Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TRANSCENDENCE: செயற்கை நுண்ணறிவின் பயங்கரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

transcendence_ver11_xlg.jpg?w=201&h=300

வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது.

திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் தளங்களை Wally Pfister, மேரி ஷெல்லியின் ப்ராகின்ஸ்டைன், ஐஸக் அசிமோவ் படைப்புகளின் உந்துதலில் பெற்று இருக்கின்றார்.

அமெரிக்க Blockbuster திரைப்படமொன்றிற்கான அத்தனை கூறுகளையும் கொண்ட கதைத்தளம் இந்த Transcendence. ஆனால், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எடுத்துக்கொண்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்சப்டை தெளிவுபடுத்த முனைந்திருப்பது படத்தைப் பார்க்கும் போது விளங்குகிறது.

ஜானி டெப், தனது பாத்திரங்களை தெரிவு செய்வதில் வல்லவர். இத்திரைப்படத்தில் ஒரு IT ஜீனியஸாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவ்வளவிற்கும், படத்தில் இவரின் பாத்திரம் கொஞ்சமாகவே வருகின்றது.

கதை இதுதான், டாக்டர் வில் (ஜானி டெப்) மற்றும் அவரது மனைவி ஈவ்லீன் (ரெபெக்கா ஹால்) அதி உயர் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனிக்கின்றனர். அதில் ஒரு பிரச்சினை, Self Conscious அல்லது Self Awareness ஐ கொண்டதாக இருந்தால்தான் அது மனித நுண்ணறிவு செயல்படும் விதத்தில் இருக்கும். அந்த சூட்சுமத்தை கண்டடைவதில்தான் இருவரின் பணியும் இருக்கின்றது. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் அதனை வளர விடமால் தடுக்க வேண்டும் என ஒரு எதிர்ப்பு – அரசியல் குழு செயற்படுகிறது. அக்குழு டாக்டர் வில்லை சுடுவதுடன் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. மனைவி ஈவ்லின் இறக்கும் தருவாயில் இருக்கும் வில்லின் மூளையை, சிந்தனையை, ஞாபகங்களை சுருக்கமாக கூறினால் வில்லை கம்ப்யூட்டருக்கு அப்லோட் செய்கிறாள்.

ஒரு அதி உயர் நுண்ணறிவு படைத்த ஒரு மனித மூளை கம்ப்யூட்டர் இணையவெளியில் திறந்துவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான விடைகளே படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் முடிவும்.

நவீன தொழில்நுட்ப யுகம் பெற்றிருக்கும் நானோ தொழில்நுட்பம் பற்றி இந்தத் திரைப்படம் அதிகமாக பேசுகிறது. நானோ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சாத்தியங்கள் இருக்கின்றன, மருத்துவத்துறை, விவசாயம், இராணுவம் என்று பல தளங்களில் இதன் கைகள் வியாப்பித்துக் கொண்டு வருகின்றது. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களையும் கூட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறது அறிவியல்.

hawking.jpg?w=300&h=225

இந்த திரைப்படத்தை முன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துக்களையும் சற்று நோக்குவோம். தொழில்நுட்பத்தில் Singularity (Technological Singularity) எனும் ஒரு கோட்பாடு உண்டு. அதாவது மனித நுண்ணறிவை விட அதி சக்தி படைத்த மூளையைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒன்றினால் என்னென்ன சாத்தியங்களை செய்ய முடியும் என்பது பற்றிய கோட்பாடே அது. இது மனித நாகரீகத்தில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும். மருத்துவம், விவசாயம் ஏன் மனித இயல்புகளையே மாற்றிவிடும் ஆற்றல் மிக்கதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும்.

