Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் மீதான தடை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிற் பிரிவினைப்போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையின்அரசாங்கங்கள் இலங்கையின் சனநாயக விழுமியங்களைச் சிதைக்கக் கூடிய சட்டங்களை இயற்றிக் காலப்போக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்டசனாதிபதி ஆட்சி முறையையும் கொண்டு வந்தன. இவற்றின் நோக்கம் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அதிகாரத்தை பேணுவதாகும்.  ஆனால் இப்பொழுது  இலங்கையின் அரசியற்சூழ்நிலை குடும்ப அதிகாரமொன்றைப் பேணுவதற்கானதாகவும் மாறிவிட்டது.

 

2009 ஆண்டு யுத்தம் நிகழ்ந்த போது சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் இந்த அரசாங்கம் தடை செய்திருந்தது. இப்போது புலம் பெயர்தேசத்துத் தமிழர் அமைப்புக்களையும் தடை செய்திருக்கிறது.

இந்தத் தடையை  இலங்கை அரசு கொண்டு வந்தமைக்கு கீழ்வருவன நோக்கங்களாக  இருக்கலாம்.

 

·         புலம் பெயர் தமிழர்களின் அமைப்புகள் இவ்வரசாங்கத்திற்கெதிராகப் புலத்தில் இருந்து செய்யும் பிரச்சாரங்களைப் பலவீனப்படுத்தல்.

·         புலம் பெயர் தேசத்துத் தமிழ் அமைப்புகளைப் புலிப்பயங்கரவாதிகளாகவும்  எதிர்ப்பரசியற் குழுக்களாகவும்  சிங்கள மக்களுக்கு காட்டி வலியுறுத்தல்.

·         தெற்கில் சரிந்து வரும் தமது செல்வாக்கை மீளக்கட்டி எழுப்புவதற்கு சிங்கள மக்களுக்கு மீண்டும் பிரிவினை அச்சத்தை ஊட்டுதல்

 

மேற்குறித்த  நோக்கங்களினுள்  இலங்கையின் நலன்களை விடவும்  இராச பக்ஸ குடும்பத்தின் நலன்களே அதிகம் உள்ளன.

 

புலம் பெயர் தேசத்துத் தமிழ் அமைப்புகள்  இலங்கையில் நிகழ்ந்த இறுதிப்போரில்  இவ்வரசாங்கம் நிகழ்த்திய இனவழிப்பு மற்றும் போர் குற்றச்செயல்கள் தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தி -இராசபக்ஸ அரசாங்கத்தைக்  குறி வைத்துதொழிற்படுகின்றன  என்பது யாவருக்கும் தெரியும். ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் மேற்குலகம்  இக் குடும்ப அரசாங்கத்திற்கு எதிராக வழங்கும் அழுத்தத்திற்கு  இவ்வரசாங்கத்தின் சீனச் சார்பு நிலை/அல்லது மேற்குலக எதிர்ப்புக் காரணம். இலங்கையின் அரசினது  சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கக்குணாம்சமோ அரசாங்கங்களின் பேரினவாத ஒடுக்குமுறை அணுகுமுறையோ மேற்குலகிற்கு  ஒரு பிரச்சனையே அல்லஒரு நாடு மேற்குலகின் ஆதரவு நாடாக உள்ளவரை உள்நாட்டில் அது என்ன விதமான ஆட்சியைக் கொண்டிருக்கிறது என்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. புலம் பெயர்ந்த  நாடுகளின் தமிழர் அமைப்புகள் வழங்கும் அழுத்தங்களை மேற்கு நாடுகள் தமது நலன்களுக்காகப்பயன் படுத்துவதை மட்டுமே செய்கின்றன.

 

 

புலம் பெயர்  நாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளால்  இலங்கையில் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கான அல்லது வன்முறையான போராட்டத்திற்கான விதைகளைத் தூவ முடியாதுபல்வேறு நாடுகளிலும் சிதறிக்கிடக்கிற தமிழ் மக்களைத் திரட்டி,இலங்கையில் நிகழ்கிற ஒடுக்குமுறைகளைச் சுட்டி  அவற்றை எதிர்க்கும்  ஒரு சனநாயக ரீதியான ஆர்ப்பாட்டத்தைச் செய்தல்  அழுத்த அல்லது லொபிக் குழுக்களாக தொழிற்படுதல் என்பதற்கு அப்பால் இலங்கை தொடர்பான இப்புலம் பெயர் அமைப்புகளின்  வெளிப்படையான அரசியற் செயற்பாடுகள் இருக்க முடியாதுபுலம் பெயர்ந்தவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட  அரசியற் செயற்பாடுகள்  இனவழிப்பு அல்லது போர்குற்றங்களுக்காக  இந்த அரசாங்கத்தை தண்டிக்க வேண்டும் என்ற அளவுக்கு மேல்  போகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தையோ மேற்குலகத்தையோ இந்தியாவையோ இவ்வமைப்புகளால் இலங்கையில் உருப்படியான ஒரு அரசியற் தீர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கும்படி கோரி அழுத்தங்களை வழங்க முடியவில்லை.

