்குவதைத் தவிர்த்தல்வேண்டும்.

 

3. இந்தியாவின் குயராத் கடைத்தெருக்களில் விற்கப்படும் ஜிகினா உடைகளை தங்களது விருந்து நிகழ்சிகளில் கட்டுவதை நிறுத்தி, தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய பருத்தி உடைகளை அணிவதற்குக் பழக்கப்படுத்திக்கொள்ளல்வேண்டும்.

 

4. தவிர, விருந்துபசாரங்களிலோ அன்றேல் எமது பண்பாடுசார்ந்த நிகழ்சிகளிலோ கலந்துகொள்ளக்கூடியவர்கள் அணிந்துகொள்ளும், உடைபற்றிய அறிவுறுத்தல் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

 

5. என்னவிதப்பட்டும் வருடமொருமுறை தாயகம் சென்று எமது பிள்ளைகளுக்கு தாயகம்பற்றிய அறிவினைச் சிறுவயதிலிருந்தே புகட்டுதல்வேண்டும்.

 

6. காலப்போக்கில் புலம்பெயர்தேசங்களது கோடைகால விடுமுறைக்கு ஏற்ப தாயகத்தில் தமிழைச் சரியான முறையில் எங்கள் சூழலிலேயே கற்றுணர்ந்துகொள்ள கல்விநிறுவனங்களை உருவாக்குதல்வேண்டும்.

 

7.தாயகத்திற்கும் புலம்பெயர்தேசத்துக்கும்மிடையில் திட்டமிடுதலுடன்கூடிய பொருளாதார ஒத்துளைப்பைப் பேணுதல்வேண்டும்.

 

8. எமது மண்ணையும் மண்ணின் வளங்களையும் காக்கும்வண்ணம் எவ்வகையான இடையூறுகளுக்கு மத்தியிலும் சுற்றுச்சூழல்பற்ரிய விழிப்புணர்வை தாயகத்து மக்கள் மத்தியில் கொண்டுவரும் திட்டமிடுதல்களை மேற்கொண்டு அதனைச் செயற்படுத்தல்வேண்டும்.

 

9. எமது மண்ணின் மாண்புகெடாது எதிர்காலத்திலும் கலாச்சாரம் மற்ரும் பண்பாட்டு விழுமியங்களை பாதிக்காதௌ நவீன தொழில்நுட்பங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தல்வேண்டும்.

 

10. இயற்கை வேளான்மைமூலம் விளைபொருட்களை உற்பத்திசெய்து புலம்பெயர்நாடுகள் எங்கும் இருக்கும் சந்தைவாய்ப்பை தாயக மக்களுக்குச் சாதகமாக ஏற்படுத்திக்கொடுத்தல்வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

 

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீதி தவறாத அரசு நடத்தி கோலோச்சிவந்தார்கள். குமரிக்கடலில் (இன்றைய இந்தியப் பெருங்கடல்) சங்கம் அமைத்து தமிழ் வளர்ச்சியையும் மேற்கொண்டிருந்தார்கள். மூவேந்தர்களும் கணிய, வள்ளுவர்களால் விண்ணியல் கணிப்பு செய்து இயற்கையை ஏறக்குறைய கற்றறிந்தார்கள். அதில் அரச கமுக்கமும் அடக்கம். அதில் ஒன்றுதான் புத்தாண்டு உருவாக்கம். இது வல்லுநர்களால் தெளிவாக முன் மொழியப்பட்டது. அரசனுக்கும் அது தெரியும்.

 

ஆழிப்பேரலை போன்ற அழிவுகள் இவ்வல்லுநர்களால் முன் கூட்டியே முன் மொழியப்பட்டது. அரசனும் தனது கணிப்பைக் கொண்டு கணியர்களின் கூற்றைச் செவ்வனே தெரிந்து கொண்டபின் தான் வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்பாடுகள் தொடர்ந்தன. அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது.

 

பின் வேதியர்கள் வந்து தம் சூழ்ச்சியினால் அரசர்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அரசன் தன் அரசியல் கமுக்கம் தெரியாதவனாக்கப்பட்டான். வேதியர்கள் சொல்வதே வேதவாக்கானது. வள்ளுவ, கணியர்களின் கூற்று வேதியர்களால் நிராகரிக்கப்பட்டது மன்னனும் அறியாமல் வலையில் வீழ்ந்தான். தமிழ் அரசர்களும் தம் அறிவை இழந்தனர். தமிழ் மக்களும் தம் அறிவுத்திறமையை இழந்தனர். இதுதான் தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்.

 

இன்று தமிழர்கள் இவ்வேதியர்களை ஒதுக்கி நம் இழந்த அறிவுச் செல்வங்களை புதுப்பித்து முன்னோர்களின் அறிவு வழியில் தமிழர்கள் தொடர்ந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வு வளம் பெறும்.

நன்றி விளக்கியதற்கு.. இன்று வேதியர்களில் முன்னோடியாக சுப்பிரமணிய சாமி உள்ளார்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் முன்னேற்றமே முக்கியம். வேதியர்களை ஒதுக்கி விடுவோம்.

--------------------

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு

 

என்று அருமறை முதல்வன்

 

சொல்லக் கேட்டே

 

பெருமகன் மறையோற் பேணி

 

ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை

 

ஐயைந்து இரட்டி தோடர் போந்தை

 

வேலோன் தன் நிறை

 

மாடல மறையோன் கொள்க! என்றளித்தாங்கு

-----------

 

@ காவேரி பேஷா ஓடறதோன்னோ! நன்னா இருப்பேள் போங்கோன்னுட்டார்.

 

என்பதற்கு பரிசாக வெகு தங்கம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆக மன்னனே ஏமாந்திருக்கிறான். அறிவு வழியில் வேதியனின் கூற்றை சரி பார்க்காததே - மன்னனின் தவறு.

 

தமிழனுக்கென்று நாடு வரும்போது, அறிவில் சிறந்து உலகிற்கு வாரி வழங்க வேண்டும். அது தான் முக்கியம். இன்னும் சிந்திப்போம். வள்ப்படுத்துவோம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.