Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழீழ வரலாறாறு என்றுமே அழியாது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழீழ வரலாறாறு என்றுமே அழியாது..
ltte-012-473x250.jpg

போரின் போது காயமடைந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளிடம் சரணடைந்த சிங்கள இராணுவன் ஒருவனை பார்வையிட தென்னிலங்கையில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் அந்த இராணுவத்தினரின் குடும்பத்தினை மரியாதையுடன் வரவேற்கும் ஒரு போராளி.

விடுதலைப்புலிகள் எத்தனை உயர்வானர்கள் என்பதற்கும், போரில் சரணடைந்த எதிரிகளையும், கைது செய்யபட்ட சிங்கள படையினரையும் எந்த அளவுக்கு கண்ணியத்துடனும், யுத்த தர்மத்துடன் நடத்தினர் என்பத்துக்கு பல சாட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த படம்.

புலிகளின் பாரிய வெற்றித் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் ஓயாத அலைகள் ஒன்று தாக்குதலில் புலிகள் சுமார் 600 சிங்கள இராணுவத்தினரை பிணமாக மீட்டனர். ஆனால் அந்த உடல்களை இலங்கை அரசு ஏற்க மறுத்தது. பின்னர் புலிகள் அந்த உடல்களை சகல இராணுவ மரியாதைகளுடன் கொக்காவில் எனும் இடத்தில் அடக்கம் செய்தது புலிகளின் போரியல் தர்மத்திற்கு ஓர் அடையாளம்.

தமது சொந்த நாட்டு இராணுவத்தினரின் உடல்களியே ஓர் அரசு ஏற்க மறுத்த நிலையில், அந்த இராணுவத்தினரின் அவர்களின் எதிரிகள் அந்த உடல்களை சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்த நிகழ்வு உலகில் வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும்.

பல சமர்களங்களில் புலிகளினால் காயமடைந்த நிலையில் மீட்கபட்ட இராணுவத்தினரை புலிகள் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள வழங்கி மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த நிகழ்வுகள பல உள்ளன.

இதனை விடவும் புலிகளின் மேன்மையினையும், அவர்களின் சிறப்பினையும் எடுத்துக் கூறும் பல நூறு வரலாற்று நிகழ்வுகள் ஈழத்து மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத வரலாறாக என்றுமே புலிகளின் புகழ் இந்த உலகம் எங்கும் நிலைக்கும்.

ltte-012.jpg

 

ஆதாரம்: சிறிலங்கா.கொம்

 

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு போர்க்குணம் மட்டுமே  இருக்கணும்

அதிலிருந்து இறங்கி

மனித  உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கினால் என்னாகும் என்பதற்கும்

நாமே சாட்சி

வரலாறு

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு போர்க்குணம் மட்டுமே  இருக்கணும்

அதிலிருந்து இறங்கி

மனித  உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கினால் என்னாகும் என்பதற்கும்

நாமே சாட்சி

வரலாறு

உங்கள் கருத்து தவறு. போராளிக்கு போர்க்குணமும் மனிதமும் இருத்தலே சிறந்த தேசத்தை உருவாக்கும் தகுதியைத் தரும்: எங்கள் போராளிகள் போர்க்குணம் மிக்க இதயங்களில் ஈரத்தையும் சேர்த்து சுமந்தமையால் தான் இன்றும் உலகின் போராட்டங்களுக்கும் போராளிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு. எங்கள் போராளிகள் உணர்வுக்கு ஆட்பட்டவர்கள். உணர்வு மட்டுமே நிரந்தரம். அந்த தூய உணர்வுள்ளவரே போராளியெனும் புனிதத்துக்கு உரிமையானவர்கள் எங்கள் போராளிகளும் இதே வகையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.