Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய விமானத்தை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த சதிதிட்டம்! - அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் திடுக்கிடும் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய விமானத்தை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த சதிதிட்டம்! - அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் திடுக்கிடும் தகவல். 

[sunday, 2014-03-16 19:30:45]
Malaysia-Airlines-160314-150.jpg

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தது போல், மலேசிய விமானத்தை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் போட்டிருக்கலாம் என்று அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் தகர்த்தனர். விமானத்தை கடத்தி இரட்டை கோபுரங்கள் மீது அல் கய்தா தீவிரவாதிகள் மோதி தகர்த்ததில் 3,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காணாமல் போன மலேசிய விமானத்தையும் கடத்தி, இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம், கடந்த 8ம் தேதி அதிகாலை மர்மமான நிலையில் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அமெரிக்காவில் பில் கிளின்டன் அதிபராக இருந்த போது, வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த ஸ்ட்ரோப் தல்போட் என்பவர் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.தல்போட் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் தகர்த்தது போல், மலேசிய விமானத்தை கடத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி இருந்தால், விமானம் எங்கே என்ற கேள்விக்கு இதுவரை பதில் காண முடியவில்லை. விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் முறைப்படி துண்டிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்மம் நீடிக்கும் நிலையில், பயணிகளில் யாராவது விமானத்தை கடத்தி சென்றார்களா என்று அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக விமானத்தில் சென்ற பயணிகளில் யாருக்காவது விமானம் ஓட்டும் திறமை, விமானம் செல்லும் வழிகள் பற்றி தெரியுமா என்று மலேசிய அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தென் சீன கடலின் மேல் பறக்கும் போது, ரேடார் மற்றும் அந்தந்த நாடுகளின் விமான கட்டுப்பாட்டு அறைகளின் தொடர்பில் இருந்து மறைந்துள்ளது.

வியட்நாம் வான் வெளியில் செல்லும் போது, விமானத்தின் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் விமான பைலட் மலேசியாவை சேர்ந்த ஜகாரி அகமது ஷா (53) மற்றும் துணை விமானி அப்துல் ஹமீது (27) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களது வீடுகளில் நேற்று முதல் முறையாக சோதனை நடைபெற்றது. அத்துடன், விமான பொறியாளர் யாரேனும் அந்த விமானத்தில் பயணம் செய்கிறார்களா என்றும் மலேசிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தனியார் விமான நிறுவனத்தில் விமான பொறியாளராக பணிபுரியும் தனது மகன் 29 வயதான முகமது கைருல் அம்ரி சலாமத் அந்த விமானத்தில் பயணம் செய்வதாக ஒருவர் கூறினார். அந்த விமான பொறியாளர் தங்கள் விமான நிறுவனத்தில் பணிபுரிவதாக மற்றொரு விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இன்று காலை உறுதி செய்திருக்கிறார். இதனால் அவர்களால் விமானத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொடர்பு சாதனக் கருவிகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் கூறியதை அடுத்து இந்த சோதனைகள் நடந்தன.விமானம் இதன் பின்னர் நடுவழியில் தனது பாதையை திடீரென்று மாற்றிக்கொண்டது என்று நம்பப்படுகிறது. இந்த போயிங் 777 ரக விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற் கொண்டிருந்தபோது, பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் ராடார் தொடர்பை இழந்தது.ஆனால் ராடார் தொடர்பை இழந்த பின்னரும் சுமார் ஏழு மணி நேரத்துக்கு இந்த விமானம் பறந்திருக்கலாம் என்று செய்கோள் ஆதாரங்கள் காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக் கூறியிருந்தார்.

இந்த விமானம் கஜக்ஸ்தானிலிருந்து இந்தியப் பெருங்கடல் பரப்பு வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். இது ஒரு விமானக் கடத்தல் முயற்சி என்று கூறுவதைத் தவிர்த்த மலேசியப் பிரதமர், ஆனால் தாங்கள் " எல்லா சாத்தியக்கூறுகளையும்" விசாரித்து வருவதாகக் கூறினார்.

தேடுதல் வேட்டையை இந்தியா நிறுத்தியது

இதனிடையே, அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகேயும், வங்காள விரிகுடாவிலும், இந்த விமானத்தைத் தேடும் வேலையை இந்தியா இடை நிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது.மலேசிய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது கூறியிருக்கிறது.தேடும் பணி குறித்து மலேசியாவிடமிருந்து மேலும் புதிய வேண்டுகோள்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்திய கடற்படையும், விமானப்படையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளிலும், வங்காள விரிகுடா பகுதியிலும் இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுவந்தன.மலேசியா இப்போது இந்த ஒட்டுமொத்த தேடுதல் நடவடிக்கையையே மீள் பரிசீலனை செய்து வருவதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

"முழு" விவரங்களைக் கோருகிறது சீனா

இந்த விமானத்தை தேடும் முயற்சிகள் பற்றி தனக்கு " சரியான மற்றும் முழுமையான" தகவல்களைத் தருமாறு, சீனா மலேசியாவைக் கோரியிருக்கிறது.விமானத்தில் பயணம் செய்த 239 பேரில், 153 பேர் சீனப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் 38 மலேசியர்களும், அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், இந்தியா ,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாட்டவர்களும் பயணம் செய்தனர்.

அனைத்துக் கோணங்களும் பரிசீலனை

இந்த விசாரணையில், பயங்கரவாதம், கடற்கொள்ளை, கூட்டுத் தற்கொலை என அனைத்து கோணங்களும் பரிசீலிக்கப்படுவதாக பிபிசியின் கோலாலம்பூர் செய்தியாளர் கூறுகிறார்.தலைமை விமானி ஸஹாரீ மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தார். அவர் மிக அனுபவம் மிக்க விமானியாகக் கருதப்படுகிறார்.இணை விமானி, பரிக், சமீபத்தில்தான் போயிங் ரக விமானங்களை ஓட்டும் விமானியாக பணி உயர்வு தரப்பட்டார். அவர் திருமணம் செய்து கொள்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்று கருதப்படுகிறது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105798&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.