Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது

Featured Replies

கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல்  

                                                                                                            உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதை மத்தியா அரசு ஏற்க மறுத்தது. கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் இந்த விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மிகக் கடுமையாக சாடியிருந்தார். தற்போது இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, பாரதிய ஜனதா அரசு பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது. நல்லவேளை கோபால் சுப்பிரமணியமே நீதிபதிகள் நியமன பரிந்துரை குழுவுக்கு கடிதம் எழுதிவிட்டதால் பாஜக அரசு தப்பிவித்துவிட்டது. அதே நேரத்தில் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டிருப்பதன் மூலம் கடுமையான எதிர்விளைவுகளையும் பாஜக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/gopal-subramanium-case-congress-accused-bjp-playing-the-politics-205007.html

------------------------------------------------------------------------------------------

 

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 'அமித்ஷா' வழக்கறிஞர் யு.யு. லலித் பெயர் பரிந்துரை?  
                                                                                                                                          உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 'அமித்ஷா' வழக்கறிஞர் யு.யு. லலித் பெயர் பரிந்துரை? டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிசீலனையில் இருந்து கோபால் சுப்ரமணியம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூத்த வழக்கறிஞரும் பிரதமர் நரேந்திர மோடியின் வலதுகரமான அமித்ஷாவுக்காக வாதாடியவருமான யு.யு.லலித் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் பெயரை நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் அவரது பெயரை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனால் கோபால் சுப்பிரமணியமும் தமது பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நரிமன் ஆகியோரது பெயர்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இதையடுத்து கோபால்சுப்பிரமணியத்துக்குப் பதிலாக மூத்த வழக்கறிஞர் யு. யு.லலித் பெயரை பரிந்துரைக்க நீதிபதிகள் நியமனக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் யு. யு.லலித் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார் யு.யு. லலித். மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான், கொலை வழக்கில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா ஆகியோருக்காகவும் யு. யு.லலித் ஆஜராகி வாதாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/u-u-lalit-may-get-gopal-s-sc-judge-slot-204844.html
 

CJI Lodha's war cry: Apex Court-Modi sarkar face off over Subramanium

Government dropped Gopal Subramanium’s name without my consent: CJI


 
  • தொடங்கியவர்
கோபால் சுப்பிரமணியம் என்ற தமிழர் நேர்மையும் திறமையும் மிகுந்த மூத்த வழக்கறிஞர்.
இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மோடிஅரசு எதிர்ப்புத் தெரிவித்ததால்
அவர் அப்பதவியைப் பெறமுடியவில்லை.இது மிகவும் தவறான செயற்பாடு.பக்கச்சார்பற்று,
நடுநிலையுடன் செயற்படவேண்டிய உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் இவ்வாறு வெகு
வெளிப்படையாகவே மோடிஅரசு தலையிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும்
ஏற்படுத்தியுள்ளது.
 
கோபால் சுப்பிரமணியம் அவர்களுக்கு முன்னைய காங்கிரசுஅரசும் அநீதி இழைத்துள்ளது.இப்போது
மோடிஅரசின் தலையீட்டுக்குக் காரணம் கோபால் அவர்கள் மோடியின் வலதுகரமாகச் செயற்படும்
அமித் ஷாவிற்கு எதிரான வழக்கில் முன்பு வாதாடியுள்ளர் என்பதாகும்.புதிய அரசின் இத்தகைய

பழிவாங்கல் போக்குகள் எங்குபோய் முடியுமோ தெரியாது.

காங்கிரசுஆட்சியின் வரிசையான ஊழல்கள் நிறைந்த ஆட்சியிலிருந்து விடுதலைபெற மக்கள்
ஏற்படுத்திய ஆட்சிமாற்றம் மற்றொரு ஊழலும் பழிவாங்கலும் மிகுந்த பாஜக ஆட்சிக்கு வழி
வகுத்துள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
உதாரணமாக, இந்திய உச்சநீதிமன்றம் வெகுஅண்மையில்,அதாவது 23 ஜனவரி 2014இல்,
வழங்கிய தீர்ப்பில் குஜராத் மாநில வருவாய்த்துறை அமைச்சர் திருமதி அனந்திபென் பட்டேல்
காணிக்கொள்வனவு விடயத்தில் நடந்துகொண்டவிதம்பற்றி வெகுவாகக் கண்டித்துள்ளது.
 
இந்த பட்டேல் அம்மையார்தான் இப்போது மோடிக்கு அடுத்த குஜராத் மாநிலமுதல்வர் என்பது
கவனிக்கத்தக்கது.இப்போது மத்திய அரசும் அவர்கள் கையில் இருப்பதால் இந்தியாவின் எதிர்காலம்

எப்படியிருக்குமோ தெரியாது?.

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.