Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவு.. குரங்குக்கா மனிதனுக்கா ஜாஸ்தி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா..அம்மா... என அழுத இரு குழந்தைகள் அடித்துக் கொலை; குடிகார தந்தை கைது

 

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகிலுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது-28). லாரி ஓட்டுநராக இருக்கும் இவர் மனைவி பெயர் கோகிலா (வயது-25). இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (வயது-4), மோகனப் பிரியா (வயது-2), தெய்வானை (வயது-1) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

வழக்கமாக மது அருந்தும் பழக்கமுடைய சதீஷ்குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கனவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த கோகிலா, தனது குழந்தைகளுடன் காவாக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இதையடுத்து,  வெள்ளிக்கிழமையன்று மாமனார் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார், குழந்தைகளை கூட்டிக்கொண்டு தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்துள்ளார்.

இதற்கு கோகிலா மறுப்புத் தெரிவிக்கவே, குழந்தைகள் தமிழ்ச்செல்வன், தெய்வானை ஆகிய இருவரையும் தூக்கிக் கொண்டு சதீஷ்குமார் மட்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இரவு நேரத்தில் குழந்தைகள் இருவரும் அம்மாவிடம் போகவேண்டும் என்று கூறி அழுதுள்ளனர். போதை யிலிருந்த சதீஷ்குமார் ஆத்திரத்தில் இரண்டு குழந்தைகளையும் போட்டு அடித்துள்ளார். குழந்தைகள் இருவரும் மீண்டும் அம்மா... அம்மா....என்று கத்திக்கொண்டு அழுத்தத்தில் ஆத்திரம் கொண்டவர் குழந்தைகளை பிடித்து தலையை சுவரில் மோதவிட்டு அடித்துள்ளார். இதில், தலையில் பலமான தமிழ்செல்வன், தெய்வானை ஆகியோர் உயிரிழந்தனர்.

குழந்தைகளின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, சதீஷ்குமார் அங்கிருந்து தப்பினார். தகவல றிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெரும்பாலை போலீஸார், குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக “டாஸ்மாக்” கடையிலிருந்த சதீஷ்குமாரைக் போலீசார் கைது செய்தனர்.

 

===================================================================

 

குரங்குகளின் உதவியால் கிணற்றில் விழுந்து தவித்த நாய் மீட்பு

 

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூரைச் சேர்ந்த ரங்கநாதன் நிலத்தில் 80 அடி ஆழ தரைக் கிணறு உள்ளது. நேற்று, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகள், திடீரென கிணற்றை பார்த்து கூச்சலிட்டன.

 

ரங்கநாதன் சென்று பார்த்தபோது, கிணற்றின் உள்ளேயிருந்து விலங்கின் சத்தம் கேட்டது. குரங்கு கிணற்றில் விழுந்திருக்க வேண்டும் என எண்ணிய அவர், கிராம மக்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றார்.


இளைஞர் ஒருவர் கயிறு மூலம் உள்ளே இறங்கி, உள்ளே விழுந்து கிடந்த நாயை உயிருடன் மீட்டார். இந்த நாய் கடந்த 4 நாட்களுக்கு முன் விழுந்தது தெரியவந்தது.

 

நன்றி நக்கீரன்.கொம்

 

இந்தமாதிரி காட்டு மிராண்ட்களின் செயலை செய்டிகலுடன் போடாதிங்கப்பா.. பாவம் அந்த பிள்ளைகள் இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.