Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா மனித உரிமை சபையில்; கோமாளிகள்; கும்மாளமும்> நாசகாரவேலையும்

Featured Replies

 

ச. வி. கிருபாகரன்>  பிரான்ஸ்

 

பல ஆலோசனைகள்>    பேச்சுவார்தைகள்>    வாக்குவாதங்கள்>  நாசகாரவேலைகளுடன்>   அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப்பிரேரணைக்கு சார்பாக 23வாக்குகளும்>   எதிராக 12 வாக்குகளும்>   நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியாது. சார்பாக நிட்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென>   வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன். 

 

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே>   இப் பிரேரணை நிட்சயமாக எவ்வித ஐமிச்சமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம்.

 

இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில்>   உண்மையில் இவ் தீர்மானத்திற்கு சார்பாக 23 வாக்குகள் அல்லா>   25க்கு மேற்பட்ட நாடுகள் வாக்களித்திருக்க வேண்டும்.

 

ஆனால் கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மிகவும் படுதோல்வியடைந்த தமிழ் கட்சியை சார்ந்த நான்கு கோமாளிகள்>   ஜெனிவாவிற்கு வந்து செய்த கும்மாளத்தினாலும் நாசகார வேலைகளினாலும் 23க்கு மேல் எந்த நாடும் சார்பாக வாக்களிக்கவில்லை. இவ்தீர்மானத்தில் இவர்கள் நிலைப்பாடு என்பது>  சிறிலங்கா அரசிற்கு உரம் சேர்த்தது மட்டுமல்லாது>   சர்வதேச சமூதாயத்திடம் இந்த தீர்மானம் எந்த பிரயோசனமும் அற்றது எனக் கூறியதுடன்>   இவ் தீர்மானத்தை முன்னொழிந்த அமெரிக்க>  பிரித்தானியா போன்ற நாடுகளை ஏளனமும் செய்தார்கள்.

 

பிழை காண்பதே வேலை

 

இதில் வேடிக்கை என்னவெனில்>   இவர்களது மறைமுக நிலைபாட்டிற்கும்>   ஜனதிபதி ராஜாபக்சாவின் வெளிப்படையான நிலைப்பாடுகளிற்கு இடையில் எந்தவித வேறுபாடுகளையும் நாம் காண முடியாது.

 

காரணம்>   தமிழ் வாக்காளர்களில் 5000 பேர் தவிர்ந்த வேறு யாரும் தமக்கு வாக்களிக்காததினால்>  அவர்கள் தொடர்ந்து பல இன்னால்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக>  தொட்டதெற்கெல்லாம் சாட்டு போக்கு கூறுவதும்>   தமிழர் தேசிய கூட்டமைப்பில் பிழை காண்பதையே இவர்கள் தமது கடமையாக கொண்டுள்ளனர். இவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற காலம் முதல் இன்று வரை தமிழ்மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்தது கிடையாது.

 

ஜனதிபதி ராஜாபக்சா வெளிப்படையாக கூறுவது என்னவெனில்>   வடக்கு கிழக்கு வாழ் மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை>   ஆகையால் நான் ஏன் அவர்களைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்பதே.

 

யாழிலிருந்து ஜெனிவா வந்த இக் கோமளிகள்>   ஐ. நா.வில் அடித்த கும்மாளத்திற்கும் செய்த நாசகார வேலைகளுக்கு பல சாட்சிகள் உண்டு. இது பற்றி எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம்.

 

 

 

வேடிக்கைகள்

 

ஆங்கிலம் தெரிந்தவர்கள்>   சட்டம் படித்தவர்கள்>   படிப்பிப்பவர்கள் எல்லாரினாலும்>   ஐக்கிய நாடுகள் சபையினால் முன் வைக்கப்படும் பிரேரணைகளை புரிந்து கொள்ள முடிகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.

 

இவர்கள் ஜெனிவாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறை சொல்வதுடன்>    தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிவுபடுத்துவதற்கான வேலைகளையும் மேற்கொண்டார்கள்..

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக>   இவர்கள் சில விசமத்தானமான குறைகளை கூறி தம்முடன் இத்தீர்மானத்தை எதிர்பதற்கென ஒரு குழுவை திரட்டீனார்கள்.

 

மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக முகம் காட்டும் இவர்களில் ஒருவர்>   ஐ. நா. மனித உரிமை சபையின்>   சிறுபான்மையினருக்கான உரிமை என்ற நிசழ்ச்சி நிரலுக்கு கீழ் உரையாற்றுவதற்கு தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.

 

இவ் நிகழ்ச்சி மனித உரிமை சபையில் காலம் கடத்தி 20ம் திகதி நடந்த காரணத்தினால்>  கோமாளிகளது பத்திரிகையாளர் மாநாடு எனப்படும் பிரச்சார கூட்டமும்>   சிறுபான்மை விடயமும் ஒரே நாளில் நடைபெற்ற காரணத்தினால்>   இவர் சபையில் உரையாற்றுவதை தவிர்ந்து கொண்டார்.

 

தற்செயலாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் இச் செயலில் ஈடுபட முன்வந்திருந்தால்>  சுயமாக சிந்திக்க முடியாத தமது சில புலம் பெயர் தேசத்து  சகாக்கள் மூலம்>   இவ் விடயத்தை காட்டு தீபோல் பரப்பி>   தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கரி பூச முனைந்திருப்பார்கள்.

 

இவர்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற் திட்டத்தில்>   சுயநிர்ணய உரிமைக்கான விடயம் இல்லையென நொண்டிச் சாட்டு கூறி கூட்டமைப்பிலிந்து விலகியவர்கள்.

 

நாம் இவ்விடயம் மூலம்>   மக்களது அரசியல் நிலைமைகளை அங்கு கூறுகிறோம் என்பதை நாம் மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக மக்களுக்கு ஒரு பொழுதும் நடித்தது கிடையாது.

 

சர்வதேச பௌத்த நிறுவனம்

 

ஐ. நா. மனித உரிமை சபை நடைபெற்றவேளையில்>   மார்ச் 20ம் திகதி>   ராஜபக்சா அரசிற்கு ஆதரவான>   சர்வதேச பௌத்த நிறுவனம் எனும் சிங்களவர்களினால் நடாத்தபடும் அமைப்பு>   ஓர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இவ் கூட்டம் பற்றி>   25வது கூட்ட அமர்வு ஆரம்பமாகிய மார்ச் 3ம் திகதியே பலருக்கு தெரியும். ஆனால் இக்கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே>   ஐ. நா.வின் விளம்பரம் மூலம் சகலரும் அறிவார்கள்.

 

ஆனால் இக் கோமாளிகள்>   சர்வதேச பௌத்த நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதே தினத்தில் அதே நேரத்திற்கு>   ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு எனப்படும்தமதுபிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

 

இதனால் மனித உரிமை சபையில் பங்கு கொள்ளும் ஏறக்குறைய 40 தமிழர்களில்>  நான் உட்பட மூவர் மட்டுமே>  சிங்களவர்களின் சர்வதேச பௌத்த நிறுவனத்தின் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது.

 

மனித உரிமை சபையில் கலந்து கொள்ளும் தமிழர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு>   எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளை சர்வதேச மேடையான ஐ.நா.வில் கூறவிடில்>   தமிழர்கள் ஜெனிவா செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 

வன்னி பாரளுமன்ற உறுப்பினர்

 

உண்மையில்>   வன்னியிலிருந்து ஜெனிவா வருகை தந்திருந்த பாரளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன்>இவ் கூட்டத்திற்கு வருவதற்கு சம்மதித்திருந்த பொழுதும்>   அவ் கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்>   இவர் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டினேன்.

 

அக் கூட்டத்தில்>   வழமைபோல் தமிழர்களது சரித்திரம் திரிவு படுத்தப்பட்டு>   பொய்யான தகவல்கள் பொய்யான புள்ளி விபரங்களை கூறி>   சிறிலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கைதீவின் சரித்திரத்தையே முன்பு அறியாது அங்கு கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்கள்>  தமிழீழ விடுதலைப் புலிகளையும்>   தமிழ் மக்களையும் மிகவும் கொடியவர்களாகவே எண்ணுவார்கள்.

