Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைச் சுப்பிரமணிய சுவாமி

Featured Replies

இலங்கையின் சமகால சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்று வர்ணிக்கப்படக் கூடியவர்களில் அந்த அந்தஸ்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அடிக்கடி தான்தோன்றித்தனமாகப் பேசுபவர் என்றால் அநேகமாக அது இரு முன்னாள் பிரதமர்களைப் பெற்றோராகக் கொண்ட அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவாகத்தான் இருக்க முடியும். ஏறத்தாழ 30 வருட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அவர் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கருத்துகளைத் தெரிவித்த எண்ணற்ற சந்தர்ப்பங்களை எடுத்துக் கூறமுடியும்.

அத்தகையதொரு சந்தர்ப்பத்தை கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரா, எவரும் எதிர்பார்க்காத முறையில் திடீரென கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி நிருபமா ராவைச் சாடினார். ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திய உயர்தலைவர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிவரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அடிக்கடி வர்ணித்துக் கொள்வதில் பெருமைப்படுகின்ற அநுரா, இலங்கையின் உள்விவகாரங்களில் திருமதி ராவ் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டினார். `இந்திய உயர்ஸ்தானிகர் தனது தூதரகத்தின் அலுவல்களைக் கவனிக்க வேண்டும். நாம் எமது சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்வோம். நாம் யாருடன் தொடர்புகளைப் பேணி எமது சொந்தநாட்டு விவகாரங்களைக் கவனிக்க வேண்டுமென்று எவரும் எமக்கு ஆலோசனை கூறத்தேவையில்லை. முன்னாள் உயர்ஸ்தானிகர் கே.என்.தீக்ஷித் போன்று திருமதி ராவ் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது' என்று அநுரா தெரிவித்தார்.

அநுரா திடீரென்று இந்திய உயர்ஸ்தானிகருக்கு எதிராகக் கருத்தைத் தெரிவித்து இந்தியாவுக்கு எதிராகக் கிளம்புவதற்கான உடனடிக் காரணம் என்னவென்பதே அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் கிளம்பியிருக்கும் கேள்வியாகும். பாராளுமன்றத்தில் அன்றைய தினம் அநுரா உரையாற்றிய வேளையில், அரசாங்கத்தரப்பிலிருந்தோ அல்லது எதிரணித் தரப்பிலிருந்தோ எவருமே குறுக்கிட்டு அவரை மறுதலித்துக் குரலெழுப்பவில்லை. ஆனால், பின்னர் வெளியில் அவரின் கருத்துகளை அரசியல்வாதிகள் கண்டனம் செய்தனர். திருமதி ராவ் தொடர்பில் அநுரா தெரிவித்தவை அரசாங்கத்தின் கருத்துகள் அல்ல என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மிகவும் சிக்கலான கட்டத்தை அடைந்திருக்கும் இலங்கை இன நெருக்கடியில் இந்தியாவின் ஈடுபாடு அவசியப்படுகின்ற வேளையில் அநுரா பொறுப்பற்ற முறையில் உரையாற்றியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களும் குற்றம் சுமத்தினார்கள்.

திருமதி ராவ் மீதான தாக்குதலை இந்திய அரசாங்கம் மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகக் கருதியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புதுடில்லியில் வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கருத்துத்தெரிவிக்கையில், `எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிடுவது இந்திய அரசாங்கத்தினதோ அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளினதோ கொள்கை அல்ல. கொழும்பில் உள்ள எமது உயர்ஸ்தானிகர் திருமதி ராவ். ஒரு சிரேஷ்ட இராஜதந்திரி. மிகவும் உயர்வான தொழில்சார் தராதரத்துக்கு இணங்கவே அவர் நடந்து கொண்டுள்ளார்' என்று கூறினார்.

அண்மைக்கால அரசியல் மற்றும் இராணுவ நிகழ்வுப் போக்குகள் காரணமாக இலங்கை நெருக்கடி விவகாரத்தில் இந்தியா அதன் கடந்த சில வருடகால அணுகுமுறையிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகின்ற அறிகுறிகள் தாராளமாகத் தென்படுகின்ற ஒரு சூழ்நிலையில்- அதாவது நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டவேளையில் இந்தியாவின் தலையீட்டை வலிந்து நாடி நின்ற தென்னிலங்கை சிங்கள கடும்போக்கு அரசியல் சக்திகள் புதுடில்லி மீது வெறுப்படைய ஆரம்பித்திருக்கின்ற தருணத்தில் அநுரா, உள்நாட்டு விவகாரங்களில் திருமதி ராவ் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.