Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊதுபத்தி, அப்பளம் கைத்தொழில்களை தாயகத்தில் தொடங்களாமே......

Featured Replies

அண்மையில் கொழும்பில் உள்ள ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவருடன் கதைத்த போது சொன்னார். "  இந்தியாவில் இருந்து கொண்டெய்னர் ,  கொண்டெய்னராக ஊதுபத்தியும், அப்பளமும் இறக்குமதி செய்கிறார்கள். இவற்றை நாம் தாயகத்தில் ஊக்குவித்தால்  நல்ல லாபம் பெறலாமெனவும் , போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பையும் வழங்கலாமெனவும் சொன்னார். 
எனக்கும் இது ஒரு நல்ல சிந்தனயாகப் படுகிறது. மூலப்பொருட்க‌ள் பிரச்சனையும் வராது  என நினைக்கின்றேன்.
 
கள உறவுகளே  யாராவது வசதியிருந்தால் முயற்சித்துப் பாருங்கள். முடியுமானவர்கள் இச்செய்தியை வடமாகணசபையிடம் எடுத்து செல்லுங்கள்.
 
 கீழே இவை தொடர்பாக தமிழ் நாட்டு பத்திரிகைகளில் வாசித்த இரண்டு செய்திகளை இணைத்துள்ளேன்.
 
 

ஊருக்கு மணம் பரப்பும் ஊதுபத்தி தொழில் ஊக்குவிக்கப்படுமா? உற்பத்தியாளர் ஏக்கம்

 

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டம், பாளை யம் கிராமத்தில் தயாரிக்கப்பட்டு ஊர் முழுக்க மணம் பரப்பும் ஊதுபத்தித் தொழில் ஊக்குவிக்கப்படு மா என்று உற்பத்தியாளர் கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இறை வழிபாட்டில் இன்றிமையாதது ஊதுபத்தி. ஊதுபத்தியின் மணம் பக்தியை வரவழைப்பதோடு, தெய்வீகச் சூழலையும் உருவாக்குவது விந்தையே. மன அமைதிக் கும், மன மகிழ்ச்சிக்கும் மருந்தாகும் இந்த ஊதுபத்தித் தொழில் தற்போது குடிசைத் தொழிலாகத் திகழ்கிறது.
பட்டாசு என்றால் சிவகாசி என்பது போல், பத்தி என்றால் பாளையம் என்பதை  நினைவுக்கு கொண்டுவரும் வகையில் பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் இத் தொழில் நடந்துவருகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழில் வளமே இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தில் குடிசைத் தொழில் மூலம் ஊதுபத்தி தயாரிப்பது உள்ளூர் காரர்களுக்கே தெரியாதிருந்த நிலையில், தற்போது மாவட் டம் முழுக்க ஊதுபத்தித் தொழில் மணம் பரப்பத் தொடங்கியுள்ளது.
பாளையம் கீழ வீதியைச் சேர்ந்த நடராஜனின் மகன் மணி (30). இவரும், இவரது மனைவி லோகாம்பாளும் (24) ஆரம்பத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், தங்களது வீட்டில் குடிசைத் தொழிலாக ஊதுபத்தித் தயாரிக்கும் தொழிலில் இறங்கினர். கரித் தூள், மரத் தூள், ஜிகட் பவுடர் ஆகியவற்றைக் குறிப்பிட்ட சதவீதத்தில் முறையாகக் குழைத்து மாவு தயாரித்து, அதனுடன் வாசனைத் திரவியங்களை சேர்த்து இயந்திரத்தின் உதவியுடன் ஊதுபத்திகளை தயாரி க்கின்றனர்.
கிரைண்டரை போல் ரூ.22 ஆயிரத்தில் மாவு தயாரிக்கும் இயந்திரத்தையும், ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் 5 இயந்திரங்களையும் வாங்கி ஆரம் பித்தத் தொழில் தற்போது கமகமவென மணம் பரப்புகிறது.
நாளொன்றுக்கு 5 பேர் 8 மணி நேரம் பணிபுரிந்து, 15 கிலோ என மாதம் ஒன்றரை டன் எடையில் ரூ1.10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. இத் தொழிலுக்கு மாவட்டத் தொழில் மையத்தில் வங்கிக் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து தகுதியுடையோர் பட்டியலில் தேர்வாகியுள்ள மணிக்கு இன்னும் வங்கிக் கடன் கிடைத்தபாடில்லை. இந்த கடன் தொகை விரைவாகக் கிடைத்தால் குறைந்தது 10 பேருக்காவது வேலைவாய்ப்பு வழங்கி அவர்களையும் வாழ வைக்க முடியும் என்றார் மணி. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஊதுபத்தி தயாரிக்கும் மூலப் பொருட்களான கரித்தூர், மரத்தூள் ஆகியவற்றையும், மூங்கில் குச்சிகளையும் மொத்தமாக சென்னையிலும், பெங்களூரிலிருந் தும் வரவழைக்கிறோம். கவர்களை மட்டும் சிவகாசியில் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் விண்ணப்பித்துள்ள வங்கிக் கடனுதவியும் விரைந்து கிடைத்து விட்டால் ஒரு மாதத்திற்கு ரூ2.80 லட்சம் மதிப்பிலான 4 டன் ஊதுபத்திகளைத் தயாரிக்க முடியும் என்றார்.
கிராமத்தாரை குறிவைத்து வியாபாரம்
பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் ரூ.5, ரூ.10, ரூ.30 வீதம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. 5 ரூபாய் டப்பாவைத் தயாரிக்க ரூ2.25 செலவாகும் நிலையில், விற்பனைக்காக 50 காசு சேர்த்து ரூ2.75 வீதம் விற்கப்படுகிறது. குறிப்பாக நகரத்துக்குச் செல்லுகிற கிராமத்தாரை குறிவைத்து கிராமங்களுக்கு நேரில் கொண்டு சென்று விற்கப்படுகிறது.