 

இவ்வேளையில் அங்கு சமூகமளித்திருந்த நாம் மூவரும்>   தமிழர்களது சரித்திரம் விடுதலை போரட்டத்தின் உண்மைகளை அங்கு கூறி>   நிலைமைகளை தெளிவு படுத்தியதும்>   அங்கு ஓர் பூகம்பே வெடித்துவிட்டது.

 

இவ் கூட்டத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவாக>   கூலிக்கு மர்படிக்கும் சுவிஸ்நாட்டில் வாழும் ஒட்டுக்குழுவை சார்ந்த ஒரு தமிழர்>   தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சா  அரசிற்காக தமிழில் வாக்காளத்து வாங்கினார். அங்கு கூடியிருந்தவர்களில் நால்வர் தவிர்ந்த வேறு யாருக்கு இவரது அரட்டையும் அலட்டலும் விளங்கவில்லை.

 

இதை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த ஓர் சிங்கள பத்திரிகையின் நிருபாருக்கும் எனக்கும்இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இவரினால் விவாதம் செய்ய முடியாத காரணத்தினால்>   இவர் மிகவும் கெட்ட வார்த்தையை அங்கு உபயோகித்தது மட்டுமல்லாது>   முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போம்நீ அங்கு வந்தால் ஒன்றில் சிறைக்கு செல்வாய் அல்லது மிகவும் மோசமான நிலையை சந்திப்பாய் என என்னை மிரட்டினார்.

 

மிகவும் வெட்கமான விடயம் என்னவெனில்>   சிறிலங்கா அரசும்>   ஜனதிபதி ராஜபக்சா அரசும் புலம் பெயர் வாழ் தமிழர்கள்>   சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென கூறி சிறிலஙகவிற்கு வருமாறு அழைக்கும்  அதேவேளை>   இந்த இனத்துவேசி>   முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போமென சவால் விடுகிறார்.

 

நாசகார வேலை

 

யாதார்தமான உண்மை என்னவெனில்>   ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் பத்திரிகை மாநாடுகள்>  பிரச்சாரக் கூட்டங்கள் என்றும் விரும்பிய வேளைகளில் நடத்த முடியும். ஆனால் ஐ. நா. மண்டபத்திற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்கள்>   மனித உரிமை சபை வேளைகளிலேயே நடத்த முடியும்.

 

அத்துடன்>   இவ்வேளைகளிலேயே>   சர்வதேச மேடைகள் அற்ற தமிழர்களாகிய நாம்>  சிங்களவர்களினால் நடாத்தபடும் சர்வதேச பௌத்த நிறுவனம் போன்ற அமைப்புக்களின் சிறிலங்கா அரச பிரச்சாரங்களை முறிஅடிக்க முடியும்.

 

இவ் நான்கு கோமாளிகள் முற்கூட்டி திட்டமிட்டபடி>   எந்த தமிழர்களும்>   சிங்களவர்கள் நடத்திய இக் கூட்டத்திற்கு செல்ல முடியாது போயிருந்தால்>   சிங்களவர்கள் பெரும் வெற்றி கொண்டாடியிருப்பார்கள்.

 

இக் கோமாளிகளுக்கு இவ் கால>   நேரம் உண்மையில் முக்கியனதாகவிருந்தால்>   இவர்களது பிரச்சார கூட்டம் பற்றி எந்தனை சுவிஸ்நாட்டின் பத்திரிகையோ அல்லது வெளிநாட்டு பத்திரிகையோ செய்திகள் வெளியிட்டிருந்தனா?.

 

மிக வேடிக்கையான விடயம் என்னவெனில்>   இவர்களது கூட்டம் சில தமிழ் ஊடகங்கள் மூலமாக நேர் ஒழிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ் வேளையில் பிரான்ஸின் கல்விமானும்>   பிரான்ஸ் அரசிடம் செவளியே பட்டம் பெற்ற>   காலாநிதி ஜோன்-மரி யூலியா (சுகிர்தராஜா)>   இவர்களது நிலைப்படுகள்>   நாட்டில் வாழும் மக்களது எதிர்காலம்>   இவ் தீர்மானத்தை கைவிட்டு விட்டு வேறு என்ன செய்ய முடியும் போன்ற கேள்வி கணைகளை தொடுத்ததும்>   ஊடகங்களில் நேரடி ஒழிபரப்பு யாவும் உடன் துண்டிக்கப்பட்டதுடன்>   பதிவு நாடாக்கள் யாவும் நிறுத்தப்பட்டது. அத்துடன் அங்கு எந்த கேள்வி பதில்களும் நேரடி ஓழிபரப்பு செய்யப்படவில்லை.

 

அதேவேளை இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம்இவ் தீர்மானத்தை முன்வைத்துள்ள அமெரிக்காவிற்கு நாம் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோமென கூறியதும்இவ் கோமாளிகளினால்இதுவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் தான் தமிழர் கூட்டமைப்பின் ஜனநாயகம் பற்றி குறை கூறுபவர்கள்!

 

குழப்ப நிலை

 

எது என்னவானாலும்>   தமிழரிடையே அமெரிக்க தீர்மன விடயத்திலும் ஐக்கியம் இல்லை என்பதை அரங்கேற்றும் நோக்குடன் ஜெனிவா வந்த கோமாளிகள்> தமது திட்டத்தை திறம்பட நிறைவேற்றினார்கள்.

 

இதனால்சில நாடுகள்>   சில தமிழர்களும் ஜனதிபதி ராஜபகசாவும் விரும்பாத இவ் தீர்மனத்தில் தாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டுமென கூறி>   இவ் தீர்மானத்திற்கு சார்பாக தமது வாக்குகளை பதிவு செய்யவில்லை.

 

கடந்த தேர்தலில் இக் கோமாளிகளுக்கு 5000 வாக்குகள் தான் கிடைத்தது என்பதை இவ் நாடுகள் அறிந்திருக்கவில்லை. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இவர்களை ஆதரிப்பவர்கள் மிக அண்மைகாலங்களில் பல நோக்குகளுடன் அரசியல் தெரியாது அரசியலுக்கு வந்தவர்களும்>   தாமாக சிந்திக்க முடியாதவர்களுமே.

 

மனித உரிமை சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் - சீனா>   பாகிஸ்தான்>   ராஷ்யா>  இந்தியா போன்ற நாடுகள் ஆற்றிய உரைகளை இவர்கள் ஒழுங்காக கேட்டிருப்பார்களென நம்புகிறேன்.

 

ஐ.நா.வில் கூடியிருந்த சில தமிழர் கூறியதாவது>   இவர்கள் தமிழர் தேசிய கூட்மைப்பிடம் படுதோல்வி அடைந்தவர்கள்>   ஆகையால் தமிழர் தேசிய கூட்மைப்பு ஆதரிப்பதை எதிர்பதும்;> அவர்கள் எதிர்பதை ஆதரிப்பதுமே இவர்களது கொள்கையாம்.

 

இன்றுவரை இவர்கள் தமிழர்களுக்கு நாட்டில் எதை உருப்படியா செய்தார்களென சிலர் வினவினார்கள்.

 

பத்தரிகையாளர் மாநாடு நடத்துவதும்>   தமிழர் தேசிய கூட்மைப்பை குறை கூறவதும்>  பிழைபிடிப்பதுமே இவர்களது நாளாந்த வேலை திட்டமென வேறுசிலர் கூறினார்கள்.

 

நடந்து முடிந்த 25வது கூட்டத் தொடரில் ஏறக்குறைய 40லிருந்து 50 வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் சிலர் சிறிலங்கா அரசிற்கும் ராஜப்சாவிற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்பவர்கள். இன்னும் சிலர்>   வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல்>  படங்கள் சேர்ப்பவாகளா காணப்பட்டார்கள்.

 

தற்செயலாக அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியில் முடிந்திருந்தால்>   இக் கோமளிகள் மக்களுக்கு என்ன ஆறுதலை>   எதிர்காலத்திற்கான என்ன வழிமுறைகளை கூறியிருப்பார்கள்இன்று வடக்கு கிழக்கு சிங்களமயமாகி வருவது இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

 

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்>   பேய்காட்டப்படுகிறவன் இருக்கும் வரை>  பேய்காட்டுகிறவனும் இருப்பனாம்.

 

இறையாமை

 

ஓரு நாட்டினுடைய இறையாமை பற்றி ஐ. நா. தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதோ இல்லையோ>  இவற்றை மதித்தே பிரேரணைகள் நிறைவேற்றப்படுத்தப்படுகின்றன.

