Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் 10 வீடுகளில் 300 பவுன் கொள்ளை.

Featured Replies

வவுனியாவில் 10 வீடுகளில் 300 பவுன் கொள்ளை.

ஞாயிற்றுக்கிழமைஇ 10 செப்ரெம்பர் 2006 ஜோசெப்

வவுனியா குருமன்காடு பிரதேசத்தை அன்மித்த பகுதியிலுள்ள 10 வீடுகள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்ர் தெரிவித்தனர். இதன்போது சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 300 பவுன் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் அண்மைக் காலங்களில் ஒரே பாணியில் கொள்ளையிடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

www.nitharsanam.com

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. புலிகள் பகுதியில் வாழ விரும்பினால் திருட்டை நினைக்கக் கூடாது. :P

  • தொடங்கியவர்

வவுனியாவில் கருணா குழுவினரால் கொள்ளை.

தாலிக் கொடிகள் பெறுமதியான பொருட்கள் அபகரிப்பு.

09:47:56

வவுனியாவில் நேற்று இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வவுனியா மன்னார் வீதியில் முகாம் அமைத்திருக்கும் இராணுவ துணைக்குழுவான கருணா குழுவினரால் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு வவுனியா குருமன் காட்டு சந்தி காளி கோயில் வீதியிலுள்ள வீடுகளுக்குள் புகுந்த கருணா குழுவினர் வீட்டிலுள்ளவர்களை அடித்து துன்புறுத்தியது மட்டுமின்றி பெண்களின் தாலிக் கொடிகள் பெறுமதியான நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது சுமார் 20 க்கும் மேற்பட்ட கருணா குழுவினர் சம்பந்தப்பட்டிருந்ததாக எமது வவுனியா செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பிரபல்யமான பணக்காரர்களில் ஒருவரான முத்துராசா ஜீ எஸ் வீட்டிலும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைய நாட்களாக கருணா குழுவினரின் இத்தகைய நடவடிக்கைகள் வவுனியாவில் அதிகரித்திருப்பதினால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

www.athirvu.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தமிழர்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளிலேதான் எடுக்க வேண்டியுள்ளது, தமிழருக்கு விரோதமக நடக்கும் எந்த விதமான காரியங்களுக்கும் தட்டி கேட்பதற்கு யாருமே இல்லை.

அன்மையில் வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கயிலும் தமிழர்களின் பாதுகாப்பைக் குறித்தோ அவர்களுக்கு விரோதமாக வெளியரங்கமாக செய்யப்படுகின்ற கொடுந்தீமையைப் பற்றியோ ஒன்றுமே தெரியாதவர்களைப் போல பாசாங்கு காட்டியுள்ளார்கள்.

எனவே, தமிழர்கள் தான் தங்களுடைய பாதுகாப்பை நிச்சயப் ப்டுத்திக்கொள்ள வேண்டும்.

இப்படியான ஓர் நேரத்தில், எனக்கு விளங்க வில்லை இன்னும் ஏன் இவர்கள் தங்களுடைய சொந்தப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பெறுமதிமிக்க பொருட்களை எப்பொழுதும் காவிக்கொண்டு அலைந்து திரிகிரார்கள் என்று?

எனக்குத் தெரியும் ஒரு பக்கத்து வீட்டுப் பெண்மனி ஈPKF யின் காலத்தில் தனது சீதனச் சொத்துக்களை காவிக்கொண்டு திரிந்ததன் நிமித்தம் கடைசியில் எல்லவற்றையும் பறிகொடுத்து தனது சொந்த சீவியத்தையும் ஒரு ஜவானிடத்தில் பறிகொடுத்தாள்.

அண்மையில் கூட மலையகத்தில் ஒர் தமிழ் குடும்பம் வெகு பெருமதிமிக்க தங்கம், பொண், வெள்ளி என்பவற்றை சிங்ககள காடையர்களிடம் பறிகொடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எமது சனங்களுக்குத்தான் எப்பொழுது அறிவு வரும். பாதுகாப்பான ஒரு இடத்திலே அவற்றை வைத்துவிட்டு தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொன்டால் தான் என்ன?

தங்களது சொத்துகளை தேசியப் போராட்டத்திக்கேனும் நல் மனதோடே கொடுத்துவிட்டுப் போனால்ல்தான் என்ன?

இது எல்லோருக்கும்:

~ சிந்திக்கும் காலம் செயற்படும் நேரம்! ~

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.