Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பகல்வாழும் கதிரவனும் பனிமதியும்....

Featured Replies

  • முதிர்கள்ளி
  • முரிமுள்ளி
  • முதல்வாகை
  • முதல்ஈகை
  • முட்காரைவேல்
  • வெதிர்நெல்லி
  • விடத்தேறு
  • வெட்பாலை

இவையெல்லாம் இரணிய வதைப் பரணியில் கூறப்படும் பாலை நிலத்து மரங்கள்.

 

இதில் வாகை என்ற மரம் தமிழர்களின் களிப்பை உணர்த்துவதாகும். சங்க காலத்தில் போரில் வெற்றிப் பெற்றால் மன்னரும் வீரரும் வாகைப் பூவை சூடி வெற்றிக் களிப்பை கொண்டாடுவார்கள் என இலக்கியங்களில் காணப்படுகிறது.  இன்றும் "வெற்றி வாகை சூடினான்" என்று பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். வெற்றிப் பெற்றவர்கள் வாகைப் பூவை சூடுவதாலே இந்தப் பெயர் வந்தது. இது பாலை நிலத்திற்குரிய பூவாகும். இது விடுதலைப் புலிகளின் காலத்தில் தேசிய மரமாகவும் கொண்டாப்பட்டது.

vakai2.jpeg

 

மேலும் இது வெட்சி, கரந்தை, தும்பை, வாகை என புறத்திணைகளில் ஒரு வகையாகும். இதில் பல உட்பிரிவுகள் உள்ளன அவற்றுள் சில

சீர்சால் வாகை

வாகை அரவம்

அரச வாகை

முரச வாகை

வாணிக வாகை

வேளாண் வாகை

அறிவன் வாகை

தாபத வாகை

 

இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால் வாசிப்பவர்களுக்கு பாடம் நடத்துவது போலாகிவிடும். ஆகையால்

இனி இலக்கியத்திற்குள் வருவோம்....

சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தின் கொடுமையை பற்றி ஏராளமான இடங்களில் காணலாம். இரணிய வதைப் பரணியில் நான் இரசித்த சில வரிகள்...

மழைகுன்றி, மரல்வெந்து, பரல்வெம்பி,

       மரம்ஒன்றும் நிழல்இன்றியே,

  இழைகின்ற கழைநின்ற இடமெங்கும்

       எரி மண்டி எழுகின்றதே.    

மழை ஏதும் இல்லாமல் கானல் நீரும் கூட வறண்டு போய், நிலத்தில் கிடக்கின்ற விதைகள் எல்லாம் வெம்பி, எந்த மரத்திலும் ஒதுங்குவதற்கு நிழல் கூட இல்லை. இவ்வளவு கொடுமையான வெம்மையால் அசைகின்ற மூங்கில்கள் நின்ற இடமெங்கும் தீப்பற்றி எரிகிறதாம் !!

பகல்வாழும் கதிரவனும் பனிமதியும்

            பலகாலும் பவனி போந்தும்

        அகல்வானம் நிறம்இருண்டது, அந்தவனத்து

            எழுந்தஅனல் புகையால் அன்றோ?      

பகலில் உலவுகின்ற கதிரவனும் இரவில் உலவுகின்ற வெண்மதியும் பல முறை மாறி மாறி வந்தாலும் அகன்ற ஆகாயமெல்லாம் இருளாக தெரிகிறதாம் இந்தப் மூங்கில்கள் எரிந்த புகையாலே! இந்த வரிகளை வாசிக்கும்போதே நா வறண்டு போகிறது !!

தாகம் தணிக்க நீர் தேடிச் சென்றால் கொஞ்சம் உமிழ் நீர்தான் கிடைத்தது.. சுவைதான் !! :)

கொஞ்சம் இனிமையான சில வரிகளைக் காணலாம்

Mughal_Lady_Portraits.jpg

குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

 

உரைகள் வேறுஎன உடல்கள் ஒன்றுஎன

            உறவு செய்கையின் உணர்வுபோய்,

        வரைகள் போல்திரள் தோளி லேமிக

            மயங்கு வீர் கடை திறமினோ!                  

வேறு வேறு உறைகளில் தங்கியிருக்கும் இரு உடல்கள் ஒன்று என எண்ணத் தோன்றுமளவுக்கு முயங்கி காதலன் தழுவும்போது தான் மயக்கம் கொள்ளுமளவுக்கு காதலனின் திரண்ட தோள்களில் மயங்கி கிடக்கும் பெண்களே உங்களது கதவுகளை திறவுங்கள் !!

புலர்ந்த போது குவிந்து மாலை

            புணர்ந்த போது மணம்கொளா

        மலர்ந்த தாமரை கொண்டுஉலாவு

            மடந்தை மீர்! கடை திறமினோ!  

சூரியன் புலரும்போது தாமரை வாட்டம் கொண்டு சுருங்கிவிடும். ஆனால் சந்திரன் புலரும்போது தாமரை விரிந்து மலர்ந்து அழகாக தோன்றும். அதுபோல இந்தப் பெண்களும் காலையில் வாடி இரவு வரும்போது மலர்ந்து விடுகிறார்கள் தன் கணவனின் தோள்களை தழுவுவதற்காக ...

 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் புலரும்போது அல்லிதான் வாடிநிக்கும்,  தாமரை மலரத் தொடங்கும்.

அதுபோல் சந்திரன் உதிக்கும் போது  அல்லி மலரத் தொடங்கும்,  தாமரை உறங்கும்.  :)

  • தொடங்கியவர்

சூரியன் புலரும்போது அல்லிதான் வாடிநிக்கும்,  தாமரை மலரத் தொடங்கும்.

அதுபோல் சந்திரன் உதிக்கும் போது  அல்லி மலரத் தொடங்கும்,  தாமரை உறங்கும்.  :)

 

சுட்டி காட்டியமைக்கு நன்றி சுவி.

புலர்ந்த போது குவிந்து,  மாலை புணர்ந்த போது மணம்கொளா மலர்ந்த தாமரை ...

பாடல் வரிகள் அந்தப் பொருளை கொடுப்பதுபோல் தோன்றியதால் எழுதினேன்.

இந்த வரிகளை இப்படி வாசித்திருக்க வேண்டும்

 

புலர்ந்த போது குவிந்து, மாலை புணர்ந்த போது மணம்கொளா மலர்ந்த தாமரை கொண்டுஉலாவு மடந்தை....

சூரியன் புலர்ந்தபோது முகம் வாடி, மாலை புணர்ந்த போது மலர்ச்சியடையும் ...... தாமரை முகம் கொண்டு உலவும் பெண்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.