 

 

புலம் பெயர் தமிழர்களின் பல அமைப்புகள், தமிழர்கள் தாங்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்களது  கலாசார  மற்றும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்திப்பேணுவதற்கான அமைப்புக்களாகவும்  தொழிற்பட்டு வருகின்றன.  இவ்வகையில் இவற்றின்  முக்கியத்துவமும் இருப்பும் அர்த்தமுள்ளவை.

 

 

இங்கே இன்னும் சில விடையங்களையும்  நாங்கள் அவதானிக்க வேண்டும் இப்புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தங்களுக்குள்  முறையான இடைத்தாக்கத்தையோ  உரையாடலையோ பொது வேலைத்திட்டத்திற்கான முனைப்பையோ கொண்டவை அல்ல. புலத்தில் இயங்கும் பெரும்பாலான அமைப்புகள் இலங்கையில் ஈழத்தை உருவாக்கப்போவதான ஒரு தோற்றத்தையே புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.பல புலம் பெயர் அமைப்புக்கள் ஒழுங்கு செய்யும்போராட்டங்களின் தன்மை அவற்றில் முன் வைக்கப்படும் கோசங்கள் போன்றவற்றை அவதானிக்கும் போது அவற்றின் அரசியல் முதிர்ச்சியின்மை தெரியும். மேலும் புலம் பெயர் அமைப்புகளின் பண பலத்தின் பெரும்பகுதி ஆடம்பரமான விழாக்களிலும் தேவையற்ற விடையங்களிலும் செலவழிக்கப்படுவதாகவும் மக்கள் நலத்தினை அடிப்படையாகக்கொண்டு இச் செலவீடுகள் அமைவதில்லை என்றும்  பலமான குற்றச்சாட்டு உள்ளது.

 

 

முன்பு நான் குறிப்பிட்டபடிக்கு புலம் பெயர் தமிழர்களின் முனைப்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பானதாகவே இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது தொடர்ச்சியான இன அழிப்பின் ஒரு ஒரு துளி மட்டுமே. சிலவேளை போர்க்குற்றங்களுக்காக இந்த அரசாங்கத்தின் தலைவர்களையும் சில இராணுவத்தலைவர்களயும் தண்டித்தல் சாத்தியமானாலும் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இனவாதமேலாதிக்கம் தொடரத்தான் போகிறது. மேலும் இனவழிப்பு என்பது மக்களை நேரிடையாகக் கொல்வது என்ற ஹிட்லர் காலப்பரிமாணத்தை மட்டுமே கொண்டதல்ல. இது சமூக கலாசார பொருளாதார அரசியல் தளங்களில்  எந்தச் சிறுபான்மை இனங்களின் மீதும் சிறுகச்சிறுக மேற்கொள்ளப்படலாம் . உலகில் உள்ள பழங்குடி மக்களில் தொடங்கி  உலகில் வாழும் அனேகமான சிறுபான்மை இனங்கள் இத்தகைய அழிவுக்கு உட்பட்டு வருகின்றன.

 

 

தமிழ் மக்களுக்கு கடந்த அறுபது வருடங்களாக இருந்து வருகிற முக்கியமான பிரச்சனை அவர்களின் சமூக பொருளாதர அரசியல் இருப்பும் அதன் எதிர்காலமும்தான்.

இந்நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் முன்னுள்ள முக்கியமான பணிகளாக  கீழ் வருவனவற்றைக் கருத முடியும்

·        

 

இலங்கையில் தமிழர்களின் இருப்பையும் அரசியல் பொருளாதார  சமூக உரிமைகளையும் பெறுவதற்கான சர்வதேச அழுத்தங்களை வழங்கக்கூடிய அளவுக்கு அரசியல் முதிர்ச்சியையும் ஒற்றுமையையும் அடைதல்.

 

 

 

·         இலங்கைத்தமிழர்களுக்கு புலம்பெயர் சமூகத்தினால் வழங்கப்படக்கூடிய அரசியற் சகோதரத்துவத்தின் உள்ளடகத்தையும் வடிவத்தையும் திட்டமிடுதல்.

 

 

 

·         புலம் பெயர்ந்த தமிழ்ச் சமுகத்துள் சனநாயகச் சிந்தனையை வளர்த்தல்.

 

·         புலம் பெயர்ந்த தமிழர்களை மாயைகளில் இருந்து வெளிக்கொண்டு வருதல்.

