Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் போட்டியில் 4வது இடத்தில் நீடிக்கும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
503.jpg
504.jpg
 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இது தனக்கு கடைசி காமன்வெல்த் போட்டி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
 
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை ஹீனா சித்து, மலைக்கா கோயல் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் மலைக்கா கோயல் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹீனா சித்து 7-வது இடத்திற்கு பின்தங்கினார்.
 
இதன்மூலம் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது. 
 
18 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 15 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், 10 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன.
 
  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய விளையாட்டு விழா:

பதக்கப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில்

20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் முதல் நாள் போட்டிக்காக அரங்க சைக்கிளோட்டம், ஜpம்னாஸ்டிக், ஜ_டோ, நீச்சல், பளுதூக்கல், ஆகிய விளையாட்டுக்களுடன் மூவம்ச போட்டிகள் தங்கப் பதக்கப் பட்டியலில் இடம்பெற்றி ருந்தன.

முதல் நாள் போட்டிகளில் 4 புதிய சாதனைகள் நிலை நாட்டப்பட்டதுடன் இரண்டு சாதனைகள் புதுப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் பளுதூக்கல் போட்டியில் முதலாவது தங்கத்தை இந்தியா வென்றெடுத்தது.

s1407261.jpgபளுதூக்கலில் மணிப்பு+ர் வீராங்கனையான சஞ்சிதா சானு, 48 கிலோகிராம் எடைப்பிரிவில், 173 கில கிராம் பளுதூக்கல் மூலம் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இதேபிரிவில், மற்றுமொரு இந்திய வீராங்கனையான மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்தப் போட்டியில் களமிறங்கிய இலங்கை வீராங்கனையான சத்துரி வர்ண குலசூரிய போட்டியில் பிரகாசிக்கத் தவறினார்.

இதேவேளை டோல் க்ரொஸ்ஸில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் மகளிருக்கான 400 மீற்றர் போட்டியில் ஸ்கொட்லாந்தின் ஹேனா மிலி தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இதற்காக இவர் 4 நிமிடங்களும் 31.7 6 செக்கன்களை எடுத்துக்கொண்டார். வெள்ளிப்பதக்கத்தை இங்கிலாந்து அணியும் வெண்கலப்பதக்கத்தை அவுஸ்திரே லியாவும் சுவீகரித்துள்ளன.

மற்றுமாரு நீச்சல் போட்டியில் 200 மீற்றருக்கான போட்டிப்பிரிவில் புதிய சாத னையுடன் அவுஸ்திரேலியாவின் ஏமா மெக்கியோன் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

இதன்பிரகாரம் 6 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 17 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதல் இடத்திலுள்ளது. அவுஸ்திரேலியா ஐந்து தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் ஸ்கொட்லாந்து நான்கு தங்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

 

20வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து

 

s1407261-1.jpgபொதுநலவாய அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுநலவாய விளையாட்டுக்கள் சம்மேளனத்தின் தலைவர் அரச மேன்மைக்குரிய இளவரசர் துங்கு இம்ரானுக்கு  (His royal Highness Tunku Imran) நேற்று முன்தினம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பித்த 20வது பொதுநலவாய விளையாட்டுகளுக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பொதுநலவாய நாட்காட்டியில் தனித்துவமான சிறப்பியல்பைப் பெறுகின்ற இந்த விளையாட்டுக்கள் அதன் பிராந்தியங்கள் முழுவதிலுமிருந்தும் விளையாட்டு வீரர்களை ஓரிடத்தில் சேர்க்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் தெரிவித்தார். சிநேகபூர்வமான விளையாட்டுக்கள் எனப் பொருத்தமாக அழைக்கப்படும் இவை பல்வகைப்பட்ட பொதுநலவாயக் குடும்பத்தின் நட்புறவுக்கும் ஒற்றுமைக்கும் அடையாளமாகும்.

விளையாட்டுக்களில் பங்குபற்றும் அனைத்து அணிகளுக்கும் தனது சிறப்பான வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்த அதேவேளை. பொதுநலவாய விளையாட்டுக்களில் சிறப்பாகச் செயற்படும் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போன்ற பரந்த சர்வதேசக் களங்களில் அனேகமாக சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்தார். இளவரசர் இம்ரானுக்கான செய்தியில், சுகமளிப்பதில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்தார். சுகமளிப்பதில் போட்டிகளின் முக்கியத்துவம் காரணமாக இவ்விளையாட்டுக்கள் பொதுநலவாயத்தின் மக்களுக்கு முக்கியமானவையாகக் காணப்படுகின்றன என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் நாங்கள் விளையாட்டுக்களின் இந்த அம்சம் குறித்து நன்குணர்ந்துள்ளோம். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுபட்டுள்ள நிலையில் மக்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வளர்ப்பதில் விளையாட்டுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இலங்கை அணியினருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 20 ஆவது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நீங்கள் அனைவரும் தேசிய அணியில் உள்வாங்கப்படுவதற்காக கடுமையான போட்டிகளுக்கு கடுமையான உழைப்புக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “இந்தப் பெறுபேறு குறித்து நீங்கள் பெருமையடைய வேண்டும். அத்தோடு பரவலாகக் கொண்டாடப்படும் நிகழ்வொன்றில் உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுவதை தெளிவான சலுகையாகவும் கெளரவமாகவும் நீங்கள் கருத வேண்டும்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 156 விளையாட்டு வீரர்கள் பல்வேறு வெவ்வேறான நிகழ்வுகளில் பங்குபற்றுகின்றனர். ஜனாதிபதி தனது செய்தியில் நாட்டினுள் ஒத்திசைவை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு வீரர்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் தெரிவித்தார்.

இலங்கையில் விளையாட்டுக்கள் எப்போதும் முக்கியமான மற்றும் ஒற்றுமைப்படுத்தும் பங்கினை ஆற்றியிருக்கின்றன. முக்கியமாக நாட்டில் போருக்கு பிந்தைய சூழலில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்தும் விளையாட்டு வீரர்களையும். வீராங்கனைகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் ஒத்திசைவின் உணர்வினால் விளையாட்டு ஒன்றாக இணைக்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் விளையாட்டு வீரர்களுக்கான செய்தில், வெற்றிபெறுவது அல்லது தோல்வியடைவது முக்கியமானதல்ல எனவும். விளையாட்டுக்களின் போது அவர்கள் என்னவாறான விளையாட்டுணர்வில் இவ்விளையாட்டுக்களில் செயற்படுவதே முக்கியமானது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுறுத்தினார்.

http://thinakaran.lk/2014/07/26/default.asp?fn=s1407261

  • கருத்துக்கள உறவுகள்

10526100_912067982143149_717225602102623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.