Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் படிக்கிறார்கள் ஆனால் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் படிக்கிறார்கள் ஆனால் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஏன்?

[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 06:05 GMT ] [ நித்தியபாரதி ]

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டங்களுக்குள் உள்ளுர் மக்கள் உள்வாங்கப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

இவ்வாறு ucanews.com இணையத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2013 ல் இடம்பெற்ற தேசிய பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட போது, முன்னால் போர் வலயமான வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் இந்தப் பெறுபேறுகள் தொடர்பில் பெருமையடைந்தனர். இதற்கான காரணம், வடக்கில் இப்பரீட்சைக்குத் தோற்றிய 16,604 மாணவர்களில் 63.8 சதவீதமானவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கான குறைந்தளவு தேவைகளை நிறைவுசெய்திருந்தனர் என்பதேயாகும். "இது மிகக் கடினமான ஒரு பரீட்சையாகும். மிகவும் போட்டி மிக்க பரீட்சையுமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போரிலிருந்து மீண்டெழுந்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்ள் அடைந்த மிகப் பெரிய சாதனையாகும்" என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் சிவலிங்கம் சத்தியசீலன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணமானது செயற்பாடுகள் வரிசையில் தேசியப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக சத்தியசீலன் தெரிவித்தார். எதுஎவ்வாறிருப்பினும், முன்னால் போர் வலயத்தில் சாதகமான பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வடக்கில் தொழில் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே காணப்படுவதாக இவர் தெரிவித்தார். "பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும் இவர்கள் தமக்குள்ள கல்வித் தகைமையுடன் வேலையைப் பெற்றுக்கொள்வதென்பது மிகக் கடினமானதாகும்" என சத்தியசீலன் குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்த பின்னர், சிறிலங்காவின் வடக்கில் பாரிய கட்டுமானத் திட்டங்கள் மற்றும் தொடருந்துப் பாதைகளைப் புனருத்தானம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டங்களுக்குள் உள்ளுர் மக்கள் உள்வாங்கப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள வேலையற்றோரின் சதவீதமானது சிறிலங்காவின் தேசிய சதவீதமான நான்கு வீதத்தின் இரண்டு மடங்காகும்.

வடக்கு மாகாண வாழ் இளையோரின் தொழில் ஆற்றலை மேம்படுத்துவதற்கான சிறந்த பயிற்சிகளை சிறிலங்கா அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கும் அதேவேளையில், தனியார் துறையினர் இங்கு தொழில்களை வடிவமைக்கின்ற போக்கு மிகவும் குறைவாகக் காணப்படுவதாக சத்தியசீலன் சுட்டிக்காட்டினார். "நாட்டின் அபிவிருத்தியில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. போருக்குப் பின்னான அபிவிருத்தித் திட்டங்கள் முழுவதும் சிறிலங்கா அரசாலேயே முகாமை செய்யப்படுகிறது. தனியார் துறை முதலீடுகளை மேற்கொண்டு வடக்கு கிழக்கில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான எவ்வித ஊக்குவிப்பையும் இதுவரையில் சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை" என பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவகத்தின் முதன்மை ஆய்வாளர் முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் தெரிவித்தார்.

சிறிலங்காவின் தெற்கில் அரசாங்கமானது வரிவிலக்குடனான பொருட்கொள்வனவுக்கு அனுமதி வழங்குவதுடன், வடக்கில் அதாவது போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்குப் பதிலாக தெற்கில் கார்ச் சவாரி செய்வதற்கான கார்களை இறக்குமதி செய்வதற்கான ஊக்குவிப்பை வழங்குகிறது என முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் சுட்டிக்காட்டினார். "வடக்கில் அதிகமான மக்கள் தொழில் தேடுகின்றனர். ஆனால் தேவைக்கேற்ப தொழில் வாய்ப்பை இங்கு பெற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இந்தப் பிரதேசம் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாகக் காணப்படுவதால் இங்கு தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது மிகவும் பெரிய முயற்சியாகும்" என அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளரான இராமலிங்கம் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கும் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க இயலாத தொழிற் சந்தைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு நிலவுகிறது. இந்த வேறுபாடானது முன்னால் போர் வலயத்தில் இடம்பெறும் அபிவிருத்திப் பணியானது சவால்களைச் சந்திக்கின்றது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

