Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜனதா புதிய தலைவரானார் அமித் ஷா: ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா பா.ஜனதாவின் புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டதாக  முந்தைய தலைவரான ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

டெல்லியில் இன்று பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக  கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜ்நாத் சிங் விலகினார்.

இதனையடுத்து  பா.ஜனதாவின் புதிய தலைவராக, ஆட்சி மன்றக்குழுவில் இடம்பெற்றுள்ள 12 உறுப்பினர்களால், அமித் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக கட்சித் தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.

இத்தகவலை, கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

மோடி, அத்வானி வாழ்த்து

பா.ஜனதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானியும் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குஜராத்தில் கொண்டாட்டம்

அமித் ஷா பா.ஜனதா தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானதும், குஜராத் மாநிலத்தில், குறிப்பாக அகமதாபாத்தில் பா.ஜனதாவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற பாரதிய modi%20amit-sha.jpgஜனதா கொள்கையின்படி, அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

தேர்தல் வெற்றியால் கிடைத்த பரிசு

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வடமாநிலங்களில், அதுவும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் அமித் ஷாவுக்கான பரிசாகவே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மிக நெருங்கிய நண்பராகவும் அமித் ஷா திகழ்வதாலும் அவருக்கு இந்த பொறுப்பை பெற்றுத் தருவதில் மோடி ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜனதா தலைவருக்கான போட்டியில் அமித் ஷாவுடன் ஓம் பிரகாஷ் மாத்தூர், ஜே.பி. நாடா ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே மகாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவிலேயே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால்,  உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை குவித்தது போன்று இந்த தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றி பெற அமித் ஷாவை கட்சித் தலைவராக ஆக்குவதே சிறந்தது என்ற முடிவின் அடிப்படையிலேயே ஓம் பிரகாஷ் மாத்தூர், ஜே.பி. நாடா ஆகியோர் பின்னுக்கு தள்ளப்பட்டு  அமித் ஷா முடி சூட்டப்பட்டார் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் அமித் ஷாவை பா.ஜனதா தலைவர் ஆக்குவதில் வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆதரவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

யார் இந்த அமித் ஷா?

AmitShah%20rally.jpgமோடிக்கு முன்னதாகவே ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்ந்து பின்னர் பா.ஜனதாவில் இணைந்த அமித் ஷா, ஆரம்ப காலம் தொட்டே மோடிக்கு நெருக்கமான நண்பராக திகழ்ந்து வந்தார்.

பின்னர் மோடி குஜராத் முதலமைச்சரானபோது அமித் ஷா அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் மோடியை கொல்ல திட்டமிட்ட  தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, போலி என்கவுன்டரில் 3 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் அமித் ஷா. மேலும் அவரை குஜராத்தைவிட்டு வெளியேறுமாறும் நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

மேலும் போலி என்கவுண்டரில் ஷொராபுதீன் கொல்லப்பட்ட வழக்கிலும் அமித் ஷா கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். ஆனால் தம்மீதான இந்த குற்றச்சாட்டு அரசியல் சதி என அமித் ஷா அதனை மறுத்திருந்தார்.

இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, இரு மதத்தினருக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதாக கூறி, பொதுக்கூட்டங்களில் பேச அமித் ஷாவுக்கு அப்போது தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதன் பின்னர் தாம் அவ்வாறு பேச மாட்டேன் என தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அமித் ஷா உறுதி அளித்த பின்னரே, அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=29933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.