 

http://www.dinakaran...=265359&cat=504

 

 

லாபத்தை அள்ளி தரும் அப்பளம்!

 

அப்பளம் பிசினசில், எல்லா செலவுகளும் போக, மாதம், ௧௫ ஆயிரம் சம்பாதிக்கும், கல்லுாரி மாணவன், சுந்தரேசன்: சிறு வயது முதல், நான் அப்பள கடைக்கு வேலைக்கு சென்றேன். இங்கு, 'மிஷின்'களின் வேலையை விட, மனிதர்களின் பங்கு அதிகம். அதனால், எப்போதும் எங்களுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது.

அப்போதிலிருந்தே, இந்த தொழிலை தனியாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாமே என, எண்ணுவேன். ஆனால், பணம் தான் இல்லை. திடீரென்று அப்பா இறந்து விட, குடும்பத்தின் மொத்த பொறுப்பும் என் மேல் விழுந்தது.பொருளாதார ரீதியாக, என் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பா எங்களை விட்டு பிரிந்ததைவிட, அடுத்து வரும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது தான், பெரும் கவலையாய் இருந்தது.ஏனெனில், என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா, ஒரு அண்ணன் மற்றும் தங்கை. இவர்கள் அனைவருக்குமான குடும்பச் செலவு, தங்கை மற்றும் அக்காவுக்கான திருமண செலவு என, பல விஷயங்கள் என் கண்முன்னே அடிக்கடி வந்து சென்றன.வேறு எங்காவது வேலைக்கு செல்வதை விட, சொந்த வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணி, அப்பளம் தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தேன். முதலில், 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், சிறிய அளவில் இந்த தொழிலில் இறங்கினேன்.அப்பளத்திற்கான மாவை, ஆரம்பத்தில் கையிலேயே பிசைவேன். அதற்காக இயந்திரம் இருப்பதை அறிந்து, தொழில் வளர்ச்சிக்காக அதை வாங்கினேன். மற்றவர்கள் வேலை செய்யும் போது, நானும் அவர்களுடன் இணைந்து வேலையைச் செய்வேன்.ஏனெனில், எந்த தொழிலாக இருந்தாலும், குழுவாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து, தினமும் காலையில் உளுந்து மாவை வாங்கி வருவேன்.அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு, தயார் செய்த அப்பளத்தை காய வைத்து, அட்டை பெட்டியில் அடுக்கி, மொத்த ஆர்டர் எடுப்பவரிடம் தந்து விடுவேன். ஒரு நாளைக்கு, 100 கிலோ உளுந்து மாவை கொண்டு வந்து, அப்பளமாக தயாரிக்கிறோம்.கூடிய விரைவில், அப்பள தொழிலை தனியாக செய்ய வேண்டும் என்பதே, என் லட்சியம். வீடு, கடை வாடகை, கரன்ட் பில், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள், கல்லுாரிக் கட்டணம், வேலையாட்களுக்குச் சம்பளம் என, அனைத்தும் போக, மாதம், 15 ஆயிரம் வரை எனக்கு கிடைக்கிறது.அடுத்ததாக, என் தயாரிப்பை மேம்படுத்தி, நானே நேரடியாக மார்க்கெட்டிங் செய்ய முயற்சித்து வருகிறேன். இதனால், நல்ல லாபம் பார்க்க முடியும். அதற்காக, வேகமாக தயாராகி வருகிறேன்.

http://www.dinamalar...etail.asp?id=93

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.