Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களால் புற்றுநோய் ஆபத்து

Featured Replies

'கால்சியம் கார்பைடு' கற்கள் மூலம், செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தால், உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுவதோடு, புற்றுநோய் ஆபத்தும் உண்டு என, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் எச்சரித்து உள்ளார்.

 

தற்போது, மாம்பழ சீசன் துவங்கி விட்டது. தமிழகம் முழுவதும், பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இயற்கையாக பழுக்க, இரண்டு வாரம் வரை ஆகும் என்பதால், அதுவரை காத்திராமல், 'கால்சியம் கார்பைடு' என்ற வேதிக்கல் உதவியுடன், செயற்கையாக பழுக்க வைத்து, பணம் பண்ணவே, பெரும்பாலான வியாபாரிகள் விரும்புகின்றனர்.

 

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: மாம்பழம் இயற்கையாக பழுக்க, 12 முதல் 15 நாட்கள் ஆகும். செயற்கையாக பழுக்க வைக்க, இரண்டு நாட்களே போதும். இதற்காக, தடையை மீறி, வியாபாரிகள், 'கால்சியம் கார்பைடு' கற்களை, பழக்கூடையின் கீழே வைக்கின்றனர். இக்கற்களில் இருந்து, 'அசிட்டிலீன்' வாயு வெளியேறுகிறது. இதனால், காய்கள் சீக்கிரம் பழமானது போல் காட்சி அளிக்கின்றன. ஆனால், பழத்தின் நீர் சத்து உறிஞ்சப்பட்டு, உள்ளே வறட்சியாக காணப்படும். இதை சாப்பிடுவதால், வயிற்றுப் போக்கு, வாந்தி, தீராத தலைவலி, மயக்கம் வரும். தொடர்ந்து சாப்பிடுவதால், பெரும் சிக்கல் ஏற்படும். 'கால்சியம் கார்பைடு' கற்களில் இருந்து, புற்றுநோயை உருவாக்கும், 'ஆர்சனிக்' என்ற வேதிப்பொருள் பழத்தைச் சுற்றி படர்ந்து விடும். இதை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. செயற்கையாக பழுத்ததில், பழத்தை சுற்றி, சாம்பல் படர்ந்திருக்கும்; கரும் புள்ளிகள் இருக்கும். வெளியில் பழுத்தது போலவும், உள்ளே காயாகவும் இருக்கும். இயற்கையாக பழுத்த பழங்களில், இதுபோன்ற நிலை இருக்காது. குறைந்த விலையில் கிடைக்கிறது என, இவற்றை வாங்கி சாப்பிடாமல், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும், வியாபாரிகளுக்கு, இதை வலியுறுத்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

2 டன் பழங்கள் பறிமுதல்:

 

 

சென்னையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மூன்று குழுக்களாக பிரிந்து, சென்னை கோயம்பேடு, தி.நகர், கொத்தவால்சாவடி மார்க்கெட்களில், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 'கார்பைடு கற்கள்' வைத்து பழுக்க வைக்கப்பட்ட, இரண்டு டன் மாம்பழம், அன்னாசி உள்ளிட்ட பழங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இவை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. வியாபாரிகள் எதிர்ப்பு: கோயம்பேடு பழ மார்க்கெட்டில், அதிகாரிகள் திடீர் சோதனை செய்தபோது, பழங்களை பறிமுதல் செய்ய, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எங்களுக்கு, அரசு மாற்று வழியை உருவாக்க வேண்டும்; மார்க்கெட் பகுதியில், பழங்களை பழுக்க வைக்கும் கிடங்குகள் அமைத்துத் தர வேண்டும்' என, கேட்டனர். 'அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் சமாளித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=964889

 

 
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. ஊரில் அறைகளில் சாக்குகளை பரப்பி மாங்காய்களை பழுக்க வைத்து சாப்பிட்ட எங்களுக்கு இது தேவைதான்.. :o

ம்ம்ம்.. ஊரில் அறைகளில் சாக்குகளை பரப்பி மாங்காய்களை பழுக்க வைத்து சாப்பிட்ட எங்களுக்கு இது தேவைதான்.. :o

விவசாயத்தில் விவசாயிகள் குறைவு. வியாபாரிகள் தான் கூட.

  • தொடங்கியவர்

கார்பைடு கல் விபரீதம்

மாம்பழ பேரலை திறந்தபோது எழந்த தீ ஜுவாலையால் சிறுவன் கண் பாதிப்பு

 

Tamil_Daily_News_91852533818.jpg

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா காஞ்சிரன் குளத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் முத்துசாமி (17). இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, கடந்த ஒரு ஆண்டாக கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் வருவது வழக்கம். காயாக வரும் பழங்களை, கார்பைடு கற்கள் கொண்டு, பழுக்க செய்து விற்பனை செய்கிறார்கள்.இந்நிலையில் ஒரு இரும்பு பேரலில் கார்பைடு கற்களால், மாம்பழங்களை பழுக்க வைத்து இருந்தனர். நேற்று மாலை முத்துசாமி, அந்த பேரலை திறந்தார். அப்போது திடீரென அதில் இருந்து வந்த தீ ஜுவாலை, முத்துசாமி முகத்தில் பட்டது. 

இதனால், முகம் கருகி, அவர் அலறினார்.இதனால் உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கண்ணில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். முத்துசாமியால் கண்களை திறக்க முடியவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்பேரில், கோயம்பேடு மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கார்பைடு கற்களால் பழுக்க செய்த மாம்பழம் எடுக்க முயன்றபோது, சிறுவன் கண்ணில் காயம் ஏற்பட்ட சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=89993

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.