ஏற்கனவே Artificial Intelligence களின் தன்மைகளைக் கொண்ட தொழில்நுட்ப அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. சில ஸ்மார்ட் போன்களும் கூட இத்தன்மைகளுடன் வடிவமைக்கப்படுகிறது. மனிதன் இதனை சீரியஸாக எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதன் பாதிப்புகள் படுபயங்கரமானதாகவும், மனித நாகரீகத்தின் அழிவிற்கே இட்டுச் செல்லக் கூடியதாகவும் அமைந்துவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறுகின்றார்.

இந்த Singularity கோட்பாட்டில் உருவாகும் இயந்திரங்களால் மனித நுண்ணறிவை காட்டிலும் அதிகமாகவும், தம்மைத் தாமே மீளுருவாக்கம் (Replicate) செய்துகொள்ளவும் முடியும். பொருளாதாரம், அரசியல் நிலமைகளில் தாம் விரும்பியவாறு மாற்றங்களை நிகழ்த்தும். இவற்றை விட ஆபத்தான ஒன்று, மனிதன் விளங்கிக் கொள்ள முடியாத ஆயுதங்களை உருவாக்கவும் செய்யும். சுருங்கக் கூறின் மனிதனின் கடைசி யுத்தம் இந்த Artificial Intelligence தான் இருக்கும்.

இப்பிரச்சினைகள் எந்தளவு தூரத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாவிட்டாலும், ஏற்கனவே யுத்தங்களின் தன்மைகள் மாறிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக இன்ன மனிதனை கொல்ல வேண்டும் என்றால் அவனது டீ.என்.ஏ மாதிரியை ஒரு ஏவுகனையின் இயங்கு தளத்தில் இணைத்து விட்டால் போதும். அது தன் வேலையை கச்சிதமாக செய்யும். மறுபக்கத்தில் அரசாங்கங்களுக்கு எதிராக இணைய யுத்தங்கங்களும் (Cyber War) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தின் மூலம் இவ்விடயங்களை சற்று புரிந்துகொள்ள முடிகின்றது.

http://peayezhuttu.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்
வாசிக்க முடியவில்லை, இருட்டாக இருப்பதனால் திரும்ப இணைத்துள்ளேன். 
 
வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது.
திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் தளங்களை Wally Pfister, மேரி ஷெல்லியின் ப்ராகின்ஸ்டைன், ஐஸக் அசிமோவ் படைப்புகளின் உந்துதலில் பெற்று இருக்கின்றார்.
அமெரிக்க Blockbuster திரைப்படமொன்றிற்கான அத்தனை கூறுகளையும் கொண்ட கதைத்தளம் இந்த Transcendence. ஆனால், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எடுத்துக்கொண்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்சப்டை தெளிவுபடுத்த முனைந்திருப்பது படத்தைப் பார்க்கும் போது விளங்குகிறது.
ஜானி டெப், தனது பாத்திரங்களை தெரிவு செய்வதில் வல்லவர். இத்திரைப்படத்தில் ஒரு IT ஜீனியஸாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவ்வளவிற்கும், படத்தில் இவரின் பாத்திரம் கொஞ்சமாகவே வருகின்றது.
கதை இதுதான், டாக்டர் வில் (ஜானி டெப்) மற்றும் அவரது மனைவி ஈவ்லீன் (ரெபெக்கா ஹால்) அதி உயர் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனிக்கின்றனர். அதில் ஒரு பிரச்சினை, Self Conscious அல்லது Self Awareness ஐ கொண்டதாக இருந்தால்தான் அது மனித நுண்ணறிவு செயல்படும் விதத்தில் இருக்கும். அந்த சூட்சுமத்தை கண்டடைவதில்தான் இருவரின் பணியும் இருக்கின்றது. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் அதனை வளர விடமால் தடுக்க வேண்டும் என ஒரு எதிர்ப்பு – அரசியல் குழு செயற்படுகிறது. அக்குழு டாக்டர் வில்லை சுடுவதுடன் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. மனைவி ஈவ்லின் இறக்கும் தருவாயில் இருக்கும் வில்லின் மூளையை, சிந்தனையை, ஞாபகங்களை சுருக்கமாக கூறினால் வில்லை கம்ப்யூட்டருக்கு அப்லோட் செய்கிறாள்.
ஒரு அதி உயர் நுண்ணறிவு படைத்த ஒரு மனித மூளை கம்ப்யூட்டர் இணையவெளியில் திறந்துவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கான விடைகளே படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் முடிவும்.
நவீன தொழில்நுட்ப யுகம் பெற்றிருக்கும் நானோ தொழில்நுட்பம் பற்றி இந்தத் திரைப்படம் அதிகமாக பேசுகிறது. நானோ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சாத்தியங்கள் இருக்கின்றன, மருத்துவத்துறை, விவசாயம், இராணுவம் என்று பல தளங்களில் இதன் கைகள் வியாப்பித்துக் கொண்டு வருகின்றது. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களையும் கூட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறது அறிவியல்.
 
