Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கல்வியமைச்சு இனவாதத்துடன் செயல்படுகிறது: பிரபா எம்.பி

Featured Replies

மஹிந்தோதய திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்பவியல் ஆய்வுகூட கல்வி முறைமையில் மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு இடமளிக்காமல் மத்திய கல்வியமைச்சு இனவாதத்துடன் செயல்படுகின்றது. இது சம்பந்தமாக மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்தவுடன் கடிதம் மூலமும் நேரடியாகவும் எனது கண்டனத்தை தெரிவித்த போதும், வேறு நோக்கங்களை முன்வைத்து தனது இனவாதத்தை வெளிப்படுத்துகின்றார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
மேலும் தெரிவித்ததாவது,
 
இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்திருப்பது கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் நலனைக் கருத்திற் கொண்டேயாகும். அதேபோல் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மூலமாக கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் என்ற முறையில் பல கோடி ரூபாய்களைப் பெற்று பல பாடசாலைகளை முழுமையான முறையிலே அபிவிருத்தி செய்து வருகின்றேன். 2014ஆம் இவ் ஆண்டிற்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியினை பெற்று பாடசாலைகளுக்கு ஒதுக்கியுள்ளேன்.
 
ஆனால், புதிய வெளிநாட்டு கல்வி முறைமைக்கமைய மஹிந்தோதய திட்டத்தின் கீழ் தொழில்நுட்பவியல் ஆய்வுக்கூடங்கள் பாடசாலைகளில் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது வெறுமனே க.பொ.த உயர்தர கல்வியல்ல. மாறாக இந்த திட்டத்தின் உள்ளார்த்தங்களை தமிழ் கல்வி ஆர்வாலர்களும், கல்வி சமூகமும் ஊடகவியலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புதிய கல்வி முறைமையானது உயர்தர கல்வியிலே சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்களுக்காகவும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்து விட்டு நேரடியாக இந்த தொழில்நுட்ப கல்வி திட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொள்பவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டதாகும். 
 
இன்று பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் பர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். இப்படியான ஒரு நிலைமை மாற்றியமைக்கப்படுவதற்காகத்தான் இந்த புதிய தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் பாடசாலை மட்டத்திலே ஆரம்பிக்கப்படவுள்ளது. 
 
1970களில் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் மக்கள் அதிகமாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதற்காக பிரதேசரீதியான வெட்டுப்புள்ளி முறையைக் கொண்டு வந்து க.பொ.த உயர்தரத்தில் திறமை சித்தியடைந்த வடக்கு மாணவர்களுக்கு இடமளிக்காது செய்தனர். இதனால்தான் அன்று இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
 
அதே போன்றுதான் இன்று நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூட முறைமையில் தமிழ், முஸ்லிம் மாணவர்களை ஓரங்கட்டுவதற்கான அடிமட்ட சதி நடந்து வருகின்றது. நாடு முழுவதிலும் மொத்தம் 225 பாடசாலைகள் இதற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. 
 
இப்பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைக்கப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது சிறியரக பல்கலைக்கழகத்திற்கு ஒப்பானதாகும். 
 
மேல்மாகாணத்திலுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை. இதனை மத்திய கல்வியமைச்சரிடம் தெரிவித்த பொழுது எனது முயற்சியினால் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட தெமட்டகொட விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் புவக்பிட்டிய சி.சி.டி. தமிழ் மகா வித்தியாலயத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்துவதை விடுத்து இரத்மலானை இந்து கல்லூரியில் பல ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும் அதனை ஜனாதிபதியிடம் தெரிவித்து இடத்தைப் பெற்று தந்தால் அதில் தமிழ் - சிங்கள தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை அமைக்கலாம் என்று தெரிவிக்கின்றார். 
 
இதன் மூலம் பல வருடகாலமாக இந்த பாடசாலைக்கு சொந்தமாகவிருக்கும் இந்நிலம் இவர்களது கண்களை உறுத்துகின்றது. இதனை அபகரித்து அங்கே பெரும்பான்மை மாணவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட பார்க்கின்றார்.  
 
இதேபோன்று ஏனைய மத்திய ஊவா வட., கிழக்கு மாகாணங்களில் தமிழ் பாடசாலைகளுக்கு எந்தவித விகிதாசாரத்தில் இக்கல்வி முறைமை வழங்கப்பட்டுள்ளது என்பதனை அந்த மாவட்ட தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்விடயத்தை வெறுமனே பாடசாலை அபிவிருத்தி பணிகளில் ஒன்றாக எவரும் கருதி விடக் கூடாது. மாறாக எமது சமூகத்தின் எதிர்காலம் இதனால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதனை ஏனைய அரசியல் தலைவர்களும் புரிந்து செயல்பட வேண்டும். 
 
கொழும்பு மாவட்ட தமிழ் கல்வி சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அநீதியை நிவர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதில் பிரயோஜனம் இல்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.