 

சிறிலங்கா மீதான அமெரிக்கவினுடைய தீர்மானத்தின் முன்னுரை பந்தியில் சிறிலங்காவின் இறையாமை பற்றி கூறப்பட்டுள்ளது.

 

இன்று ராஷ்யா>   ஊக்கிறேனின் இறையாமை மதிக்காது தனது படைகளை ஊக்கிறேனுக்குள் நகர்த்தியுள்ளது. இவ் நகர்வை சிறிலங்கா ஆதரிக்கிறது. இவ்வேளையில் சிறிலங்கா எப்படியாக தனது இறையாமை பற்றி பேச முடியும்?

 

மனித உரிமை சபையில் இவ் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டு - பல நாடுகள்>  சர்வதேச அமைப்புக்கள்>   சர்வதேச வல்லுனார்கள்>   மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

 

இவ்விடயத்தில சீனா>   பாகிஸ்தான்>   ராஷ்யா>   கியூபா>   வெனிசூலா ஆகிய நாடுகளுடன் இணைந்து இவ் தீர்மானத்தை விவாதிக்கப்படதெனவும்>   10வது பந்தியை நீக்க வேண்டுமென இந்தியா வாக்களித்தாதன் ரகசியம் என்ன?

 

இவ் தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலைவகித்துள்ளதற்கு மேலாக>   வாக்களிப்பதற்கு முனனர்இந்தியா தூதுவரின் உரையில் பல உண்மைகள் முடிமறைக்கப்பட்டுள்ளது.

 

இவ் தீர்மானத்தை வெற்றியின் அடிப்படையில் ஆராயும் பொழுது>   சீனா>   இந்தியா> பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவு இல்லாது>   அவ் பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னால் தனித்து நின்று வெற்றியடைய முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதா?

 

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

05-04-2014

 

எனது E-mail இல் கிடைக்கப்பெற்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

ச. வி. கிருபாகரன்>  பிரான்ஸ்

 

பல ஆலோசனைகள்>    பேச்சுவார்தைகள்>    வாக்குவாதங்கள்>  நாசகாரவேலைகளுடன்>   அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப்பிரேரணைக்கு சார்பாக 23வாக்குகளும்>   எதிராக 12 வாக்குகளும்>   நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியாது. சார்பாக நிட்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென>   வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன். 

 

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே>   இப் பிரேரணை நிட்சயமாக எவ்வித ஐமிச்சமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம்.

 

இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில்>   உண்மையில் இவ் தீர்மானத்திற்கு சார்பாக 23 வாக்குகள் அல்லா>   25க்கு மேற்பட்ட நாடுகள் வாக்களித்திருக்க வேண்டும்.

 

ஆனால் கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மிகவும் படுதோல்வியடைந்த தமிழ் கட்சியை சார்ந்த நான்கு கோமாளிகள்>   ஜெனிவாவிற்கு வந்து செய்த கும்மாளத்தினாலும் நாசகார வேலைகளினாலும் 23க்கு மேல் எந்த நாடும் சார்பாக வாக்களிக்கவில்லை. இவ்தீர்மானத்தில் இவர்கள் நிலைப்பாடு என்பது>  சிறிலங்கா அரசிற்கு உரம் சேர்த்தது மட்டுமல்லாது>   சர்வதேச சமூதாயத்திடம் இந்த தீர்மானம் எந்த பிரயோசனமும் அற்றது எனக் கூறியதுடன்>   இவ் தீர்மானத்தை முன்னொழிந்த அமெரிக்க>  பிரித்தானியா போன்ற நாடுகளை ஏளனமும் செய்தார்கள்.

 

பிழை காண்பதே வேலை

 

இதில் வேடிக்கை என்னவெனில்>   இவர்களது மறைமுக நிலைபாட்டிற்கும்>   ஜனதிபதி ராஜாபக்சாவின் வெளிப்படையான நிலைப்பாடுகளிற்கு இடையில் எந்தவித வேறுபாடுகளையும் நாம் காண முடியாது.

 

காரணம்>   தமிழ் வாக்காளர்களில் 5000 பேர் தவிர்ந்த வேறு யாரும் தமக்கு வாக்களிக்காததினால்>  அவர்கள் தொடர்ந்து பல இன்னால்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக>  தொட்டதெற்கெல்லாம் சாட்டு போக்கு கூறுவதும்>   தமிழர் தேசிய கூட்டமைப்பில் பிழை காண்பதையே இவர்கள் தமது கடமையாக கொண்டுள்ளனர். இவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற காலம் முதல் இன்று வரை தமிழ்மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்தது கிடையாது.

 

ஜனதிபதி ராஜாபக்சா வெளிப்படையாக கூறுவது என்னவெனில்>   வடக்கு கிழக்கு வாழ் மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை>   ஆகையால் நான் ஏன் அவர்களைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்பதே.

 

யாழிலிருந்து ஜெனிவா வந்த இக் கோமளிகள்>   ஐ. நா.வில் அடித்த கும்மாளத்திற்கும் செய்த நாசகார வேலைகளுக்கு பல சாட்சிகள் உண்டு. இது பற்றி எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம்.

 

 

 

வேடிக்கைகள்

 

ஆங்கிலம் தெரிந்தவர்கள்>   சட்டம் படித்தவர்கள்>   படிப்பிப்பவர்கள் எல்லாரினாலும்>   ஐக்கிய நாடுகள் சபையினால் முன் வைக்கப்படும் பிரேரணைகளை புரிந்து கொள்ள முடிகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.

 

இவர்கள் ஜெனிவாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறை சொல்வதுடன்>    தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிவுபடுத்துவதற்கான வேலைகளையும் மேற்கொண்டார்கள்..

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக>   இவர்கள் சில விசமத்தானமான குறைகளை கூறி தம்முடன் இத்தீர்மானத்தை எதிர்பதற்கென ஒரு குழுவை திரட்டீனார்கள்.

 

மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக முகம் காட்டும் இவர்களில் ஒருவர்>   ஐ. நா. மனித உரிமை சபையின்>   சிறுபான்மையினருக்கான உரிமை என்ற நிசழ்ச்சி நிரலுக்கு கீழ் உரையாற்றுவதற்கு தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.

 

இவ் நிகழ்ச்சி மனித உரிமை சபையில் காலம் கடத்தி 20ம் திகதி நடந்த காரணத்தினால்>  கோமாளிகளது பத்திரிகையாளர் மாநாடு எனப்படும் பிரச்சார கூட்டமும்>   சிறுபான்மை விடயமும் ஒரே நாளில் நடைபெற்ற காரணத்தினால்>   இவர் சபையில் உரையாற்றுவதை தவிர்ந்து கொண்டார்.

 

தற்செயலாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் இச் செயலில் ஈடுபட முன்வந்திருந்தால்>  சுயமாக சிந்திக்க முடியாத தமது சில புலம் பெயர் தேசத்து  சகாக்கள் மூலம்>   இவ் விடயத்தை காட்டு தீபோல் பரப்பி>   தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கரி பூச முனைந்திருப்பார்கள்.

 

இவர்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற் திட்டத்தில்>   சுயநிர்ணய உரிமைக்கான விடயம் இல்லையென நொண்டிச் சாட்டு கூறி கூட்டமைப்பிலிந்து விலகியவர்கள்.

 

நாம் இவ்விடயம் மூலம்>   மக்களது அரசியல் நிலைமைகளை அங்கு கூறுகிறோம் என்பதை நாம் மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக மக்களுக்கு ஒரு பொழுதும் நடித்தது கிடையாது.

 

சர்வதேச பௌத்த நிறுவனம்

 

ஐ. நா. மனித உரிமை சபை நடைபெற்றவேளையில்>   மார்ச் 20ம் திகதி>   ராஜபக்சா அரசிற்கு ஆதரவான>   சர்வதேச பௌத்த நிறுவனம் எனும் சிங்களவர்களினால் நடாத்தபடும் அமைப்பு>   ஓர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இவ் கூட்டம் பற்றி>   25வது கூட்ட அமர்வு ஆரம்பமாகிய மார்ச் 3ம் திகதியே பலருக்கு தெரியும். ஆனால் இக்கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே>   ஐ. நா.வின் விளம்பரம் மூலம் சகலரும் அறிவார்கள்.