 

 

·         புலம் பெயர்ந்த இரண்டாம் முன்றாம் தலைமுறைகளின் மொழி மற்றும் இனம் சார்ந்த ஈடுபாட்டைப் பேணுதல்

 

ஆனால் இவை தொடர்பில் பல புலம் பெயர் தேசத்துத் தமிழ் அமைப்புகள் தெளிவு கொண்டவையாகவோ தமது எல்லைகளைப்புரிந்து கொண்டு செயற்படுபவையாகவோ இல்லை.

 

 

இலங்கையைப்பொறுத்த வரை இவ்வமைப்புகளால் இலங்கைக்குள் தொழிற்படும் அரசியல் கட்சிகள் மீது நேரிடையாக அழுத்தங்களை வழங்க முடியாது. ஆனால் புலம்பெயர் அமைப்புக்களின் பணம்பலம் கவர்சிகரமானதொரு விடையம் எனவே இலங்கையில் உள்ள தமிழ்க்கட்சி ஒன்று  புலம்பெயர் அமைப்பொன்றை நிதித்தேவைகாரணமாக அணுகும் போது தனது திட்டங்களுக்கு  சார்பாக்க அக்கட்சியை இயங்குமாறு கேட்கமுடியும். . ஆனாலும் இலங்கையில் உள்ள எந்தச் சிறுபான்மைக்கட்சியும் இலங்கையின் அரசியலில் தீர்மானமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை அல்ல.  எனவே இந்த வகையான உறவினால் விளைவாகக் கூடிய உண்மையான அரசியற்பயன் என்று எதுவுமில்லை.

புலம் பெயர்ந்தவர்களினால் இலங்கைக்கு கிடைக்கும் முக்கியமான  பயன் அவர்கள் அனுப்புகிற பணம் அல்லது வழங்குகிற   மனிதாபிமான  உதவியாகும். இது இலங்கையின் வடக்கு கிழக்கின்  நுகர்வுப் பொருளாதாரத்திற்கு அவசியமானதென்றும் சொல்லலாம்.

புலம் பெயர்ந்தவர்களினால் செய்யப்படுகிற எந்த வகையான உதவியையும் தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புக்களுடன் தொடர்புபடுத்தித் தடுத்துவிடும் அபாயம் உள்ளதாக சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். அவ்வாறு நிகழ்ந்து மனிதாபிமான நடவடிக்கைகள்  தடைப்படும் போது அதனால் நன்மை அடைந்த சாதாரணமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்

 

 

இலங்கை அரசின் இத்தடை இலங்கையில் இந்த அமைப்புக்கள் நேரிடையாக அல்லது வெளிப்படையாகக் கொண்டிருக்கிற உறவுகளை அறுத்து விடும். தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் வேலை செய்யும் மனிதர்களின் இலங்கையில் வாழும் உறவினர்களை அச்சுறுத்த அல்லது கைது செய்ய இந்தத்தடை இது வழி வகுக்கும். இதனாற் சில அல்லது பல உறுப்பினர்கள் புலத்தில் தங்களது ஈடுபாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

 

 

சனநாயக ரீதியாக இயங்கும் அமைப்புக்களைத்  தடைசெய்வது  ஒரு அரசாங்கத்தின் குணாம்சத்தை தெளிவுபடுத்துவது. உலகம் முழுவதும் அரசாங்கங்கள் எதோ ஒரு தருணத்தில் தங்களது அதிகாரத்தைப்பேணுவதற்கு எதனையாவது தடை செய்தபடிதான் இருக்கின்றன. இவற்றினால் பாதிக்கப்படுவது மக்களே. இந்தத் தடை சிங்கள மக்களை  மீண்டும் தம் பக்கம் திரும்ப வைக்கும் என இந்த அரசாங்கம் நினைக்கிறது. ஆனால்  மேற்குலகின் அழுத்தங்கள் இந்த அரசாங்கத்தை மக்களிடம் இருந்து தன்னை இன்னும் தள்ளி வைக்கச் செய்யும் முடிவுகளை எடுக்கும் படி உந்துகின்றன.  இன்றைக்கு  ஏற்கனவே அன்னியப்பட்டுப்  போயிருக்கிற தமிழ் மக்களை இன்னமும் இன்னமும் தம்மிடமிருந்து அந்நியப்படச் செய்யும் முடிவுகளை எடுக்கிற இவ்வரசாங்கம் காலப்போக்கில் இலங்கையின் எல்லா மக்களிடமும் இருந்து தம்மை அந்நியப்படச் செய்கிற முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படும்

மேற்குலகின் நோக்கமும் அதுதான். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்.

 

 

தேவ அபிரா

04/2014

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105360/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.