Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்?
21 ஏப்ரல் 2014
question-1_CI.jpg
 
 
விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருளாளரைக் கைது செய்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், நீண்ட விசாரணைகளின் பின்னரே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை சந்தேக நபருக்கு சொந்தமான விளையாட்டுக் கழகம் ஒன்றை காவல்துறையினர் முடக்கியுள்ளதாகவும், வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குறித்த நபருக்கு பாரியளவில் பணம் கிடைக்கப்பெறுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த  வர்த்தகர் கனடா, இந்தியா மற்றும் மேலும் நாடுகளில் உள்ள நபர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பாடியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
குறுகிய காலத்தில் புலிகளை மீள ஒருங்கிணைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் குறித்த வர்த்தகர் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ள  காவல்துறையினர், புலம்பெயர் புலி ஆதரவு தரப்பினருடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் கூறியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிடுகிறது.
 
இதே வேளை வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளின் தடையின் பின்னால், புலம்பெயர்ந்நத மக்கள் தமது உறவினர்கள், நண்பர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு அனுப்புகின்ற பணம் குறித்து கவனத்தை எடுத்துள்ள இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும், பணம் அனுப்பப்படும் மூலங்களை தெரிந்து கொண்டு, அதிகளவு பணத்தை பெறுபவர்களை புலிகளுடன் தொடர்புடையவர்களாக இனம்காட்டி கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

இம்மாத ஆரம்பத்தில் ,, கோபி,, என்ற வெற்றி  படத்தை தந்த இயக்குனர் ஆர்.கோத்தா மேலும் பல திரைப்படங்களுக்கு  பூஜை போட்டுள்ளார். திரைக்கதை வசனம், இயக்கம், பாடல்களை அனைத்தையும் தானே நெறிப்படுத்த உள்ளார். கதாபாத்திர தெரிவு நடைபெற்று வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.