 

ஆனால் இக் கோமாளிகள்>   சர்வதேச பௌத்த நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதே தினத்தில் அதே நேரத்திற்கு>   ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு எனப்படும்தமதுபிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

 

இதனால் மனித உரிமை சபையில் பங்கு கொள்ளும் ஏறக்குறைய 40 தமிழர்களில்>  நான் உட்பட மூவர் மட்டுமே>  சிங்களவர்களின் சர்வதேச பௌத்த நிறுவனத்தின் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது.

 

மனித உரிமை சபையில் கலந்து கொள்ளும் தமிழர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு>   எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளை சர்வதேச மேடையான ஐ.நா.வில் கூறவிடில்>   தமிழர்கள் ஜெனிவா செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 

வன்னி பாரளுமன்ற உறுப்பினர்

 

உண்மையில்>   வன்னியிலிருந்து ஜெனிவா வருகை தந்திருந்த பாரளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன்>இவ் கூட்டத்திற்கு வருவதற்கு சம்மதித்திருந்த பொழுதும்>   அவ் கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்>   இவர் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டினேன்.

 

அக் கூட்டத்தில்>   வழமைபோல் தமிழர்களது சரித்திரம் திரிவு படுத்தப்பட்டு>   பொய்யான தகவல்கள் பொய்யான புள்ளி விபரங்களை கூறி>   சிறிலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கைதீவின் சரித்திரத்தையே முன்பு அறியாது அங்கு கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்கள்>  தமிழீழ விடுதலைப் புலிகளையும்>   தமிழ் மக்களையும் மிகவும் கொடியவர்களாகவே எண்ணுவார்கள்.

 

இவ்வேளையில் அங்கு சமூகமளித்திருந்த நாம் மூவரும்>   தமிழர்களது சரித்திரம் விடுதலை போரட்டத்தின் உண்மைகளை அங்கு கூறி>   நிலைமைகளை தெளிவு படுத்தியதும்>   அங்கு ஓர் பூகம்பே வெடித்துவிட்டது.

 

இவ் கூட்டத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவாக>   கூலிக்கு மர்படிக்கும் சுவிஸ்நாட்டில் வாழும் ஒட்டுக்குழுவை சார்ந்த ஒரு தமிழர்>   தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சா  அரசிற்காக தமிழில் வாக்காளத்து வாங்கினார். அங்கு கூடியிருந்தவர்களில் நால்வர் தவிர்ந்த வேறு யாருக்கு இவரது அரட்டையும் அலட்டலும் விளங்கவில்லை.

 

இதை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த ஓர் சிங்கள பத்திரிகையின் நிருபாருக்கும் எனக்கும்இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இவரினால் விவாதம் செய்ய முடியாத காரணத்தினால்>   இவர் மிகவும் கெட்ட வார்த்தையை அங்கு உபயோகித்தது மட்டுமல்லாது>   முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போம்நீ அங்கு வந்தால் ஒன்றில் சிறைக்கு செல்வாய் அல்லது மிகவும் மோசமான நிலையை சந்திப்பாய் என என்னை மிரட்டினார்.

 

மிகவும் வெட்கமான விடயம் என்னவெனில்>   சிறிலங்கா அரசும்>   ஜனதிபதி ராஜபக்சா அரசும் புலம் பெயர் வாழ் தமிழர்கள்>   சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென கூறி சிறிலஙகவிற்கு வருமாறு அழைக்கும்  அதேவேளை>   இந்த இனத்துவேசி>   முடியுமனால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போமென சவால் விடுகிறார்.

 

நாசகார வேலை

 

யாதார்தமான உண்மை என்னவெனில்>   ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் பத்திரிகை மாநாடுகள்>  பிரச்சாரக் கூட்டங்கள் என்றும் விரும்பிய வேளைகளில் நடத்த முடியும். ஆனால் ஐ. நா. மண்டபத்திற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்கள்>   மனித உரிமை சபை வேளைகளிலேயே நடத்த முடியும்.

 

அத்துடன்>   இவ்வேளைகளிலேயே>   சர்வதேச மேடைகள் அற்ற தமிழர்களாகிய நாம்>  சிங்களவர்களினால் நடாத்தபடும் சர்வதேச பௌத்த நிறுவனம் போன்ற அமைப்புக்களின் சிறிலங்கா அரச பிரச்சாரங்களை முறிஅடிக்க முடியும்.

 

இவ் நான்கு கோமாளிகள் முற்கூட்டி திட்டமிட்டபடி>   எந்த தமிழர்களும்>   சிங்களவர்கள் நடத்திய இக் கூட்டத்திற்கு செல்ல முடியாது போயிருந்தால்>   சிங்களவர்கள் பெரும் வெற்றி கொண்டாடியிருப்பார்கள்.

 

இக் கோமாளிகளுக்கு இவ் கால>   நேரம் உண்மையில் முக்கியனதாகவிருந்தால்>   இவர்களது பிரச்சார கூட்டம் பற்றி எந்தனை சுவிஸ்நாட்டின் பத்திரிகையோ அல்லது வெளிநாட்டு பத்திரிகையோ செய்திகள் வெளியிட்டிருந்தனா?.

 

மிக வேடிக்கையான விடயம் என்னவெனில்>   இவர்களது கூட்டம் சில தமிழ் ஊடகங்கள் மூலமாக நேர் ஒழிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ் வேளையில் பிரான்ஸின் கல்விமானும்>   பிரான்ஸ் அரசிடம் செவளியே பட்டம் பெற்ற>   காலாநிதி ஜோன்-மரி யூலியா (சுகிர்தராஜா)>   இவர்களது நிலைப்படுகள்>   நாட்டில் வாழும் மக்களது எதிர்காலம்>   இவ் தீர்மானத்தை கைவிட்டு விட்டு வேறு என்ன செய்ய முடியும் போன்ற கேள்வி கணைகளை தொடுத்ததும்>   ஊடகங்களில் நேரடி ஒழிபரப்பு யாவும் உடன் துண்டிக்கப்பட்டதுடன்>   பதிவு நாடாக்கள் யாவும் நிறுத்தப்பட்டது. அத்துடன் அங்கு எந்த கேள்வி பதில்களும் நேரடி ஓழிபரப்பு செய்யப்படவில்லை.

 

அதேவேளை இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம்இவ் தீர்மானத்தை முன்வைத்துள்ள அமெரிக்காவிற்கு நாம் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோமென கூறியதும்இவ் கோமாளிகளினால்இதுவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் தான் தமிழர் கூட்டமைப்பின் ஜனநாயகம் பற்றி குறை கூறுபவர்கள்!

 

குழப்ப நிலை

 

எது என்னவானாலும்>   தமிழரிடையே அமெரிக்க தீர்மன விடயத்திலும் ஐக்கியம் இல்லை என்பதை அரங்கேற்றும் நோக்குடன் ஜெனிவா வந்த கோமாளிகள்> தமது திட்டத்தை திறம்பட நிறைவேற்றினார்கள்.

 

இதனால்சில நாடுகள்>   சில தமிழர்களும் ஜனதிபதி ராஜபகசாவும் விரும்பாத இவ் தீர்மனத்தில் தாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டுமென கூறி>   இவ் தீர்மானத்திற்கு சார்பாக தமது வாக்குகளை பதிவு செய்யவில்லை.

 

கடந்த தேர்தலில் இக் கோமாளிகளுக்கு 5000 வாக்குகள் தான் கிடைத்தது என்பதை இவ் நாடுகள் அறிந்திருக்கவில்லை. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இவர்களை ஆதரிப்பவர்கள் மிக அண்மைகாலங்களில் பல நோக்குகளுடன் அரசியல் தெரியாது அரசியலுக்கு வந்தவர்களும்>   தாமாக சிந்திக்க முடியாதவர்களுமே.

 

மனித உரிமை சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் - சீனா>   பாகிஸ்தான்>   ராஷ்யா>  இந்தியா போன்ற நாடுகள் ஆற்றிய உரைகளை இவர்கள் ஒழுங்காக கேட்டிருப்பார்களென நம்புகிறேன்.

