Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழிப் பயணம் மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழிப் பயணம் மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயம்
12 ஜூலை 2014
aus%20boat_CI.jpg

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடல் வழியாக பயணங்களை மேற்கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள் மாயமாகியுள்ளனர். இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறு வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கடல் வழியாக புகலிடம் கோர முயற்சித்து காணாமல் போன இலங்கையர்களின் எண்ணிக்கை 800க்கும் மேல் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் உண்மை என்ற போதிலும் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டதில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.நீண்ட காலமாக முகாம்களில் வறுமையில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் பெருமளவு பணத்தைச் செலுத்தி இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

நபர் ஒருவர் 2500 அமெரிக்க டொலர்களை செலுத்தி படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு கடலில் வைத்தே இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் தென் இந்தியாவிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணித்துள்ளதாக அட்ரா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இதில் 120 பேர் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் ஏனையவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய தகவல்களே கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலிய புறப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள பலர் காத்திருப்பதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, படகுப் பயணங்களின் போது கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை பற்றிய தகவல்களை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. 40 பேர் இவ்வாறு படகுப் பயணங்களின் போது காணாமல் போயுள்ளமைக்கான சான்றுகளை சமர்ப்பிக்க முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 112 பேரைக் காணவில்லை என புள்ளி விபரத் தகவல் வெளியிட்டுள்ளது. படகுப் பயணங்களை மேற்கொண்ட சிலர் சோமாலிய கடற் கொள்ளையர்களிடம் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சோமாலிய, கென்ய அரசாங்கங்களின் உதவியுடன் விசாரணை நடாத்த உத்தேசித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

படகுப் பயணத்தை மேற்கொண்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பற்றி அதன் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தமிழகத்தில் வாழ்ந்து வரும் அவர்களின் உறவினர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109286/language/ta-IN/article.aspx

அவுஸ் எங்கே இருக்கு சொமாலியா எங்கே இருக்கு.. பத்து லச்சத்தை வாங்கிக்கொண்டு நடுக்கடலுக்கு கொன்டுபோய் காலில பாறையை கட்டி தாட்டு விடுகிறார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.