Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை றக்பி அணித் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிப்பு

Featured Replies

 

தென் கொரியாவுக்கு எதிராக இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஐந்து நாடுகள் (ஏஷியன் ஃபைவ் நேஷன்ஸ்) பிரதான பிரிவு றக்பி போட்டியில் பங்குபற்றும் பொருட்டு இலங்கை றக்பி அணி நேற்றிரவு அங்கு புறப்பட்டுச் சென்றது.

ஆசிய றக்பி தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களை வகிக்கும் ஜப்பான், ஹொங் கொங், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய நாடுகள் இப் போட்டியில் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.

5216namal2.jpg

 

இப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை றக்பி தெரிவுக் குழுவினரால் 23 வீரர்கள் அடங்கிய இலங்கை றக்பி குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற செரெண்டிப் மும்முனை சர்வதேச றக்பி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கு தலைவராக விளையாடிய நாமல் ராஜபக்ஷ, தற்போதைய இலங்கை றக்பி அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய ஐந்து நாடுகள் முதலாம் பிரிவு போட்டிகளில் சம்பினானதன் மூலம் பிரதான பிரிவுக்கு தரமுயர்த்தப்பட்ட இலங்கை அணியின் தலைவராக விளையாடிய யோஷித்த ராஜபக்ஷவும் தற்போதைய அணியில் இடம்பெறுகின்றார். இவர் உபாதைக்குள்ளாகியிருந்ததன் காரணமாக செரெண்டிப் மும்முனை சர்வதேச றக்பி போட்டிகளில் விளையாடவில்லை.

இம் முறை தெரிவுசெய்யப்பட்டுள்ள 23 வீரர்களில் பத்து வீரர்கள் கடற்படை அணியைச் சேர்ந்தவர்களாவர்.

நடந்து முடிந்த டயலொக் ஏ பிரிவு லீக் றக்பி போட்டிகளிலும் டயலொக் க்ளிபர்ட் கிண்ண நொக் அவுட் றக்பி போட்டிகளிலும் முதல் தடவையாக சம்பியனான கடற்படை அணியில் அதீத திறமையை வெளிப்படுத்திய பத்து வீரர்களே இலங்கை றக்பி குழாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

எவ்வாறாயினும் அணியை இரட்டை வெற்றிக்கு வழிநடத்திய அணித் தலைவர் ரோஹித்த ராஜபக்ஷவுக்கு இலங்கை அணியில் வழங்கப்படாதது வியப்பிற்குரியதாகும்.

தென் கொரியாவுடனான போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை இன்ச்சொன் ஒக்சிலரி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹொங் கொங் அணியை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மே மாதம் 3ஆம் திகதி இலங்கை அணி சந்திக்கவுள்ளது.

ஜப்பானை டோக்கியோ றக்பி அரங்கில் மே மாதம் 10ஆம் திகதி சந்திக்கவுள்ள இலங்கை அணி, தனது கடைசி லீக் போட்டியில் பிலிப்பைன்ஸ் அணயை குதிரைப் பந்தயத் திடலில் மே 17ஆம் திகதி எதர்கொள்ளவுள்ளது.

இந்த நான்கு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் இலங்கை வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்தும் பிரதான பிரிவில் நிலைத்திருக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

இலங்கை றக்பி குழாம்: நாமல் ராஜபக்ஷ (அணித் தலைவர்), சத்யா ரணதுங்க, டெரன்ஸ் ஹென்றி, ஷாரோ பெர்னாண்டோ, ஹசித்த பெரேரா, தனுஷ்க பெரேரா, யோஷித்த ராஜபக்ஷ, பிலால் ஹசன், ரொஷான் வீரரட்ன, நிரோஷன் பெர்னாண்டோ, லீ கீகல், தனுஷ்க ரஞ்சன், சந்துன் ஹேரத், சாமர தாபரே, ரீஸா முபாரக், ஹேஷான் கல்ஹார, அச்சல பெரேரா, சுஹிரு அன்தனி, தினேஷ் சஞ்சீவ, துஷன்த லெவ்கே, ஸ்ரீநாத் சூரியபண்டார, சானக்க சந்திமால், தினுஷ சத்துரங்க.

பயிற்றுநர் : லெனார்ட் டி சொய்ஸா, அணி முகாமையாளர்: எயார் கொமடோர் லெனார்ட் ரொட்றிகோ, உதவி பயிற்றுநர்: மோதிலால் ஜயதிலக்க, உடற்கூற்று மருத்துவர்: ப்ரியன்கர புத்திக்க.

metronews.lk/article.php?category=sports&news=5216#sthash.brBQ1J2z.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.