 

ஐ.நா.வில் கூடியிருந்த சில தமிழர் கூறியதாவது>   இவர்கள் தமிழர் தேசிய கூட்மைப்பிடம் படுதோல்வி அடைந்தவர்கள்>   ஆகையால் தமிழர் தேசிய கூட்மைப்பு ஆதரிப்பதை எதிர்பதும்;> அவர்கள் எதிர்பதை ஆதரிப்பதுமே இவர்களது கொள்கையாம்.

 

இன்றுவரை இவர்கள் தமிழர்களுக்கு நாட்டில் எதை உருப்படியா செய்தார்களென சிலர் வினவினார்கள்.

 

பத்தரிகையாளர் மாநாடு நடத்துவதும்>   தமிழர் தேசிய கூட்மைப்பை குறை கூறவதும்>  பிழைபிடிப்பதுமே இவர்களது நாளாந்த வேலை திட்டமென வேறுசிலர் கூறினார்கள்.

 

நடந்து முடிந்த 25வது கூட்டத் தொடரில் ஏறக்குறைய 40லிருந்து 50 வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் சிலர் சிறிலங்கா அரசிற்கும் ராஜப்சாவிற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்பவர்கள். இன்னும் சிலர்>   வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல்>  படங்கள் சேர்ப்பவாகளா காணப்பட்டார்கள்.

 

தற்செயலாக அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியில் முடிந்திருந்தால்>   இக் கோமளிகள் மக்களுக்கு என்ன ஆறுதலை>   எதிர்காலத்திற்கான என்ன வழிமுறைகளை கூறியிருப்பார்கள்இன்று வடக்கு கிழக்கு சிங்களமயமாகி வருவது இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

 

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்>   பேய்காட்டப்படுகிறவன் இருக்கும் வரை>  பேய்காட்டுகிறவனும் இருப்பனாம்.

 

இறையாமை

 

ஓரு நாட்டினுடைய இறையாமை பற்றி ஐ. நா. தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதோ இல்லையோ>  இவற்றை மதித்தே பிரேரணைகள் நிறைவேற்றப்படுத்தப்படுகின்றன.

 

சிறிலங்கா மீதான அமெரிக்கவினுடைய தீர்மானத்தின் முன்னுரை பந்தியில் சிறிலங்காவின் இறையாமை பற்றி கூறப்பட்டுள்ளது.

 

இன்று ராஷ்யா>   ஊக்கிறேனின் இறையாமை மதிக்காது தனது படைகளை ஊக்கிறேனுக்குள் நகர்த்தியுள்ளது. இவ் நகர்வை சிறிலங்கா ஆதரிக்கிறது. இவ்வேளையில் சிறிலங்கா எப்படியாக தனது இறையாமை பற்றி பேச முடியும்?

 

மனித உரிமை சபையில் இவ் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டு - பல நாடுகள்>  சர்வதேச அமைப்புக்கள்>   சர்வதேச வல்லுனார்கள்>   மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

 

இவ்விடயத்தில சீனா>   பாகிஸ்தான்>   ராஷ்யா>   கியூபா>   வெனிசூலா ஆகிய நாடுகளுடன் இணைந்து இவ் தீர்மானத்தை விவாதிக்கப்படதெனவும்>   10வது பந்தியை நீக்க வேண்டுமென இந்தியா வாக்களித்தாதன் ரகசியம் என்ன?

 

இவ் தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலைவகித்துள்ளதற்கு மேலாக>   வாக்களிப்பதற்கு முனனர்இந்தியா தூதுவரின் உரையில் பல உண்மைகள் முடிமறைக்கப்பட்டுள்ளது.

 

இவ் தீர்மானத்தை வெற்றியின் அடிப்படையில் ஆராயும் பொழுது>   சீனா>   இந்தியா> பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவு இல்லாது>   அவ் பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னால் தனித்து நின்று வெற்றியடைய முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதா?

 

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

05-04-2014

 

எனது E-mail இல் கிடைக்கப்பெற்றது .

 

 

 

இந்தியா இல்லாமலேயே நாம் வென்று விட்டோமே.
 
நமது ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது நமது தமிழர்தான்  
  • 1 month later...
  • தொடங்கியவர்

