Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசை எதிர்த்து இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம்: மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என  மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ramana01.jpg

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ramana02.jpg

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் படகுகளின் உரிமங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைத்து மீனவர்களும் படகுகளில் வெள்ளை கொடி கட்டி இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

ramana03.jpg

இதன்படி இன்று (28ஆம் தேதி) காலை ராமநாதபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தங்களது படகுகளின் உரிமங்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக சென்ற மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அதிகாரிகளிடம் கோரிக்கையினை சொல்லி செல்லுமாறு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை ஏற்று கொள்ளாத மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான வாயில் முன் அமர்ந்து கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ramana04.jpg

மீனவர்கள் தங்களது படகுகளின் உரிமங்களுடன் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். மீனவர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், ‘‘மீனவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து தமிழக அரசு அறிந்துள்ளது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க தமிழக முதல்வர் நேரடியாகவும், அலுவல் ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம் மீனவர்களும், படகுகளும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் இலங்கை கடற்படையினரால் படகுகளை இழந்த மீனவர்களுக்கு அரசின் உதவிகளை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தமிழக முதல்வரின் மேல் நம்பிக்கை வைத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

ramana05.jpg

இதனைத் தொடர்ந்து மீனவர்கள், தங்கள் படகுகளின் உரிமங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் ‘‘இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. எனவே எங்களின் முதல் கட்ட போராட்டமான படகுகளின் உரிமங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. எனவே எங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதேபோல் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நடக்க இருக்கும் இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டத்தையும் நடத்துவோம்'' என்றார்.

முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் மீனவர் சங்க தலைவர்கள், என்.தேவதாஸ், சேசு, எமரிட், சகாயம், மீனவர் மகளிர் அமைப்ப்பின் நிர்வாகிகள் இருதயமேரி, மோட்சராணி, விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30682

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.