hawking.jpg?w=300&h=225
இந்த திரைப்படத்தை முன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துக்களையும் சற்று நோக்குவோம். தொழில்நுட்பத்தில் Singularity (Technological Singularity) எனும் ஒரு கோட்பாடு உண்டு. அதாவது மனித நுண்ணறிவை விட அதி சக்தி படைத்த மூளையைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஒன்றினால் என்னென்ன சாத்தியங்களை செய்ய முடியும் என்பது பற்றிய கோட்பாடே அது. இது மனித நாகரீகத்தில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக் கூடிய ஒன்றாக மாறிவிடும். மருத்துவம், விவசாயம் ஏன் மனித இயல்புகளையே மாற்றிவிடும் ஆற்றல் மிக்கதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும்.
ஏற்கனவே Artificial Intelligence களின் தன்மைகளைக் கொண்ட தொழில்நுட்ப அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. சில ஸ்மார்ட் போன்களும் கூட இத்தன்மைகளுடன் வடிவமைக்கப்படுகிறது. மனிதன் இதனை சீரியஸாக எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதன் பாதிப்புகள் படுபயங்கரமானதாகவும், மனித நாகரீகத்தின் அழிவிற்கே இட்டுச் செல்லக் கூடியதாகவும் அமைந்துவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் எதிர்வு கூறுகின்றார்.
இந்த Singularity கோட்பாட்டில் உருவாகும் இயந்திரங்களால் மனித நுண்ணறிவை காட்டிலும் அதிகமாகவும், தம்மைத் தாமே மீளுருவாக்கம் (Replicate) செய்துகொள்ளவும் முடியும். பொருளாதாரம், அரசியல் நிலமைகளில் தாம் விரும்பியவாறு மாற்றங்களை நிகழ்த்தும். இவற்றை விட ஆபத்தான ஒன்று, மனிதன் விளங்கிக் கொள்ள முடியாத ஆயுதங்களை உருவாக்கவும் செய்யும். சுருங்கக் கூறின் மனிதனின் கடைசி யுத்தம் இந்த Artificial Intelligence தான் இருக்கும்.
இப்பிரச்சினைகள் எந்தளவு தூரத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாவிட்டாலும், ஏற்கனவே யுத்தங்களின் தன்மைகள் மாறிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக இன்ன மனிதனை கொல்ல வேண்டும் என்றால் அவனது டீ.என்.ஏ மாதிரியை ஒரு ஏவுகனையின் இயங்கு தளத்தில் இணைத்து விட்டால் போதும். அது தன் வேலையை கச்சிதமாக செய்யும். மறுபக்கத்தில் அரசாங்கங்களுக்கு எதிராக இணைய யுத்தங்கங்களும் (Cyber War) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த திரைப்படத்தின் மூலம் இவ்விடயங்களை சற்று புரிந்துகொள்ள முடிகின்றது.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்ததை யாழில் இணைக்கும் அவசரத்தில் கவனிக்கவில்லை மிக நன்றி தமிழரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.