Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை மறைக்க முயலும் அரசு துணைபோகும் முஸ்லிம் தலைமை

Featured Replies

எம்.ஏ.எம்.நிலாம்-

பொத்துவிலில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பதற்றநிலை இன்னமும் தணிந்தபாடாக இல்லை. சம்பவத்தையடுத்து முரண்பாடான தகவல்களே வெளியிடப்பட்டு வருகின்றன. இது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசு மீதான பலத்த சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தப் படுகொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும். யார் இதனைச் செய்தார்கள் என்பதைக் கண்டறிந்து முஸ்லிம் சமூகத்தின் சந்தேகத்தைப் போக்க வேண்டியதும் இதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கட்டாயக் கடப்பாடாகும்.

இந்தப் படுகொலைகள் தொடர்பாக அரசு தொடர்ந்து கூறிவரும் காரணங்களை முஸ்லிம் மக்கள் முற்று முழுதாகவே நிராகரித்துள்ளனர். ஆனால், அரசு உண்மையை அறிந்திருந்தும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றது.

அரசாங்கம் பொத்துவில் படுகொலைகள் மீதான பழியை விடுதலைப் புலிகள்மீது சுமத்தி முஸ்லிம் மக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் படுதீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. ஆனால், புலிகள் இச்செயலில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான சாட்சியங்களையோ, தடயங்களையோ காண முடியவில்லை. இதன் பின்னணியில் அங்கு நிலைப்படுத்தப்பட்டிருந்த அதிரடிப் படைமுகாம் உயரதிகாரியும், அவரது சகாக்கள் சிலருமே சம்பந்தப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

பொத்துவில், பாணமை, பெரியஉல்லைக் கிராமத்தில் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற புத்தர் சிலை விவகாரத்தின் பின்னணியாகவே இதனைக் கொள்ளவேண்டியுள்ளது. பொத்துவில் பிரதேசத்திலிருந்து முஸ்லிம் குடும்பங்களை முழுமையாக வெளியேற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும். அம்பாறைப் பகுதியிலுள்ள ஒரு பௌத்த பிக்குவின் ஒத்துழைப்புடன் பௌத்த சிங்களவர்களைக் குடியேற்றி முஸ்லிம்களை விரட்டியடிப்பதே இதன் பின்னணியாகும்.

இரத்தல்குளம் மறுசீரமைப்புப் பணிகளில் இந்த முஸ்லிம் இளைஞர்களுடன் மேலும் 9 சிங்களவர்களும் உள்ளடங்குகின்றனர். சம்பவதினத்தில் இந்த ஒன்பது பேரில் ஒருவர் கூட வேலைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பல நாட்கள் திட்டமிட்டே இந்தப் படுகொலைச் செயலை செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். பெரிய உல்லைக் கிராம மத்தியில் பௌத்த விகாரையொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முன்னர் தோல்வி கண்டதையடுத்து முஸ்லிம்களை வெளியேற்றும் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது.

பொத்துவில் முஸ்லிம் மையவாடியில் முஸ்லிமல்லாத இரு சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமே இப்பிரச்சினைக்கு வித்திடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இதனை ஆட்சேபித்ததையடுத்து இன்று நீங்கள் இரண்டு சடலங்களை அடக்கம் செய்ய இடமளிக்கவில்லை. நாளைக்கு உங்களில் பத்துப் பேரை அடக்கம் செய்யத் தயாராகுங்கள் என்று மிரட்டிவிட்டு இந்தப் படையதிகாரி திரும்பிச் சென்றுள்ளார். இதனை இந்த முஸ்லிம்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், இந்த அதிகாரியின் வெறித்தனத்தால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பத்துப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவையும் செய்துவிட்டு, இந்த நாட்டின் முழு முஸ்லிம் சமுதாயத்தையும் ஏமாற்றி திசை திருப்பும் வகையில் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தும் பகீரத முயற்சியிலீடுபடத் தொடங்கினர். அரசாங்கம்கூட இன்னமும் அதிரடிப்படையினரின் தவறு என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. இந்த பெரும் குற்றச்செயலை அந்த அதிகாரி செய்யவில்லை என்றால், ஏன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு, முகாமும் மூடப்பட வேண்டும். அரசு மக்களைத் தவறான திசையில் இட்டுச் செல்ல எடுக்கும் முயற்சியானது பாரதூரமான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலமாவது படிப்பினை கொள்ளக்கூடாதா எனக் கேட்க விரும்புகின்றேன்.

அப்படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணம் யாராக இருந்தாலும் அரசும் பாதுகாப்புத் தரப்பும் தமது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாது. படுகொலைகள் நடந்தது அரச பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே. பாதுகாப்புத்துறை விழிப்புடனும் அதிக கவனத்துடனும் இருப்பது மிகமிக முக்கியம். பாதுகாப்புத்துறையின் அலட்சியம், பலவீனம் ஆகியவற்றின் காரணமாகவே நாட்டில் பாரிய அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. மூதூரில் புலிகள் பிரவேசித்துப் பாரிய விளைவுகளை ஏற்படுத்த பாதுகாப்பு துறையினரின் அலட்சியப் போக்கே காரணம்.

இந் நாட்டைப் பொறுத்தவரையில், முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. புலிகளும் அவர்களை வதைக்கிறார்கள். பாதுகாப்புத் துறையும் அவர்களை அலட்சியப்படுத்தி வதைக்கிறது. பிரிவினைக்கு முஸ்லிம்கள் ஆதரவாக இல்லாததால் புலிகள் அவர்களை ஆயுதமுனையில் துன்புறுத்தி அழிக்கிறார்கள். நாட்டுக்கு விசுவாசமாக உள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்புத்துறையும் துன்புறுத்தி அக்கிரமம் புரிகிறது.

மாறி மாறி வரும் சகல அரசாங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகள் உட்பட உயர் பதவிகள் பல வழங்கப்படுகின்றன. தற்போதைய அரசிலும் பல முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளனர். எனினும், எல்லா அரசாங்கங்களாலும் ஒதுக்கப்படுபவர்கள், அலட்சியப்படுத்தப்படுபவர்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.