Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மரபணு பயிர்களை அனுமதிக்க மாட்டோம்!': வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

Featured Replies

Tamil_News_large_1030167.jpg
 
மரபணு மாற்று பயிர்களை பரிசோதனை அடிப்படையில் சாகுபடிக்கு அனுமதிக்கலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி
இருக்கிறது.இது குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு விதமான கருத்துக்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூறியதாவது:
 
மா.கம்யூ., - எம்.பி., டி.கே.ரங்கராஜன்:விஞ்ஞானத்துக்கு நாங்கள் ஒரு போதும் எதிரியில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள் மற்றும் பயிர்கள், மேலை நாடுகளில் வெற்றியடைந்த ஒரு, 'பார்முலா' என சொல்லப்படுகிறது.அதை நம்பலாமா, நம்பக் கூடாதா என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் செல்லத் தேவையில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள், பயிர்கள் நம் நாட்டின் நலனுக்கு, மக்கள் நலனுக்கு உகந்ததா என்பதை பல்வேறு விதமான சோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும்.
 
அந்த சோதனைகள், களத்திற்கு நேரடியாகச் சென்று, விவசாயிகள் நிலத்தில் நடத்தக் கூடாது. இதற்கென இருக்கும், அரசின் சோதனைக் கூடத்தில் தான் நடத்தப்பட வேண்டும்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே, தற்போதைய பா.ஜ., அரசும் பின்பற்றுகிறது. காங்கிரசும், பா.ஜ.,வும் விவசாயிகளை, நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தான் வைத்திருக்கின்றன.
 
முன்னாள் காங்கிரஸ் எம்.பி., அழகிரி: மரபணு மாற்று பயிர்களுக்கு இந்தியா வில் அனுமதி அளித்திருக்கும் விவகாரத்தில், இரண்டு விஷயங்களை நாம், பார்க்க வேண்டும்.
மரபணு மாற்று பயிர்களுக்கு, இந்தியாவில் அனுமதி அளிப்பது என்பது, தவிர்க்க முடியாதது. அமெரிக்கா, சீனா, வியட்னாம் போன்ற வளர்ந்த நாடுகளில், மரபணு மாற்று பயிர்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.
 
சீனா போன்ற மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள நாட்டில், மரபணு மாற்று பயிர்கள், அந்த நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன.அதேபோல, அமெரிக்கா, வியட்னா மின் மீது படையெடுப்பு நடத்தி, அந்த நாட்டை பசியிலும் பஞ்சத்திலும் ஆட்படுத்தியது. அப்போது, அந்த நாட்டில் இருக்கும் குழந்தைகள் பஞ்சத்தில் சிக்கினர். அவர்கள், 'வைட்டமின் ஏ' குறைவு நோய்க்கும் ஆளாயினர். அவர்களுக்கு, மரபணு மாற்று முறையில் பயிர் செய்த உணவுகளை கொடுத்தனர். அவர்கள் அந்த குறைபாட்டில் இருந்து மீண்டனர்.
 
இப்படி, மரபணு மாற்று பயிர்கள், நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் நிரம்பியவை என, ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை நாம் பெரிதாக எதிர்க்க தேவையில்லை.
 
இந்திய கம்யூனிஸ்ட் துரை மாணிக்கம்: வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனி கள் பிழைக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் ஏற்கனவே காங்கிரஸ் அரசு செய்து கொண்டிருந்தது. இப்போது அதையே, பா.ஜ., அரசும் செய்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த கார்ப்பரேட்கள், உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில், 125 கோடி மக்கள் இருக்கின்றனர் என்றால், அதில், 80 சதவீதம் பேர் விவசா யிகள். இவ்வளவு பெரிய நாட்டில், பெரிய அளவில் வியாபாரம் செய்வது தான் அமெரிக்காவின் இலக்கு.
 
