Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க தீர்மான வரைவை அரசாங்கம் நிராகரிப்பு! – தேவையற்றது என்கிறார் ரம்புக்வெல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தீர்மான வரைவை அரசாங்கம் நிராகரிப்பு! – தேவையற்றது என்கிறார் ரம்புக்வெல. 

[Wednesday, 2014-03-05 09:11:56]
rambukwela-050314-150.jpg

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் அமெரிக்கா முன்வைத்த தீர்மான முன் வரைவை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, போரின் பின்னர் நல்லிணக்கம் போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தானே உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இப்படியான ஒரு தீர்மானத்துக்கு அவசியமே கிடையாது என்று கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104951&category=TamilNews&language=tamil

அமெரிக்க பிரேரணை ஏமாற்றியுள்ளது: மனோ

 

images%281070%29.jpgஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு தமிழ், சிங்கள மக்களை ஒருசேர ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின்  ஊடக மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  

'அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒரு துணைக்கருவியே தவிர அது மாத்திரம் எமக்கு நிம்மதியையும் நியாயத்தையும் கொண்டுவந்து தந்து விடாதென்பதுடன், உள்நாட்டில் இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக  போராட்டம் மற்றும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகள் மூலமாகவே தமிழ் மக்கள் நியாய இலக்கை அடைய முடியுமென நாம் எப்போதும் சொல்லி வந்தது இன்று சரியாகியுள்ளது.

இலங்கை வந்து செல்லும் அமெரிக்க அரசாங்க பிரமுகர்கள் வரிசையாக வடக்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதிலும், துன்புற்று வாழும் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லையென இன்று தெரியவந்துள்ளது.  சர்வதேச விசாரணையென்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டபோதும், இன்று அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசம் கொடுத்துள்ளதென்பதே நிதர்சனம்.  அதேபோல் அமெரிக்க தீர்மானம் மூலம் 'இதோ, அதோ வருகிறது, மின்சாரக் கதிரை' என கோஷமிட தயாராக இருந்தவர்களுக்கும் இத்தீர்மான வரைபு ஏமாற்றத்தை தந்துள்ளது. இவை  ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆச்சரியமில்லை. ஆனால், எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாகும்.

கைதுசெய்யப்பட்டு, சரணடைந்து, கடத்தப்பட்டு சிறைக்கூடங்களில் வாடும் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வில்லை. கடந்த 02 வருடங்களுக்கு முன்னர், அனைத்துச் சிறைக்கூடங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய கைதிகளுக்கு விசேட நீதிமன்றங்களை அமைப்போமென அமைச்சர்களான நிமல் சிறிபாலவும்  ரவுப் ஹக்கீமும்  உத்தரவாதமளித்தனர். இன்று வரிசையாக கைதிகள் இறந்துபோவதை தவிர எதுவும் மாற்றம் பெறவில்லை.

சமீபத்தில் என்னைச் சந்தித்ததொரு காலத்தில் மலையகத்திலிருந்து சென்று வன்னியில் குடியேறி வாழும்  தமிழ் தாயொருவர் இப்படிச் சொன்னார். 'ஐயா, என் கணவரை கடத்திப் போனார்கள். மகனையும் இராணுவம் பிடித்துக்கொண்டு போனது. இப்போது என் பிரச்சினை என் கணவரையும் மகனையும் தேடுவதல்ல. என் பருவ வயது மகளையும் என்னையும் பாதுகாத்துக்கொள்வதே  என் போராட்டம்' இது போர் முடிந்த வலயத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் நிர்க்கதியாயுள்ள தமிழ் மகளிரது  கண்ணீர் படலத்தின் ஒரு சிறு துளி. 

வடக்கு மாகாணசபை எப்படி நடக்கிறதென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நமது ஜனாதிபதியை கேட்டாராமென ஊடக செய்தி கூறுகிறது. அதற்கான பதிலை வழங்கக்கூடிய பொருத்தமான நபர் விக்கினேஸ்வரன் ஆவார். அவர் அதை ஏற்கெனவே கூறிவிட்டார். வடமாகாணசபையென்ற வெற்று பாத்திரத்தையே தொடர்ந்து தூக்கிக்கொண்டு இருக்க வேண்டுமென அரசாங்கம் நினைப்பதை பட்டவர்த்தனமாக விக்கினேஸ்வரன் கூறிவிட்டார்.

இவற்றையெல்லாம் அமெரிக்க வரைபு கணக்கில் எடுக்கவில்லை. சர்வதேச சமூகம் அல்லது அமெரிக்கா அனைத்து தீர்வுகளையும் அள்ளி வழங்குமென, உள்நாட்டு ஜனநாயக போராட்டங்களை ஒத்தி வைக்கக்கூடாது. சர்வதேச சமூகம் அவசியம்தான். ஆனால், அது துணைப் பாத்திரம்தான் வகிக்கமுடியும். நாம் வாழும் பூமியில் நாம் அரசியல் ரீதியாக பலமாக எம்மை நிலைநிறுத்திக்கொண்டு ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்போமென்றும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகளுடன் ஒன்றிணைவோமென்றும் நாம் சொல்லி வந்தவை சரியாக அமைந்துவிட்டன' என்றார்.

 
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஏமாற்றமளிக்கிறது: கருணாநிதி
 

KARUNANIDHI60%287%29.jpgஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவுத் தீர்மானமானது அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொண்டுவரவிருக்கும் தீர்மானம், பெருமளவுக்கு தீர்வு காண்பதாக இருக்குமென்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், மேற்படி கூட்டத்தொடரில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று விரிவாக கள ஆய்வு நடத்தியதோடு பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்து அவர்களுடைய துன்ப துயரங்களை விசாரித்தறிந்து, வழங்கிய அறிக்கை உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நடந்து முடிந்து போன நிகழ்வுகள் குறித்து விசாரிப்பதற்குத் தேவையான அரசியல் உறுதி இலங்கை அரசுக்கு இல்லை என்றும், இலங்கை அரசு தொடர்ந்து சர்வாதிகார திசையில் பயணித்து வருகிறது என்றும், நவநீதம்பிள்ளை தனது அறிக்கையிலே தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தும் கூட, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் நவநீதம்பிள்ளையின் ஆய்வறிக்கையில் உள்ள நுட்பமான சிந்தனைகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கைச் அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கிடும் வகையில் வரைவுத் தீர்மானம் அமைந்திருக்கிறது.

தற்போது அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் அரசியல் தீர்வு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி அதிகாரமில்லாத ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்துவதல்ல.

இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எது என்பதனை அவர்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை உலகச் சமுதாயம் செய்ய முன் வந்தால்தான், அவர்களுக்கு நீதி கிடைத்ததாகச் சரித்திரம் பதிவு செய்யும். ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான விளைவையும் ஏற்படுத்தவில்லை. அதைப் போலவே தான் இந்தத் தீர்மானமும் இலங்கை அரசால் புறக்கணிக்கப்பட்டு எந்தப் பயனையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கிடப்போவதில்லை.

எனவே டெசோ சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டபடி இந்திய அரசே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தான் உகந்தவழியாக இருக்க முடியும்.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை, அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில் ஏற்கனவே சிலநாடுகளில் நடத்தியதைப் போல, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும் தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்கொண்டு வந்து நிறைவேற்றுவதே இலங்கைத் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்திலே வாழும் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் நிறைவளிக்கக் கூடிய காரியமாக அமையும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/102186-2014-03-05-07-57-11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.