Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணாகதி உடன்பாடல்ல-ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

இணைத்தலைமை நாடுகளின் கூட்டங்களில் தம்மையும் பங் கேற்க அனுமதிக்க வேண்டும் என நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கையானது இணைத் தலைமை நாடுகளின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த முற்படுவதன் விளைவே ஆகும்.

இனப்பிரச்சினை விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தையும் - விடுதலைப் புலிகளையும் நோர்வேத்தரப்பும் இணைத்தலைமை நாடுகளும் சம அந்தஸ்தில் உள்ளவர்களாகக் கருதுவது சிறிலங்கா அரசிற்கு தொடர்ந்தும் விசனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து வருகின்றது.

இம்மாதத் தொடக்கத்திலும் பிரெசல்சில் கூடிய இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் இரு தரப்பினரையும் சமநிலையில் வைத்தே தமது அறிக்கையை இணைத்தலைமை நாடுகள் விடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பன இரு தரப்பினருக்குமான பொது அறிவிப்பே. இது போன்ற அறிவிப்புக்கள் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்குப் பிடித்துக் கொள்வதில்லை.

ஆனால், இணைத் தலைமை நாடுகளைப் பொறுத்து அதுவல்ல விடயம். யுத்த நிறுத்த உடன்பாட்டை உறுதிப்படுத்துவதன் மூலம் தம்மையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அது யுத்த நிறுத்த உடன்பாடு விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகவுள்ளது எனக் குற்றம்சாட்ட விளைகிறது.

அடிப்படையில் உண்மை என்னவெனில், யுத்த நிறுத்த உடன்பாடு இரு தரப்பையும் சம தரப்பாகக் கருதுவது சிறிலங்கா ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசு என்ற ரீதியில் தமக்கு விசேட அந்தஸ்து இருத்தல் வேண்டுமென அது கருதுகின்றது.

இராணுவச் சமநிலையோ அன்றி சம அந்தஸ்தோ இல்லாதவொரு உடன்பாடு, அது யுத்த நிறுத்த உடன்பாடாக இருப்பினும் சரி வேறு உடன்பாடாக இருப்பினும் சரி அது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவப்போவதில்லை. மாறாக, அவற்றை யுத்த நிறுத்த உடன்பாடு என்றோ இருதரப்பு நலன் பேணும் உடன்பாடு என்றோ கூறமுடியாது.

உடன்பாடுகள் சிறிலங்கா அரசு எண்ணுவது போன்று அமைவதானால் அவை சரணாகதி உடன்பாடாகவும், ஒரு தரப்பு நலன் பேணும் உடன்பாடாகவுமே இருக்க முடியும். இவ்வாறான உடன்பாட்டிற்கு சர்வதேச ஏற்பாட்டாளர்களும் தேவையில்லை. மத்தியஸ்துவமும் தேவையில்லை.

வெற்றி பெற்றவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தோற்றவர்கள் அதில் கையொப்பம் இடுவதாகும். அதாவது, இராணுவச் சமநிலைகளில் ஒருதரப்பு பலவீனப்படுதல் அன்றி அழிக்கப்படுவதால் ஏற்படும் நிலையாகும். இது உலகின் பல பாகங்களில் போர்களின் முடிவில் செய்து கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நிலைமை அவ்வாறு இல்லை. விடுதலைப் புலிகளுக்கும் - சிறிலங்கா அரசிற்கும் இடையில் இராணுவச் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் இல்லை. யுத்தம் முடிந்துவிட்டதாகவும் இல்லை.

ஆனால், சிறிலங்காவோ தாம் அரசு என்ற ரீதியில் விடுதலைப் புலிகளுடன் சமதரப்பு என்ற ரீதியில் நோக்கப்படத்தக்கவர்கள் அல்ல. தம் நிலை மேம்பட்டது எனக் கூற முற்பட்டு நிற்கின்றது. இதனை யுத்த நிறுத்தம், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஏற்பாட்டாளராகச் செயற்படும் நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ் இணைத் தலைமை நாடுகளும் சரி, நோர்வேயும் சரி அரசு என்ற ரீதியில் சிறிலங்காவுடன் தனித்தனி இராஜீக உறவுகளைக் கொண்டே உள்ளன. அத்தோடு, அவை நெருக்கமானவையாகவும் உள்ளன. ஆனால், யுத்த நிறுத்த உடன்பாடு அன்றி இனப் பிரச்சினை விடயத்தில் விடுதலைப் புலிகளையும் சம தரப்பாகக் கருதாது மேற்கொள்ளும் தீர்மானங்கள் ஒருதலைப்பட்சமானவையாகி விடும். இதனால், பயன் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பது மட்டுமல்ல அவற்றின் பணிகளும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும்.

இச்சமதரப்பு விவகாரமானது சிறிலங்காத் தரப்பால் தற்பொழுது தான் பேசப்படும் ஒன்றாக இல்லை. முன்னரும் நோர்வேத் தரப்பிற்கு எதிராகப் பேசப்பட்டே வந்தது. ஆனால், இவ்விடயத்தில் நோர்வேத் தரப்பால் சிறிலங்காவின் விருப்பிற்கேற்பச் செயற்பட்டுவிட முடியாது. நோர்வேத் தரப்பு இன்னமும் சமாதான ஏற்பாட்டாளர் பாத்திரத்தை வகிக்கவும் சர்வதேச ஆதரவைத் தம் பக்கம் வைத்துக் கொள்ளவும் அதன் அணுகுமுறையே அடிப்படையாக வுள்ளது.

ஆனால், இதுவரையில் நோர்வேத் தரப்பு மீது அதிருப்தி கொண்டிருந்த சிறிலங்கா அரச தரப்பு தற்பொழுது இணைத் தலைமை நாடுகளின் போக்குக் குறித்தும் கவலை கொண்டுள்ளது.

இந்நிலையில் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பை உருவாக்கலாம் எனக் கருதுகின்றது. அதாவது, வழமை போலவே பிரச்சினைக்குத் தீர்வு காணாது நெருக் கடிகளை வேறு பக்கம் திருப்பிவிட அது முனைகிறது.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/editorial/eela...2006_SEP/19.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.