Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை

Featured Replies

பதிவில் இருந்து...........

'''தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை'''

தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை

கொழும்பு, தெகிவளையில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் நேற்று முன் தினம் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெகிவளை சுபத்திராராம வீதியில் தொலைத் தொடர்பு நிலைய மொன்றை நடத்தி வந்த வட பகுதியைச் சேர்ந்த எம்.சூரியகுமார் (வயது 26) என்ற தமிழ் வர்த்தகரே கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளதாக தெகிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை களனி பீலபிட்டிய பகுதியிலுள்ள பொது மயானத்தில் கிடந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தகவல் தந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்தார்.

வெள்ளை வான் ஒன்றில் வந்த 7 பேரே தெகிவளையில் வைத்து சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவரைக் கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்துள்ளனர். தங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) பொலிஸார் என அறிமுகப் படுத்திக் கொண்ட இக் குழு விசாரணையொன்றுக்கு வருமாறு பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றுள்ளது. பின்னர் இவர்கள் நேற்று அதிகாலை இவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இதேவேளை பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கதிரேசன் வீதியில் வர்த்தக ஸ்தாபனமொன்றை நடத்தி வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 55 யாழ்ப்பாணம்) என்ற வர்த்தகரே கடத்திச் செல்லப்பட்டு 12 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தங்களை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரென அறிமுகப் படுத்திக் கொண்டு வந்த சிலரே இவரையும் ஆயுத முனையில் வெள்ளை வானில் கடத்திச் சென்றிருந்தனர்.

கடத்தல்காரர்கள் இந்த வர்த்தகரை அம்பாறை தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிலுள்ள மறைவிடமொன்றில் வைத்து வாகனங்கள் மற்றும் அவர் செய்யும் வர்த்தகம் குறித்தும் அவற்றின் பின்னணி பற்றியும் விசாரித்துவிட்டு விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், கப்பம் எதுவும் அறிவிடப்பட்டதா எனக் கூற இவர் மறுத்துவிட்டார்.

அண்மைக் காலமாக கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை கடத்திச் செல்வது மோசமாக அதிகரித்துள்ளதுடன் அதில் பலர் கொலை செய்யப் பட்டும், காணாமல் போன நிலையில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப் பட்டுள்ளதும் தெரிந்ததே.

  • தொடங்கியவர்

அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட பொதுமக்களின் ஆன்ம உறுதியை உடைக்கவேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து.....

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக கொழும்பில் அலுவலகம் திறந்தவர்களுக்குத்தான் வெளிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.