கடந்த மனித உரிமைச் சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஒர் கட்டுரை, “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகள், கும்மாளமும், நாசகார வேலையும்” என்ற தலையங்கத்துடன் எழுதினேன். அதனை தொடர்ந்து சிலருடைய கொக்கரிப்பு காரணமாக, “உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!” என அடுத்த கட்டுரையையும் வெளிவந்தது.
எனது ஆக்கங்களில் கூறப்பட்ட விடயங்கள் ஏதேனும் பிழையென சுட்டிக்காட்டி, யாரும் எழுதினால், நிசே்சயம் நேரத்தை ஒதுக்கி, அவற்றை ஆறுதலாக வாசித்து பதில் கூற தயாராகவுள்ளேன்.
அன்றும் இன்றும் சிறிலங்காவின் அரச ஊடகங்கள் - தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் என் மீது வசைபாடுவதை யாவரும் அறிவார்கள். இவர்களுக்கு துணையாக, சிலரின் ஊதியத்திற்கு வேலையும் சில ஆண்டிகள், தமது ஏஜமான்களினால் கொடுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து, என் மீது தமக்குள்ள எரிச்சல் பொறாமையினாலும், தமது சிறு அறிவிற்கு ஏற்ற வகையிலும், எழுதும் அலட்டல்கள் பற்றி எனக்கு எந்வித அக்கறையும் இல்லை. இவர்களால் என்னுடன் போட்டி போட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.
சந்திரனைப் பார்த்து நாய்கள் குலைப்பதும், நாய்கள் குலைத்தாலும் சந்திரன் தனது கடமை தொடர்ந்து செய்யும் என்பது உலக வழமை. “நிலவிற்கு பயந்து பரதேசம் போபவர்களிடம்”, இவ் ஆண்டிகளின் கோழைத்தனம் சில வேளைகளில் வெற்றியளிக்கலாம். தற்போதைய இடைவெளியில், சரித்திரம் அரசியல் தெரியாத இவர்கள், தம்மை தமிழ் தேசியத்தை காப்பாற்றும் பெரும் தலைவர்களாக புலம்பெயர் தேசத்தில் காண்பிக்க முனைவது சிரிப்பிற்கு இடமானது.
தமிழ் தேசியம் என்றால் என்ன?
தமிழ் தேசியம் விடுதலை போராட்டம் என்றால் என்ன? பல தசாப்தங்களாக, மது மங்கை தூள் வியாபாரத்தில் காலத்தை கழித்துவிட்டு, திடீரென 2007ம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர், யாருடையோ ஏவுதலில் தமிழ் செயற்பாட்டாளராக வேசம் போடுவது அல்ல.
தமிழ் தேசியத்தில் விசுவாசம் உள்ளவர்கள், திடீரென தோன்றி, நீண்ட காலம் வேலை செய்யும் இளைஞரோரையும், முதியோரையும் ஓரம் கட்டுவதும் அல்ல.
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பங்களித்தவர்களிடம் பங்களிப்பு செய்யாதீர்களென முன்பு கூறியவர்களும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் வெளியீடுகளை கிழித்து எறிந்து, இவற்றை யாரும் வாசிக்கப்படாது என முன்பு கட்டளையிட்டவர்களும், காலப்போக்கில் தமது பிள்ளைகளுக்கு மேடை தேவைபட்டு உதயமானவர்களும், சாதி சமயம் பார்த்து திருமணம் செய்து வைப்பவர்களும், இன்று தமிழ் தேசியம் பேசுகிறார்கள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை போல்” இவர்கள் தான் இன்றைய நவீன தமிழ் தலைவர்களா? இவர்களுக்கு உண்மை யதார்த்தம் போன்றவற்றை எப்படி பிடிக்கும்?
சர்வதேச மொழி ஒன்று கூட ஒழுங்காக பேசத் தெரியாத இவர்களால், தமிழீழ மக்களுக்கு என்ன செய்ய முடியும்? அத்துடன் இவர்கள் செயற்பாடு என்பது, எல்லை கோட்டிற்கு உள்ளாக்கபட்டதே. இவர்களிடம் அரசியல் வேலைகளை பொறுப்பு கொடுத்தவர்களையும், இவர்கள் நன்றாக அரசியலை நகர்த்துகிறார்களென கூறுபவர்களையும் எண்ணி பரிதாபப்படுகிறேன். இவர்களால் “கழுதை தேய்ந்து கட்டெறும்பாக போய் கொண்டிருப்பதை உணர முடியவில்லையா?
இவ் நவீன தேசியவாதிகள், ஜெனிவா மனித உரிமை சபையில் கலந்து கொண்ட வேளையில், அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களிடம் “தயவு செய்து என்னையும் செவ்வி எடுங்கோ” என்று மண்டாடிய கதையை, யாரும் அறிந்துள்ளார்களா?
இவ் அற்ப மனிதர்கள், இப்போதைய விழிப்பு போராட்டங்களில் யார் யார் கலந்து கொள்ளவில்லை என்பதை கணக்கிடுவதற்கு முன்பு, தாம் எத்தனை தசாப்தங்களாக தமிழ் இன விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, விடுதலை உணர்வு கொண்ட எத்தனை பேரை, விடுதலை போராட்டத்திற்கு பங்களிக்கவிடாது மழுங்கடித்தோம் என்பதை முதலில் கணக்கிட வேண்டும். முன்பு இப்படியான வேலை திட்டங்களை கபடமாக மேற்கொண்டவர்கள் யாரும், இன்று நிலைக்கவில்லை என்பதை இவர்கள் அறியவில்லை போலும்.
சிலர் தமது அறிவிற்கு ஏற்ற வகையில் தம்மை போன்ற அற்பர்களுக்கு சினிமா காண்பிப்பதற்காக ஏதோ புலம்புகிறார்கள். “காய்கிற மரத்திற்கு தான் கல்லெறி விழும் என்பதை நன்கு அறிவேன்”. காய்க்காத மரத்திற்கு கல்லெறிபவர்கள், நல்ல மனநோய் வைத்தியரை நேரத்திற்கு பார்ப்பது நல்லது. இவர்களையிட்டு பரிதாபப்படுவதற்கு மேலாக நாம் என்ன செய்வது? இவர்கள் தங்களை திருப்திப்படுத்தும் வேலைகளை மட்டும் நான் செய்வதுடன், தமது கற்பனைகளையும் பொய்களையும் நான் ஏற்க வேண்டுமாம். இவ்வளவிற்கும், இவர்கள் யார்? எங்கு, எப்படி, எப்பொழுது உருவானவர்கள்?
25வது ஆண்டு நிறைவு
அடுத்த ஆண்டு 2015ல் எனது மனித உரிமை செயற்பாட்டின் 25வது வருடம். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமர்வுகளில் தொடர்ந்து கடந்த 24 வருடங்களாக பங்கு பற்றி வருகிறேன். இக் காலவேளையில் - பல நாட்டின் தலைவர்கள், முக்கிய புள்ளிகள், சர்வதேச மனித உரிமைச் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர் போன்று பலரை சந்திந்துள்ளேன்.
அத்துடன், பல்கலைக்கழகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும், மனித உரிமை கல்வி, பயிற்சி ஆகியவற்றை பெற்றுள்ளேன். இவ் வேளைகளில் சிறிலங்காவின் நீதித்துறை, சட்ட மா அதிபர், பாதுகாப்பு பிரிவின் காரியாலயங்களில் கடமையாற்றுவோர், சிறிலங்காவின் புத்திஜீவிகள் சிலர் என்னுடன் கல்வி, பயிற்சிகளை பெற்றுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட பல அமைச்ர்களுடனும், சிறிலங்காவின் இராஜதந்திரிகள் முக்கிய புள்ளிகளுடனும், ஐ.நா. மனித உரிமை சபை அமர்வு வேளைகளில், ஒரு தடவை அல்ல, பல தடவைகள் - பல சர்வேதேச இராஜதந்திரிகள், முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட கூட்டங்களில், வெற்றிகரமாக விவாதம் செய்திருக்கிறேன் என்பதை, டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், டக்ளஸிடமும், ராஜபக்சவின் ஆட்கள் ராஜபக்சவிடமும், வினாவினால் அவர்களே இவற்றை கூறுவார்கள். இவை பற்றி செய்திகள் உடனுக்குடன் சிறிலங்காவின் – சுதந்திர ஆங்கிலம், தமிழ், சிங்கள பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
என் மீதான எரிச்சல் பொறாமைக்காக, நான் ஆதாரத்துடன் கூறும் உண்மைகளை கண்டு, “இவன் எங்கள் இருப்பிற்கே உலை வைக்கிறான்” என்று யாரும் பயந்து பிரயோசனம் இல்லை.
முள்ளிவாய்க்காலின் முன்பு தமிழர்களது மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது, “கல்லில் நார் உரிப்பதற்கு சமமானது.” சர்வதேச சமுதாயம், சர்வதேச பிரதிநிதிகளின் ஆதரவு தமிழர்களுக்கு ஆறவே கிடைக்காத காலம்.
