Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை சாகடிக்கவே யாழ். ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களை சாகடிக்கவே யாழ். ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது: த.தே.கூ.. நடராஜா ரவிராஜ்

குண்டுகளை வீசி தமிழ் மக்களைக் கொல்வதற்கு அப்பால் ஏ-9 வீதியை மூடியதன் மூலமும் தமிழ் மக்களை சாகடிக்க சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான்

அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எனக்கு உறுதியான சந்தேகம் உள்ளது.

நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயாராக இருப்பதாக நோர்வே அனுசரணையாளர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இம்முறை தெரிவித்துள்ளனர். எரிக் சொல்ஹெய்ம் மற்றும் யசூகி அகாசி ஆகியோரது அறிக்கைகளின்படி சிறிலங்கா அரசாங்கமும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதாக இருந்தது. ஆனால் எரிக் சொல்ஹெய்மின் அறிக்கை வெளியான பின் சிறிலங்கா அரசியல்வாதிகளிடமிருந்து பல்வேறு பதில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

சிறிலங்கா அரசாங்கத்தை நிபந்தனைகளைக் கைவிடுமாறு யாரும் கூற முடியாது என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்புப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நிபந்தனையற்ற பேச்சுக்கள் நடைபெறும் என்று இணைத் தலைமைத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கையையும் நிராகரித்துள்ளார்.

வழக்கம்போல் மகிந்த ராஜபக்ச தனது வாயை இறுக்கமாக மூடிக்கொண்டுள்ளார். மகிந்தவின் அரசாங்கம் நடத்தும் முறையே யாரும் எதனையும் செய்து கொண்டே இருக்கலாம். தவறாக இருந்தாலும் அமைதி காப்பது என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.

இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஒருபக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கொண்ட குழுவினருடன் வெளிநாட்டுப் பயணத்தை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். மக்களுக்கான பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் நிபந்தனைகளை கைவிட்டு விட்டுப் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையுடன் எமக்கு கடந்த 6 மாத காலமாக எதுவித தொடர்பும் இல்லை. இருப்பினும் ஊடகச் செய்திகளின் படி எதுவித முன் நிபந்தனைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை எவருமே ஏற்கமாட்டார்கள்.

எந்த ஒரு தமிழ் பேசுகிற தமிழரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

வேடிக்கைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தவில்லை. தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகத்தான் ஆயுதமேந்தினர். தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை எந்த ஒரு தமிழனும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.

சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல முதலில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் கற்பனையான செய்திகளைத்தான் பேசுகிறார். பொத்துவில் படுகொலை தொடர்பில்கூட தமிழீழ விடுதலைப் புலிகளைத்தான் அவர் குற்றம்சாட்டினார்.

பொத்துவிலுக்கு போய் மக்களின் கருத்தைக் கேட்கவேண்டும். ஆனால் அப்படியில்லாத ஒரு பேச்சாளர் இதான் இங்குள்ளார்.

கேகலியவோ ரட்ணசிறியோ வரவேண்டும் என்று புலிகள் கேட்கிறார்களா?

பேச்சுக்களுக்குச் செல்வது என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குழுவை அறிவிக்கின்றனர். மகிந்தவும் ஒரு குழுவை அறிவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு ரட்ணசிறி விக்கிரமநாயக்கவோ கேகலிய ரம்புக்வெலவோதான் வரவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோருவதில்லை.

யாரை அனுப்ப வேண்டும் என்பது விடுதலைப் புலிகள் முடிவு செய்வர். கடந்த காலங்களைப் பார்த்தால், எந்த ஒரு பேச்சுவார்த்தையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நேரடியாக கலந்து கொண்டதில்லை. அவர் ஒரு குழுவை நியமிப்பார். அக்குழுவினருடன் தொடர்பில் இருப்பார். விவாதிப்பார்.

சர்வதேச பிரதிநிதிகளையும் ஊடகத்தாரையும் இரண்டொரு முறைதான் சந்தித்துள்ளனர். எங்களுடன் பல முறை சந்திப்புகளை நடாத்தியுள்ளார்.

பேச்சுக்களுக்குச் செல்லும்போது பிரபாகரன்தான் வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியாது. அரசியல்துறைப் பொறுப்பாளருடன் பேச்சு நடத்தலாம்.

வெளிநாட்டுப் படையை வரவழைத்தமைக்கு ஜே.வி.பி.தான் முதல் காரணம்

சிறிலங்காவின் வரலாற்றைப் பார்த்தால் முதலில் யார் சர்வதேச சமூகத்தை இந்த நாட்டுக்கு அழைத்தது என்பது தெரியும்.

1949 ஆம் ஆண்டு தொடக்கம் எத்தனையோ ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு செயற்படுத்தப்படாத நிலையில் தலையிடுமாறு நோர்வே தரப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நோர்வே தரப்பினருடன் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சனையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தமையால் ஐரோப்பிய ஒன்றியத்தினர் அல்லாத கண்காணிப்புக் குழுவினர் இருக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

ஆனால் பிரிகேடியர் விமல் வீரவன்ச மற்றும் அவரது மேஜர் ஜெனரல்கள்- யாரென்று சொல்ல விரும்பவில்லை அவர்களெல்லாம் சர்வதேச சமூகத்தை அழைத்தமை குறித்து பேசுகிறார்கள். பயங்கரவாதம் குறித்து பேசுகிறார்கள்.

1971ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை விமல் வீரவன்ச அறிய வேண்டும். பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க இரருந்தபோது இந்திய இராணுவம் இங்கே அழைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு வெளிநாட்டுப் படை வந்திறங்கியது அப்போதுதான். காரணம் என்னவெனில் விமல் வீரவன்ச குழுவினரால்தான்....பிரபகாரனால

பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர்

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.

அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் அந்தக் குடும்பஸ்தரைத் துரத்திப்பிடித்தனர்.

பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது கூறியுள்ளார்.

இதனையடுத்து திருடனென நினைத்து அவரைப் பிடித்தவர்கள் உடனடியாகவே அவரை விட்டுவிட்டனர்.

இவ்வாறு வெளியே வராத பல்வேறு சம்பவங்கள் குடாநாட்டில் தினமும் இடம்பெற்றுவருகின்றன.

பசிக்கொடுமை தாங்காது தொழிலுமின்றி உணவுப் பொருட்களையும் பெறமுடியாது வாடும் மக்கள் தவறான வழிகளை நாடிச் செல்வதும் இங்கு அதிகரித்து வருகின்றது.

பசிக்கொடுமை தாங்காது குடும்பத்துடன் ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவமும் வடமராட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.

http://www.thinakkural.com/news/2006/9/24/...s_page11496.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.