வடக்கு தொடருந்துப் பாதைப் புனரமைப்பு, 420,000 இற்கும் மேற்பட்ட உள்ளக இடம்பெயர் மக்கள் மீளக்குடியேற்றப்படுதல், கல்வி முறைமையை மீளவும் சரியான நிலைக்குக் கொண்டுசெல்லுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிலைநாட்டப்பட்டாலும் கூட, விமர்சனங்கள் இல்லாது இவற்றை நிறைவுசெய்ய முடியாது. "சிறிலங்கா அரசாங்கமானது முன்னாள் போர் வலயத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் கூட தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை" என மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட Durable Solutions Promotions Group (DSPG) இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மக்கள் சந்திக்கும் அவலங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்தில், வடக்கில் 143,268 வீடுகள் தேவை என ஐ.நா நிறுவனம் தெரிவித்தது. ஆனால் 75,199 வீடுகளுக்கான நிதி மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக இது தெரிவித்துள்ளது.

இதேபோன்று கிழக்கில் 20,000 வீடுகள் கட்டப்படவேண்டும். "அனைத்துலக நாடுகளிலிருந்து பெறப்படும் நிதியானது வீடமைப்பிற்குப் போதியதாகக் காணப்படவில்லை. இதனால் சிறிலங்காவில் இதற்கான நிதியைத் திரட்டுவதற்கான வழிவகைகளை நாம் ஆராய வேண்டும். சிறிலங்கா அரசாங்கமும் நிதி வழங்கும் பங்காளி அமைப்புக்களும் இணைந்து நிதியைத் திரட்டுவதற்கான பாரிய பரப்புரையை மேற்கொண்டிருக்க வேண்டும்" என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபெயசிங்க தெரிவித்துள்ளார். உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளோர் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் உட்பட தற்போது சிறிலங்காவில் 90,000 வரையான குடும்பங்கள் உள்ளக இடம்பெயர் குடும்பங்களாகும் என உள்ளக இடப்பெயர்வுக் கண்காணிப்பு மையத்தின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் ஆனே கத்றின் கிளாற்ஸ் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படவில்லை என்பதால் இவர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்வது மிகவும் கடினமான பணியாகும் என உதவிப்பணியாளர்கள் கூறுகின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் போன்ற நலிவடைந்த தரப்பினருக்கு வேலைவாய்ப்பின்மையானது மேலும் சவாலை வழங்குவதாக யாழ்ப்பாணத்திலுள்ள பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் தலைவி சறோஜா சிவச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் 50,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும், இவர்களை இலக்கு வைத்து பெரியளவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் இந்தப் பெண்கள் தமது குடும்பங்களைப் பராமரிப்பதற்குத் தேவையான பாதுகாப்பான தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் சவால்களைச் சந்திப்பதாக சிவச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக பின்தள்ளப்பட்ட கிராமங்களில் வாழும் பெண்கள் இவ்வாறான துன்பங்களை அதிகம் சந்திக்கின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் தலைவிமாரான பெண்கள் தமது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் இவர்களின் பிள்ளைகள் தந்தைமாரின் கண்காணிப்பில் பராமரிக்கப்படுகின்றனர். இதனால் இந்தப் பிள்ளைகள் பாலியல் ரீதியான முறைகேடுகளுக்கு ஆளாவதாக DSPG அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான பெண்களை அடையாளங்கண்டு இவர்களுக்கான உதவித் திட்டங்களை வழங்கவேண்டிய தேவையுள்ளதாக சிவச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20140601110627

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.