முள்ளிவாய்க்காலின் பின்னர், ஐ.நா. மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது ஒரு பெரிய விடயம் அல்ல. அங்கு எம்மை எதிர்ப்பதற்கோ, கேள்வி கேட்பதற்கோ, கடுமையாக நடப்பதற்கு அங்கு யாரும் இல்லை. இதற்கு பதிலாக அங்கு பலருடைய உதவிகள், தமிழர்களது மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு உண்டு.
மூக்கு உடைபட்ட தமிழன்
எந்தவித மனித உரிமை கல்வியோ, பயிற்சியோ அனுபவமோ அற்ற இவர்களினால், தம்பட்டம் அடிப்பதை விட, பாதகத்திற்கு மேலாக சாதகமாக தமிழர்களுக்கு எதை செய்ய முடியும்?
உதாரணமாக, கடந்த மனித உரிமை சபையில், பாலஸ்தீன மக்கள் பற்றிய விவாதம் நடைபெற்ற வேளையில், யாழ்பாணத்திலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்த ஒருவர், ஐ. நா. மனித உரிமை சபையின் நடைமுறைகளை அறிந்திருக்காத காரணத்தினால், பாலஸ்தீன விவாதத்தின் பொழுது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றி உரையாற்ற முனைந்தார்.
இவ்வேளையில், சிறிலங்காவின் அரச பிரதிநிதி, இவ்வுரை சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டது என கூறி, இடையூறு செய்தார். உடனடியாக சபை தலைவர் இவ்வுரையை நிறுத்தியது மட்டுமல்லாது, இவ்வுரையை ஐ. நா. மனித உரிமை சபையின் இணையதளத்திலிருந்தே நீக்கிவிட்டார்.
மனித உரிமை சபையில் இருந்தோர் இச் சம்பவத்தை, ஓர் தமிழனது உரையாகவே பார்த்தார்களே ஒழிய, யாழ்பாணத்திலிருந்து தகவல் திரட்டுவதற்காக ஜெனிவாவிற்கு வந்த தனிப்பட்ட ஒருவரது உரையாக பார்க்கவில்லை. தகவல் திரட்டுவதற்காக ஜெனிவா வந்த ஒருவரது செயற்பாட்டால், முழு ஈழத் தமிழ் இனத்தின் கௌரவம், மானம், ஜெனிவாவில் காற்றில் பறந்தது என்பதே உண்மை.
யாழ்ப்பாணத்தில் உள்ள “யாழ் ஊடக அமையத்தில்”, விரும்பியவர்கள் யாவரும், தாம் விரும்பியவற்றை கூறலாமா? அல்லது இதற்கு சில விதிமுறைகள் உண்டா? என்பதை நாம் அறிய விரும்புகிறோம். காரணம், வெளிநாடு சென்று திரும்பும் சிலர், விசேடமாக ஐ. நா. மனித உரிமை சபையில் நடந்ததாக கூறப்படும் கற்பனை கதைகளையும் பொய்களையும், யாழ் செய்தியாளர்கள் எப்படியாக உறுதிப்படுத்துகிறார்கள்? “யாழ் ஊடக அமையம்” அதனது பெயர் புகழை இழக்க வேண்டுமென்ற நோக்கிலேயே சிலர் தமது வேலை திட்டங்களை மேற்கொள்கிறார்களா?
ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டில் யாவரும் கலந்து கொள்ள வேண்டுமென்பதை நான் மிகவும் நீண்ட காலமாக ஊடகங்களில் கூறிவருவதை யாவரும் அறிவார்கள்.சர்வதேச மொழிகளில் ஆளுமை அற்றவர்களும, அரசியல் சரித்திரம் ஒழுங்காக தெரியாதவர்களும், சிறிலங்கா அரசின் நிலைபாட்டிற்கு வக்காளத்து வாங்குபவர்களும், சிறிலங்கா அரசிற்கு தகவல் சேர்ப்பவர்களும், குழப்பவாதிகளும் அங்கு செல்வதால் தமிழினத்திற்கு எந்தவித பிரயோசனமும் இல்லை.
“நாங்கள் இவற்றை பார்த்து கொள்ளுவோம், நீங்கள் ஏன் இங்கு வந்தீர்களென”, என எவ்வேளையிலும் யாருக்கும் கூறியது கிடையாது, இது எனது வேலையும் இல்லை. கடந்த மனித உரிமை சபையில் பங்கு கொண்ட ஒரு பெண்ணிடம், இப்படியாக நான் கூறியதாக ஓர் விசமத்தனமான கட்டுக்கதை உலாவுவதாக அறிந்தேன். இக் கட்டுக்கதையின் இரகசியத்தை, நோக்கத்தை மக்கள் அறியும் காலம் வேகு தூரத்தில் இல்லை.
தகவல் திரட்டப்படுகிறது
கடந்த மனித உரிமைச் சபையில் ஏறக்குறைய 45 தமிழர்கள் பங்குபற்றியுள்ளார்கள். இவர்களில் சிலர், யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளை கடுமையாக விமர்ச்சித்தவர்கள், ஒரு சிலர் மகிந்த ராஜபக்சவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள், வேறு சிலர், டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்புகளை கொண்டவர்களாகவும் காணப்பட்டார்கள்.
இவர்கள் சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம், சர்வதேச விசாரணை, இன அழிப்பு போன்ற கவர்ச்சியான சொற்பதங்கள் மூலம், மிக உணர்ச்சி வசப்பட்ட தமிழர்களை நன்றாக ஏமாற்றுபவர்களாக கணப்படுகிறார்கள்.
இவர்கள் தமது ஏஜமான்களுடன், இரண்டாம் மூன்றாம் நபர்கள் மூலம் தொடர்புகளை பேணுபவர்கள். இவ் நபர்கள், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான, மிகவும் திறமையான பயிற்சிகள் பெற்றவர்கள். ஆகையால், இவர்களை இனம் காணுவது மிகவும் கடினம். இவர்களது உரை, கதை, பழக்க வழக்கங்களை மிகவும் அவதானமாக அவதானிப்பவர்களால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும். இவ் வேலைத்திட்டத்திற்காக, ராஜபக்ச அரசு பெரும் தொகை பணத்தை, மாதாந்த ஊதியத்திற்கும், பயிற்சிகளுக்கும் செலவிட்டு வருகிறது.
உதாரணத்திற்கு ஓர் சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஜெனிவாவில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், யாழ்பாணத்திலிருந்து வருகை தந்த ஒருவர், எமக்கு தெரியாமலே எமக்கு அருகாமையில் வந்து எமது சம்பாசணைகளில் தானும் கலந்து கொண்டார். இவ்வேளையில் இவ் நபர், இவ் பாராளுமன்ற உறுப்பினர் அணிந்திருக்கும் அடையாள அட்டையை கவனிப்பதையே தனது நோக்கமாக கொண்டிருந்தார். அவ் அட்டையை கவனித்ததும், உடனடியாக, நீங்கள் எப்படியாக இவ் அமைப்பிடமிருந்து இவ் அட்டையை பெற்றுக் கொண்டீர்களென தனது கேள்விக் கணைகளை ஆரம்பித்து விட்டார். இது அவருக்கு கொடுக்கப்பட்ட தகவல் திரட்டும் பணி.
அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த நபர்
எனது கட்டுரைகளுக்கு தேவையான தகவல்களை எப்பொழுதும் மிகவும் கவனமாக ஆராய்ந்து பெற்றுக் கொள்வது வழமை. இப்படியாக ஆராயும் வேளையில், கடந்த அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த சில நபர்கள் பற்றிய பல தகவல்களை பெற்றுக் கொண்டேன்.
தற்பொழுது, இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையில் பெரும் போட்டி காரணமாக, இவர்களை மாறி மாறி ஜனதிபதி ராஜபக்சவுடன் நெருங்கி வியாபாரம் செய்பவர்களாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னை பொறுத்த வரையில், இவர்கள் இருவரும் வியாபாரிகள், நிச்சயம் லாபம் பெரிதளவு காணப்படும் இடத்தில் தமது வியாபாரத்தை செய்வார்கள். இதை அரசியலாக மாற்றுவதற்கு முன், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி மிக தீவிரமாக பேசுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சில தமிழர்கள், இவ் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றை, புலம்பெயர் வாழ் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டுமென மிகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி, இவ் தொடர்பு நிறுவனத்திடம் நிதி உதவி பெற்று செயற்படுவதாக அறியப்படுகிறது. அப்படியானால், “மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும்” காட்டும் இரட்டை நாக்கு, இரட்டை வேடம், இவ் அரசியல் கட்சிக்கு தேவையா?
இணையத் தளங்களில் பிரசுரமாகும் படங்களை, பலர் மிகவும் அவதானமாக பார்ப்பதில்லை! அப்படியானால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள, முதலாவது படத்தில் காணப்படுபவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். (படம் இலக்கம் - 1)
kiruba-001.jpg