குறிப்பிட்ட அந்த கம்பெனி களுக்கு, மீண்டும் மீண்டும் மரபணு மாற்றப்பட்ட விதை வியாபாரம் நடக்கும். இந்த கம்பெனிகளுக்கு, பா.ஜ., அரசும் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.
இதை நாங்கள் துணிச்சலாக எதிர்ப்போம்; இந்தியாவில் அதை வர அனுமதிக்க மாட்டோம்.
இன்னொரு பக்கம், 'கோதுமைக்கும், நெல்லுக்கும் மாநிலங்கள் கொடுக்கும் ஆதரவு 
விலையை கொடுக்கக்கூடாது' என, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறது.இப்படி பல வழிகளிலும், விவசாயிகளை அழிக்கும் முயற்சியில், மத்திய அரசு முனைப்புடன் இறங்கி இருக்கிறது.
 
முன்னாள் வேளாண் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்: நான் ஒரு விவசாயி என்ற முறையில் இதை வரவேற்கிறேன். ஏனென்றால், மரபணு மாற்று விதையால் உருவாக்கப்படும் பயிர், கண்டிப்பாக மனித உயிருக்கு சிறிய பாதிப்பைக் கூட ஏற்படுத்தக்கூடியது அல்ல.நம் மண்ணில் இருந்து தான், இத்தகைய விதைகளுக்கான ஆராய்ச்சி துவங்குகிறது. அதில் இருந்து எடுக்கப்படும் உயிர் அணுக்களைக் கொண்டு தான், மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படுகின்றன. நம் விவசாயிகள் புழு, பூச்சிகளால் தான், பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
 
அதைத்தான், இந்த மரபணு மாற்று விதைகள் இல்லாமல் செய்கின்றன. புழுக்களின் குடல், அமிலத் தன்மை வாய்ந்தது. மனிதன் மற்றும் பிராணிகளின் குடல் காரத் தன்மை மிக்கது.
அதனால், புழுக்கள் மீது தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள், அமிலத் தன்மை வாய்ந்த புழுக்களைத் தான் அழிக்கும். காரத் தன்மை வாய்ந்த மனித குடலை எதுவும் செய்யாது.
 
அதனால், மரபணு மாற்று விதைகளால் மனிதனுக்கோ, பிராணிகளுக்கோ எந்த பாதிப்பும் இருக்காது.இத்தகைய விதைகள் மூலமாக விளைவிக்கப்படும் பயிர்கள், அதிக விளைச்சலை கட்டாயம் கொடுக்கும். அதனால் தான், விவசாயிகள் அதை வரவேற்கின்றனர். ஒரு சிலர் தான், புரிதல் இல்லாமல் அதை எதிர்க்கின்றனர்.பி.டி., பருத்தி விதை, ஒரு ஏக்கருக்கு, 28 குவிண்டால் விளைச்சலை தரும். ஆனால், பாரம்பரிய விதை மூலம் உருவாக்கப்படும் பயிர், 6 குவிண்டாலை தான் தரும். அதனால், விவசாயிகளுக்கு பி.டி., பருத்தி விதை ஒரு வரப்பிரசாதம் தான்.இன்றளவிலும், விவசாயப் பல்கலைக்கழக பேராசிரியர்களோ, விஞ்ஞானி களோ யாரும் மரபணு மாற்று விதை தவறானது என, கருத்து கூறியது கிடையாது.
 
தி.மு.க., - எம்.எல்.ஏ., கோ.வி.செழியன்:கிராமத்து விவசாயம், பண்ணை விவசாயம், பாரம்பரிய விவசாயம் போன்றவை, மத்திய அரசின் அன்னிய விவசாய தொழில் முயற்சிகளால் துளியும் நடைமுறைப்படுத்தக் கூடாது என, மத்திய அரசிடம் நாங்கள், தெளிவாக சொன்னோம்.
அதை ஏற்று செயல்படுவதாக அப்போதைய அரசில் இருந்தவர்களும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். 
 
ஆனால், 'மாற்று அரசு கொடுப்போம்; விவசாயி களை காப்போம்; மரபணு மாற்று விதையை இந்தியாவில் அனுமதிக்க மாட்டோம்' என்றெல்லாம், தேர்தல் வாக்குறுதிகள் மூலம் சொல்லி, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த, பா.ஜ., அரசிடம் எந்த புது திட்டங்களும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
 
- நமது நிருபர் -
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.