Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் கோரிக்கையை உதாசீனம் செய்தது அரசாங்கம்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நாவின் கோரிக்கையை உதாசீனம் செய்தது அரசாங்கம்-
06 ஆகஸ்ட் 2014
 

 

avoid_CI.jpg

ஐக்கிய நாடுக்ள அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கோரியிருந்தது.

எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து 36 பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நாடு கடத்தியுள்ளது.

இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குறி;த்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அண்மையல் நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானியர்களில் அதிகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் அரியேன் ரமொரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இவர்களின் நிலைமை குறித்து கண்காணிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை ஆபத்தானதாகவே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110268/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.