Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்ந்தவர்கள் மீது சிறீலங்கா  ‘புலி’ முத்திரை - இலங்கைப் பயணத்தை நிறுத்தும் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டி வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் இலங்கைக்குள் நுழைவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடைவிதிப்பதாகக் கடந்தவாரம் வர்த்தமானி அறிக்கையன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்களை அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் மேலும் கடும் தொனியில் எச்சரித்திருக்கின்றார். தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த ஆயிரக் கணக்கான தமிழர்கள் தங்கள் பயணங்களை இடை நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இந்தப் பட்டியலில் பெயர் குறிப்பிடாத பலரும் தங்கள் பெயரை வெளியிடாது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கியதும் கைது செய்யலாம் என்ற அச்சம் காரணமாகவும், சிறீலங்கா வெளியிட்ட பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் உறவினர்களும் எனப் பல ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் பயணங்களை இடைநிறுத்தியுள்ளனர்.

 

குறிப்பாகப் பரிஸ் தலைநகர் லாச்சப்பலில் மட்டும் சிறீலங்காவிற்கு இம்முறை விடுமுறைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விமானத்திற்கான பயண முற்பதிவு செய்திருந்த சுமார் 400 வரையான பயணச் சீட்டுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதேவேளை, சுவிச்சற்லாந்து, பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா, அவுஸ்திரேலியா நாடுகளிலும் ஏராளமானோர் தங்கள் பயணங்களை இடைநிறுத்தியுள்ளனர். இதேவேளை, இம்முறை விடுமுறையை இலங்கையில் சென்று கழிப்பதற்கு திட்டமிட்டிருந்த பலரும், அதனை மாற்றி வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இது இவ்வாறிருக்க, பிரான்சில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் படிப்படியாக அதிகரித்து வருவதாக சிறீலங்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா சுற்றுலாத்துறை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேவேளை, ‘ஆசியாவின் அதிசயம்’ என்ற தலைப்பின் கீழ் சிறீலங்காப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாசர நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 28ம் திகதி 130 பிரெஞ்சு நாட்டவர்கள் இலங்கை சென்றுள்ளனர்.

 

இவர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இவர்கள் இங்கு முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் சிறீலங்கா தரப்புச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூதலீடு செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவர்கள் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/40436/64//d,fullart.aspx

அப்படியே தம்மை சிறி லங்கன் என்று அழைப்பதையும் நிறுத்தவேண்டும்.

தமிழ் கடைகளில் சிறி லங்கா என்று போடுவதையும் நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களது பெயர் முகவரி அவர்களது மின்னஞ்சல் முகவரி, மூஞ்சிப்புத்தகத்தில் அவர்களுடன் தொடர்புடையோர்,தவிர புலத்தில் உள்ள புலனாய்வுத்தகவல்கள் அடிப்படையில் பட்டியலிடப்பட்டோர் என பல்லாயிரக்கணக்கானவர்களது  புலமெயர் தமிழர்களது பட்டியல் தொடர்கின்றது.

 

கடந்த ஜெனிவாவில் தீர்மான நிறைவேற்றும் காலப்பகுதியில் பளையில் துண்டுப்பிரசுரம் வினியோகித்த இருவரது தகவல்களது அடிப்படையில் வடபகுதியில் கிட்டத்தட்ட இருநூறுபேர் மட்டில் இராணுவப்புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சிலர் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

 

அங்கே போங்கோ ஆப்பு ரெடியாக இருக்குது. அதுவும் மீண்டும் திரும்பப்பெறமுடியாத ஆப்பு.

இப்போது சிங்களவனே இலங்கையை "புறக்கணிக்க" சொல்லி சொல்லுகிறான்...இதுவும் ஒரு வெற்றியே :)

 

இவ்வளவு நாளும் தமிழர் சொல்லி தமிழர் கேட்கவில்லை....ஆனால் சிங்களவனின் ஒரே ஒரு செயல்...முழு நிலையையும் தலை கீழாக மாற்றி விட்டது... :)

 

இதற்குப்பிறகும் இலங்கை போகும் தமிழர்களை மாற்றுக்குழுக்கள்..துரோகிகள் என்று உடனடியாக இனம் காணலாம்......அவர்கள் என்ன தைரியத்தில் இலங்கை போகிறார்கள்...அவர்களுக்கும் சிங்களவனுக்கும் ஒரு "understanding" இருக்கவேண்டும் தானே.....

Edited by naanthaan

ஐந்து வருடமா கனடாவில் மொத்தமா 4 பேர் சால்வையோட காவல்.

சூரிய சந்திர சக்கரவர்த்தி இப்போதைக்கு வரமுடியாது.

தமிழ் இனத்திற்கு இடர் ஏற்படுத்துவோர்(துரோகிகள் என்றால் காட்டிகொடுக்கும் மனம் நோகும்)

இரகசியமா கூட்டம் போட்டு புலம்பி தள்ளவேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.