Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவராத்திரி புராணத் தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி புராணத் தகவல்கள்!

நவராத்திரியின் முதல் நாளில் பாவை, இரண்டாம் நாள் குமாரி, மூன்றாம் நாள் தாருணி, நாலாம் நாள் சுமங்கலி, ஐந்தாம் நாள் சதகாடி, ஆறாம் நாள் ஸ்ரீவித்யா, ஏழாம் நாள் மகா துர்கை, எட்டாம் நாள் மகா லட்சுமி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி என ஒன்பது வடிவில் காட்சியளிக்கும் அம்பிகை, விஜய தசமியன்று சர்வ சக்தி ஐக்கிய ரூபிணியாக தரிசனமளிக்கிறாள் என்கின்றன புராணங்கள்.

சித்திரையில் 9 நாட்கள், புரட்டாசியில் (சில சமயம் ஐப்பசியில்) 9 நாட்கள், ஆடி மாதத்தில் 9 நாட்கள், மாசியில் 9 நாட்கள் என வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன. என்றாலும், சரத்ருது (குளிர்காலம்) எனும் புரட்டாசி (ஐப்பசி)யில் வரும் நவராத்திரியே மிக, மிக முக்கியமானது என்று அம்பிகையே கூறுவதாக ஒரு ஸ்லோகம் தேவி மகாத்மியத்தில் உள்ளது. நவராத்திரி நாட்களில் ஒன்பது தினங்களும் பூஜை செய்ய இயலாதவர்கள், அஷ்டமி திதி வரும் நாளில் (விஜயதசமிக்கு முந்தைய நாள்) மட்டும் பூஜை செய்தாலே போதும், ஒன்பது நாளும் பூஜித்த பலன் கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

2. நவராத்திரி கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி தினங்களில் 18 கரங்களுடன், அஷ்ட தச புஜ மகாலட்சுமியாக அம்பிகையை அமைத்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள்.

நவராத்திரியில் இரண்டு வயதுள்ள குழந்தையை குமாரி எனவும் மூன்று வயதுள்ளவளை திரிமூர்த்தியாகவும், நான்கு வயதுள்ள பெண்ணை கல்யாணியாகவும், ஐந்து வயதுள்ளவளை ரோகிணி எனவும், ஆறு வயதுள்ள சிறுமியை காளிகா எனவும், ஏழு வயதுள்ள சிறுமியை சண்டிகாவாகவும், எட்டு வயதுப் பெண்ணை சாம்பவீ என்றும், ஒன்பது வயதுச் சிறுமியை துர்கையாகவும், 10 வயதுள்ளவளை சுபத்ரா எனும் தேவியாகவும் பாவித்து உபசரிக்க வேண்டும் என்று சொல்கிறது.

நவராத்திரியை அனுஷ்டித்தே ராவணனை ராமர் வென்றார் என்கிறது வால்மீகி ராமாயணம். இதைத்தான் உத்திர பிரதேசத்தில் புரட்டாசி நவராத்திரியை, "ராம்லீலா' என்று கொண்டாடுகின்றனர். 10ம் நாளில் ராவண வதமும் நடைபெறுகிறது. அசுரர்களை அழிப்பதற்காக அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் அனைவரும் தங்களின் அம்சங்களை அம்பிகையிடம் சேர்த்து விட்டு பொம்மைகள் போல் இருந்தனராம். இதை நினைவு கூறும் விதமாகவே பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்கின்றனர்.

* * *

3. நவராத்திரி பூஜையின் தத்துவம்!

நவராத்திரி தினங்களிலேயே பெரும்பாலான அசுரர்களை வதைத்தாள் அம்பிகை. அப்போது அவள் பல வடிவங்களை எடுத்தாள். அம்பிகையால் தீமைகள் அழிக்கப்பட்ட அந்த தினங்களில் தேவியை வழிபட்டால், நம் வாழ்வில் வரும் தீமைகளும், தடைகளும் அம்பிகை அருளால் அழிந்து, வாழ்வில் நன்மைகள் மலரும் என்பதே நவராத்திரி பூஜையின் தத்துவம் என்று புராணங்கள் கூறுகின்றன.

மகிஷாசுரனோடு ஒன்பது தினங்கள் போர் புரிந்த அம்பிகை வெற்றி வாகை சூடிய தினமே விஜயதசமி என்பது ஐதீகம். தேவி வெற்றி பெற்று யாவரும் மகிழ்வோடு இருந்த தினம் விஜயதசமி தினம் என்பதாலேயே. இன்று துவங்கும் காரியங்கள் யாவும் நன்மையாகவும், சிறப்புடனும் அமையும்.

— எஸ்.மாரியப்பன்.

* * *

4. சப்தரிஷி பூஜை!

காசி விஸ்வநாதரை இரவு ஏழுமணி முதல் எட்டு மணி வரை நடக்கும் பூஜையில் மட்டும் மூலவரை பக்தர்கள் தொடக் கூடாது. மற்ற நேரங்களில் தொட்டு, பூமாலை சூட்டி வணங்க முடியும். சப்தரிஷி பூஜையில் மூலவர் நன்கு அலங்கரிக்கப்பட்டு பூஜை முடிந்து கால பைரவருக்கும் பூஜை நடைபெறும்.

— தேவன்.

* * *

5. நவராத்திரி 10ம் நாள் தத்துவம்!

நவராத்திரியின் பத்தாம் நாள் விஜயதசமி அன்று சிவன் கோவில்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறும். அன்று இறைவன் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவார். இதன் உட்கருத்து நெருப்பு அடங்கிய வன்னிமரம் ஆத்மாவுடன் கூடிய மனித உடலாகவும், அம்பை ஞானமாகவும் வேட்டையில் அம்பு விடுவதை ஞானோபதேசமாகவும் கொள்ள வேண்டும்.

Thanks:Dinamalar............

அதான் சிட்னி முருகனிட்ட வரேக்க கரண்டியோட வாரனிங்கலா ஜம்மு?

சுண்டல் அண்ணா எத்தனையாவது பூசையின் போது சுண்டல் கொடுப்பாங்க கோயிலில

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி கொடுப்பாங்க......இப்பிடியே உங்களுக்க அல்வாவும் கொடுக்க சொல்லறன்...

டெய்லி கொடுப்பாங்க......இப்பிடியே உங்களுக்க அல்வாவும் கொடுக்க சொல்லறன்...

எனக்கு அல்வா வேண்டாம் நீங்கள் கொஞ்சம் ரெக்கமன்ட் பண்ணி பீஸா தர சொல்லுங்கோவேன்

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லையாம் பேகர் தான் கொடுப்பாங்கலாம் ஒ.கே வா?

இல்லையாம் பேகர் தான் கொடுப்பாங்கலாம் ஒ.கே வா?

பரவாயில்லை நான் அஜட்ஸ் பண்ணி கொள்கிறேன்

:P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.