Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே ஆண்டில் ஊழல் தரவரிசைப் பட்டியலில் 12 இடங்கள் பின்தள்ளப்பட்டது இலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே ஆண்டில் ஊழல் தரவரிசைப் பட்டியலில் 12 இடங்கள் பின்தள்ளப்பட்டது இலங்கை! 
[Friday, 2014-05-23 08:57:41]
transparescy-230514-150.jpg
கடந்த ஒரு ஆண்டில் இலங்கையில் ஊழல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக - ஊழலின் அளவை வைத்து நாடுகளை வரிசைப்படுத்தும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் வருடாந்த பட்டியலில் இலங்கை 12 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பீட்டு சுற்றாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் நாற்பது புள்ளிகள் எடுத்து 79ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 37 புள்ளிகளை மட்டும் எடுத்து 91ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கப் பிரதிநிதிகள் வசம் அதிகாரம் குவிந்து வருவதால், அரசியல் சாசன ரீதியாக ஆளும் கட்டமைப்பில் இருந்த வரம்புகளும் கட்டுப்பாடு அம்சங்களும் செயலற்று வருவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் சுற்றாய்வு கூறுகிறது.தவிர பொதுமக்களின் பணம் தவறான வழியில் சுருட்டப்படுகின்ற போக்கும் பரவலாகிவருவதாக அது சுட்டிக்காட்டுகிறது.மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டம் இயற்றும் மன்றங்களுடைய மேலாண்மையைக் குலைப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாவும் இந்தப் போக்கு அமைந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக காவல்துறை, கல்வித்துறை, காணி நிர்வாகம், அரசியல் கட்சிகள் போன்றவற்றில் ஊழல் அதிகமாகியிருப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைப் பிரிவு கூறுகிறது.பொதுத்துறை அரசியல் மயமாகிவருவதாகவும், அரசுத்துறை ஊழியர்களின் நியமனங்கள், வேலையிட மாற்றங்கள், பதவி உயர்வு போன்ற விஷயங்களில் ஊழலும் அரசியல் தலையீடுகளும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.எனவே இலங்கையில் ஊழல் ஒழிப்பு வழிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புகூறலையும் அதிகரிக்கும் விதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இலங்கைப் பிரிவின் செயல் இயக்குநர் எஸ் ரனுகே கூறினார்.
 
1994ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்ட லஞ்சத் தடுப்புச் சட்டம் சுற்றவர நடந்துவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரையில் திருத்தப்பட்டிருக்கவில்லை.தனியார் துறை, சிவில் சமூகம் போன்ற துறைகளில் காணப்படுகின்ற ஊழலை ஒழிக்க இந்த சட்டத்தில் வழியில்லாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுள்ளது.இந்த நிலை மாற வேண்டும் என டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் வலியுறுத்துகிறது.
 
அதேநேரம் ஏனைய தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் ஊழல் குறைவாக உள்ளது. இந்தப் பட்டியலில் தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது. ஊழல் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 36 புள்ளிகளுடன் 94ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் மோசடிகள், பயங்கரவாதம் தொடர்பில் கற்றுக்கொள்ள தேவையென்றால் மெதமுலனவிற்கு செல்வேன் - ரணில்

 

 

Mahinda-Ranil-_CI.jpg

 

ஊழல் மோசடிகள், பயங்கரவாதம் தொடர்பில் கற்றுக்கொள்ள தேவையென்றால் மெதமுலனவிற்கு செல்வேன் - ரணில்

ஊழல் மோசடிகள், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமாயின் மெதமுலனவிற்கு செல்ல முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இருப்பிடமான மெதமுலனவிற்கு சென்றால் இவ்வாறான விடயங்களையே கற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை அமைப்பது மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கற்றுக்கொள்ளும் நோக்கில் தாம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தந்திரோபாயங்கள் பற்றி அறிந்துகொள்ளவே தாம் அமெரிக்காவின் எம்.ஐ.ரீ பல்கலைக்கழகத்திற்கு சென்றதாகத் தெரிவித்;துள்ளார்.

துறைமுகம் அமைப்பது பற்றியும், வீதிகள் அமைப்பது பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைகள் மற்றும் பிரதேச சபைகள் இவ்வாறான அபிவிருத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இருக்கும் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி நாட்டை முன்நோக்கி நகரச் செய்வதே தமது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இ;ல்லாதொழிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசாங்கங்கள் எவ்வாறு கவிழ்க்கப்படுகின்றன என்பது குறித்து அறிந்து கொள்ள தமக்க சந்தர்ப்பம் கிட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் சமூகத்தின் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்து அதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி உத்தேசித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/107301/Default.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.