Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி - ஜெயா சந்திப்பு; இன்று மாலையே இடம்பெறும்

Featured Replies

modi%20jeya%20meet22.jpg

 

இந்தியா நரேந்திரமோடி - தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று மாலையே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை டில்லியில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்தியப் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறவிருந்த சந்திப்பு இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையில் பிற்பகல் 2.30 மணிக்குச் சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இன்று காலை டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கு தமிழக இல்லத்தில் தங்கியுள்ளார் என்றும் மறைந்த முண்டேக்கு அஞ்சலி செலுத்துவாரா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன

 

malarum.com

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு: பேசியது என்ன?

 

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக மீனவர் பிரச்னை, முல்லைப்பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

jaya%20modi.jpg

தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார். காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி செல்ல நேரிட்டது.

இதன்காரணமாக மோடி - ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஏற்கனவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழகத்திற்கு தேவையான நிதிகள், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் மற்றும்  தமது கோரிக்கைகள் அடங்கிய 64 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றையும் அவர் அளித்தார்.

மோடியிடம் பேசியது என்ன?

 சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, "64 பக்க கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளேன். விற்பனை வரி குறைக்கப்பட்ட போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை. அந்த நிதியை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குழுவை விரைவில் அமைக்கவும், காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணைகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக  மின் பிரச்னையில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் எனவும், கூடங்குளம், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15 சதவீதத்தை தமிழகத்திற்கு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். இலங்கை பிரச்னை, மீனவர் விவகாரத்தில் தமிழர் நலன் காக்கவும் பிரதமரை வலியுறுத்தினேன்.

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் மோடி பரிவுடன் கேட்டறிந்தார்'' என்றார்.

 

பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவா?

 

தொடர்ந்து 37  எம்.பி.க்கள் பலத்தை வைத்துள்ள நீங்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பீர்களா? எனக் கேட்டபோது, "தேசிய ஜனநாகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ளது. ஒருவேளை அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போது ஆதரவு குறித்து முடிவு செய்யப்படும்" என பதிலளித்தார்.

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28596

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.