யாழ் சிவில் அரங்கு
யாழ்ப்பாணத்திலிருந்து இயங்குவதாக கூறப்படும் யாழ்ப்பாண சிவில் அரங்கு என்பது யாரால் எப்பொழுது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
இக்கேள்வியை கேட்பதற்கான முக்கிய காரணம், இவ் சிவில் அரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் உள்ளதாக கூறப்பட்ட பொழுதிலும், வெளிநாடுகளில் நடைபெறும் மாகாநாடுகள், கூட்டங்களுக்கு, ஒரு நபர் மட்டுமே கலந்து கொள்கிறார்.
அது மட்டுமல்லாது, தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்கள் கலந்து கொள்ளும் மாகாநாடுகள், கூட்டங்களில் மட்டுமே சிவில் அரங்கின் பிரதிநிதி கலந்து கொள்வது மட்டுமல்லாது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்கு, சிவில் அரங்கின் பிரதிநிதி வக்காளத்து வாங்குவதையும் நாம் பல இடங்களில் அவதானிதுள்ளோம்.
இவ் யாழ்ப்பாணத்து சிவில் அரங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதா?
ஆகையால் இவ் விடயத்தில் ஓர் தெளிவான கருத்தை, நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்வதற்காக உரியவர்கள். தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர், தமது மௌனத்தை கலைத்து உண்மைகளை கூறுவார்களா?;.
இதேவேளை ஓர் சிவில் அரங்கின் அங்கத்தவர், எப்படியாக ஒருவரது அரசியல் சிந்தனைக்கு வக்காளத்து வாங்க முடியும்? இப்படியான நடவடிக்கைகளால் தான் ராஜபக்சா அரசு> இன்று புலம் பெயர் நாட்டில் உள்ள, சாத்வீக சமாதான அமைப்புக்களை, பயங்கரவாத அமைப்புக்களென கூறி தடை செய்துள்ளதுடன் நியாயப்படுத்துகிறது.
இக்கட்டுரைக்கு ஆதாரமாக மேலும் இரு படங்களை இத்துடன் இணைத்துள்ளேன் - (இலக்கம் 2, இலக்கம் 3)
kiruba-002.jpg
kiruba-003.jpg
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் இப்படங்களிற்கு, சளாப்பல் அற்ற, மக்கள் ஏற்க கூடிய சரியான விளக்கத்தை கொடுப்பார்களென நம்புகிறேன்.
இப்படியான பின்னணிகளை 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டிருந்த நபர்கள் தான், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ் தேசியத்திற்கும் குரல் கொடுக்கப் போகிறார்களா? இவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்களா?.
தமிழ் தேசிய கூட்டமைப்பை யார் பிரித்தார்கள்? எதற்காக பிரிக்கப்பட்டது? என்பவற்றை மக்கள் இன்றுடன் மிக தெளிவாக விளங்கிக் கொள்வாரகளென நம்புகிறேன்.!
இதே இடத்தில் ஓர் முக்கிய கேள்வி மனதில் தோன்றுகிறது. யுத்தவேளையில், இவ் நபர் என்ன செய்தார்? இவருடைய சிந்தனை, கருத்து, செயற்பாடுகள் யாவும் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தாரா என்பதை, மக்கள் இவர்களிடமிருந்து கேட்டு அறிய வேண்டும். இக் கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் பதில் கொடுப்பார்களா?
இவ் விடயத்தில், அடுத்த கட்டுரைக்கான போதிய தகவல்கள், ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை சகலருக்கும் அறியத் தருகிறேன்.
புலம்பெயர் வாழ் அமைப்புகளுக்கு தடை
கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர் தேசத்தில் இயங்கும் 16 தமிழ் அமைப்புகளும், 424 தனி நபர்களும், சிறிலங்கா அரசினால், ஐ. நா. பாதுகாப்பு சபை பிரேரணை, 1373க்கு கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாம்!
தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களில், ஐந்து அமைப்பு (தமிழீழ விடுதலை புலிகள், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வு கழகம், உலகத் தமிழ் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு) தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் யாவும் மிக அண்மையில் உருவாக்கபட்டவை.
அடுத்து, தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களும், 424 தனி நபர்களும், வெளிநாடுகளிலேயே வாசிக்கிறார்கள் அல்லது அமைந்துள்ளது.
ஐ. நா. பாதுகாப்பு சபையின் பிரேரணை 1373 என்ன கூறுகின்றதென ஆராய்வோமானால், “எல்லா நாடுகளும்” இணைந்த நடவடிக்கையென கூறப்படுகிறது.
UN Document
அப்டியானால், இவ் அமைப்புக்களோ அல்லது நபர்களோ, ஏதாவது சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போயிருந்து, சர்வதேச சமாதானத்திற்கும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியவர்களா இருந்திருந்தால், அவர்கள் நிலை கொண்ட நாடுகளினால் முதலில் இவர்கள் தடை செய்யப்பட்டிருப்பார்கள். அல்லது, இவ் அமைப்புக்களையோ அல்லது தனி நபர்களையோ தடை செய்யும் முன்னர், சிறிலங்கா அரசு, இவர்கள் நிலை கொண்டிருக்கும் நாடுகளை கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படியாக ஒன்றும் நடந்திருக்காத நிலையில், தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது தனி நபரோ, ஒழுங்கான சட்ட ஆலோசனைகளை பெற்று, இவ் தடை மீது நடவடிக்கை எடுக்க முன்வருவார்களெயானால், இவ்விடயத்தை தலைகீழாக மாற்றக் கூடிய நிலை உருவாகலாம்.
இவ் விடயத்தில், ஐ.நா.சாசனத்தின், அத்தியாயம் 7ல், சாரம் 39லிருந்து 51 வரை, கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். http://www.un.org/en.../chapter7.shtml
நீதிமன்றம் செல்ல விரும்பாதோர், இவ்விடயத்தை ஐ.நா.மனித உரிமை குழுவிடம், பாதிக்கப்பட்டவர்கள் (தடை செய்யப்பட்டவர்கள்) என்ற அடிப்படையில், முறையீடு செய்ய தகுதியுடையவர்கள். இதற்கு எந்தவித நிதியும் தேவையில்லை.
http://www.tchr.net/...information.pdf
(Model complaint form for communications under)
Optional Protocol to the International Covenant on Civil and Political Rights
சுவராசியமான செய்திகள்
சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை பற்றி பல சுவராசியமான கதைகள் உண்டு.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில், ஒரு சில மட்டுமே கடுமையாக வேலை செய்பவை. மற்றவை, புலம்பெயர் வாழ் மக்களுக்கு சினிமா காட்டுபவை, தம்பட்டம் அடிப்பவை.
இவ் அமைப்புக்களுக்கு, புலம்பெயர் மக்களது ஆதரவோ அல்லது தமிழ் கல்விமான்கள் புத்திஜீவிகளது ஆதரவு அறவே அற்றவர்கள். இவர்கள் மிரட்டல் பணியில் வேலைகளை மேற்கொள்பவர்கள். தமது அமைப்புக்களின் பெயர் தடைசெய்யப்பட்டதையிட்டு இவர்களுக்கு எல்லையற்ற சந்தோசம்.
தடைசெய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதையிட்டு சில தனிநபர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடத்துகிறார்கள். வேறு சிலர் தமது பெயர் பட்டியலில் இணைக்கப்படாமையிட்டு மிகவும் கோபமும் சோகமும் அடைந்துள்ளார்கள்.
வேறு சிலர், தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களைவிட, தாம் பல மடங்கு கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் சிறிலங்காவின் காதுகளுக்கு இவை எட்டவில்லையென அதிசயப்படுகிறார்கள்.
ஒரு சில நபர், தாங்கள் வாழும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயத்திற்கு தொலைபேசி செய்து, தாம் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்துவந்த எதையும், நீங்கள் யாரும் அறிய முடியவில்லையெனவும், ஆகையால் உங்கள் புலனாய்வு உத்தியோகத்தர் கெட்டித்தனம் அற்ற சோம்பேறிகளென கூறப் போவதாகவும் கூறினார்கள்.
கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை, தொலைகாட்சி செவ்வி ஒன்றில் இவை பற்றி வெளிப்படையாக என்னால் கூறப்படும் வரை, இவ் அமைப்புக்களும் தனிநபர்களும், இந்த தடையினால் மிரண்டார்களோ என்னவோ, திடீரென அமைதியாகி விட்டார்கள். இவர்கள் யாரும் வெளிப்படையாக தம் மீதான தடையை எதிர்த்து எந்த கருத்தையும் கூற முன்வரவில்லை.
எம்மைப் பொறுத்தவரையில் சிறிலங்காவின், இவ் தடை என்பது ஒரு பூச்சாண்டி விளையாட்டு. இது, “நல்லூரில் குண்டுவிழும் வேளையில், ஊர்காவற்துறையில் துவக்கு தூக்கியதற்கு” சமமானது.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம் எனக் கூறும் சிறிலங்கா அரசு, சர்வதேசத்திற்கு “புலி பூஞ்சாண்டி” காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று. இவற்றை கண்டு யாரும் பயப்பிட வேண்டிய அவசியமில்லை. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”. நாம் இவற்றை கண்டு அஞ்சாது தொடர்ந்து வீறு நடை போட வேண்டும்.
எம்மைப் பொறுத்தவரையில், இவ் தடையில் சேர்க்கப்பட்டுள்ள பெயர் வழிகளும், அமைப்புக்களின் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பின் பிரதிநிதிகளும், இவர்களுடன் முக்கிய உரையாற்ற வந்த சில நபரின் பங்கு, பெரிதளவில் காணப்படுகிறது. இங்கு இணைக்கபட்டுள்ள படங்கள் 2, 3 ஆகியவற்றை சரியான முறையில் ஆராய்பவர்கள் இதற்கான விடையை பெற்றுக் கொள்வார்கள்.
மிக விரைவில், ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதிசயப்படாதீர்கள்.
இவ் தடையினால் பிரதானமாக பாதிக்கப்படப் போவது சிறிலங்கா அரசே. எதிர்வரும் கோடை கால விடுமுறைக்கு, சிறிலங்காவிற்கு சென்று வரவுள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களது எண்ணிக்கை பாரியளவில் குறைந்தே காணப்படும்.
உண்மை என்னவெனில், இவ் தடையை காரணம் காட்டி, சிறிலங்காவிற்கு செல்லும் புலம்பெயர் வாழ் மக்கள் எவரையும், எந்தவித காரணம் காட்டாது கைது செய்து, காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கு இத் தடை வழி வகுக்கும். புலம்பெயர் வாழ் மக்கள், தங்களது எதிர்கால நடவடிக்கையை, சரியான முறையில் திட்டமிட்டு, மதிநுட்பமான முறையில் அணுகாத நிலையில், இவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.
தாயகத்திலும் புலத்திலும், தமிழர் தமிழர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்!
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்.
24 மே 2014
TCHR France - tchrfrance@hotmail.com

நேரடியாக தமிழ் தேசிய மக்கள் முன்னையை கேவலப்படுத்தும் இக் கட்டுரைய கண்டிக்கிறேன்

  • தொடங்கியவர்

உண்மைகள் உறங்குவதில்லை ,சிலசமயம் சுடத்தான் செய்யும் .

 

 

 

மிக விரைவில், ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதிசயப்படாதீர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.