Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் ரீதியாக இணையமாட்டோம் : டக்ளஸ் முன்னிலையில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Featured Replies

dagulas.jpg

 

அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை  ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர். 
 
இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தனர்.
 
இதேவேளை, இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் அமைச்சர் டக்ளஸிற்கும் இடையில் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டின் தூதுவரின் துணைவியாருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததோடு ஜேர்மன் தூதுவர் ஜெர்கான் மொகாட்டும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
60 மில்லியன் ரூபா செலவில் விடுதி திறப்பு

 

 

IMG_0025%20%28Copy%29.JPG
-எஸ்.கே.பிரசாத், ற.றஜீவன்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ரூபா 60 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 'ஜயன் கே.ஸ்ரீகரன்' மாணவர் தங்குமிட விடுதி சனிக்கிழமை (01) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி தங்குமிட விடுதி கல்லூரியின் பழைய மாணவரும் ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயன் கே.ஸ்ரீகரனின் நிதியுதவியின் மூலம் கட்டப்பட்டதுடன், அவரும் அவரது பாரியார் பார்பரா ஸ்ரீகரனும் இணைந்து இந்த விடுதியினைத் திறந்து வைத்தார்கள்.
2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விடுதியின் கட்டிடப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி மாதம் நிறைவு பெற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 DSC_0303%282%29.JPG
IMG_0048%20%28Copy%29.JPG
IMG_8667.JPG
 
 
 
 
 

தயாசிறியின் கருத்திற்கு விக்னேஸ்வரன் பதில்

daklas_hadly_006.jpg

 

daklas_hadly_003.jpg

 

daklas_hadly_004.jpg

 

 

 

13வது திருத்தச் சட்டம் என்பது வட மாகாணத்திற்கு அதிகாரங்களைத் தருவதற்காகவே உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் இடம்பெற்ற ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் பற்றி வட மாகாண முதலமைச்சருக்கு எதுவும் தெரியாது என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

பலர் பல விதமாகச் சொன்னாலும் 13வது திருத்தச் சட்டம் என்பது வட மாகாணத்திற்கு அதிகாரங்களைத் தருவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர 13வது திருத்தச்சட்டம் தமக்கானதும் அல்ல வடமாகாண சபைக்குரியதும் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த திருத்தச் சட்டத்தை உருவாக்கினோம். மாகாண சபை என்பது ஏனைய இடங்களுக்கு தேவையில்லாத ஒன்று ஆனால் எங்களுக்கு தேவையான ஒன்று அந்த அடிப்படையில் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.

உண்மையில் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள எவற்றையும் அரசாங்கம் எமக்குத் தருவதாக இல்லை.

13வது திருத்தச் சட்டத்தில் உள்ளவற்றைத் தெரிந்து கொண்டே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டோம். தயாசிறியும் அரசாங்கமும் ஒரே கட்சியாக இருக்கும் போது 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எங்களது மொழி, மதம், இனம் எல்லாமே வித்தியாசமானது.

ஆகவே நாங்கள் கேட்பதை அவர்கள் வழங்கமுடியாத நிலையில் அவரது கருத்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். மேலும் தயாசிறியின் கருத்து தொடர்பாக நான் எதையும் கூற முடியாது. அது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.

Edited by Athavan CH

என்ன  இந்த கட்டிடத்தை  திறக்க இவ்வளவு பேரோ?

 

ஏன் உதவாத மூட்டை சுமக்கிறதுகளையும்   நல்ல பள்ளிக்கூடத்துக்கு கூப்பிட்டு பள்ளியின்ர பெயரை கெடுக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.