Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்;'

Featured Replies

"உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்;' தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாரதிராஜா கடும் கண்டனம்

என்னை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பேட்டியையும் பாரதிராஜா அளித்துள்ளார்.

பாரதிராஜாவின் இலங்கை பயணம் குறித்தும் பிரபாகரனை சந்தித்தது குறித்தும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பாரதிராஜா பிரபாகரனை சந்தித்ததன் பின்னணி என்னஇ வைகோ மூலமாக ஜெயலலிதாவுக்கு புலிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் புகார் கூறினார் கிருஷ்ணசாமி. இதற்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழக காங்கிரஸைச் சேர்ந்த பெரியவர்கிருஷ்ணசாமி கடந்த 2, 3 நாட்களாக தேவையில்லாமல் என்னைப் பற்றிய விமர்சனங்களை பத்திரிகைகள் வாயிலாக தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அறிக்கைகளுக்கு அறிக்கை மூலம் பதில் சொல்வது என்பது அரசியல் நடத்துவதற்குச் சரியாக இருக்கலாம். உணர்வுப்புூர்வமான ஒரு பிரச்சினைக்கு பதில் அறிக்கை விட்டு அறிக்கைப் போர் நடத்துவது அநாகரீகமானது எனறுதான் நான் ஒதுங்கியே இருந்தேன். ஆனால் ஏதோ காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு தினமும் ஒரே தவறான செய்தியை திரும்பத் திரும்ப சொல்லி என்னை இப்படி ஒரு அறிக்கை விட வைத்து விட்டார். நெய்வேலி போராட்டம் ஒருவரலாற்றுப் பதிவு. காவிரி தண்ணீருக்காக தஞ்சை விவசாயிகளுக்கு அவர்களின் துயர் துடைப்பதற்கு அரசியல் சுூழல்காரணமாக நீங்கள் யாருமே குரல் கொடுக்காதபோது, ஒட்டுமொத்த தமிழ்த திரையுலகமும், விவசாயப் பெருங்குடி மக்களும், தமிழ் உணர்வாளர்களுமான இரண்டு லட்சத்துக்கும் மேலான என் இனிய தமிழ் மண்ணின் மைந்தர்கள், கை கோர்த்து நடத்திய உணர்வுப்புூர்வமான மிகப் பெரிய பயணம் அது. அதற்கு தலைமை தாங்கிய பெருமை எனக்கு எப்போதும் உண்டு. தமிழ்த் திலையுலகின் எல்லாக் கலைஞர்களும் ஒரு சேர திரண்ட விழா அது என்பதால் பொறுப்புணர்ச்சியோடு அந்த பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்போதைய முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா செய்து தந்தார்.

யாரும் பின்ணிருந்து என்னை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் குறிபபிட்டவர்களும் இல்லை. நான் பிறப்பால் தமிழன். தமிழ் கிராம தெருக்களையே பள்ளிக் கூடங்களாக படித்து வளர்ந்து வந்தவன். இந்த மண் என்னை நேசிக்கிறது. நான் இந்த மண்ணை நேசிககிறேன். இந்த மக்கள என்னை நேசிக்கிறார்கள். என்னுடைய 40 ஆண்டு கால கலையுலகிலும் சரி, என் தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த, கலை, கலாச்சார பண்பாட்டுப் பரிவர்த்தனைகளிலும் சரி என்னைப் பற்றிய நிர்வாண உண்மைகள் என் இனிய தமிழ் மக்களுககுத் தெரியும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித் தலைவி ஜெயலலிதா, மக்கள் தலைவர் மூப்பனார், தோழர்கள் நல்லகண்ணு, சங்கரய்யா, டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என்று கட்சி பாகுபாடின்றி எல்லாத் தலைவர்களோடும் பாகுபாடின்றி நெருங்கிப் பழகுகிற வாய்ப்பை பெற்றுத் தந்த கலையுலகம்தான் இந்த் பேரணிக்கு தலைமை தாங்குகிற வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

யாரிடமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, எந்த நிழல் குடையிலும் நிற்காத, யாருக்கும் கை கட்டாத ஒரு தன்மானத் தமிழன் என்பதில் எனக்கு நானே கம்பீரமாக கர்வப்பட்டுக் கொள்வது உண்டு. இன உணர்வையும், மொழி உணர்வையும் இந்த மண்ணின் நுகர்வையும் யாரும் சொல்லிக் கொடுத்த வருவதிலலை. அது பிறப்பால் வருவது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் எனது பேட்டி வெளியானது. இன்றளவும் இருபதுஆண்டுகளுக்கு மேலாக புலம் பெயர்ந்து, நிற்க நாதியில்லாது உயிரைக கையில் பிடிததுக் கொண்டு நாலா திசையிலும் சின்னாபின்னப் பட்டுக்கிடக்கிற என்தமிழ் சமுதாயத்தை ஒரு இனத்தை நம்மில் பெரியவர் யாராவது காப்பாற்றி விட மாட்டாரா என்ற ஆதங்கத்தில் கொடுத்த பேட்டி அது. அதை கொச்சைப்படுத்தாததீர்கள்.

ஜெயலலிதா, வைகோ, விடுதலைப் புலிகள். இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை அன்பு கூர்ந்து அரசியல் உலகில் மட்டம் வைத்துக கொள்ளுங்கள். உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம் என்று தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறேன். அரசியல், பணம் என உங்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நான் வேண்டாம் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜா நல்ல கலைஞன், அவரின் தமிழீழ விஜயம் எந்த விதத்தில் எமக்கு பயனளிக்கும் என்று புரியவில்லை!!!

ரிசி அவசரம் ஏன்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.