Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் வெறுக்கிறேன்: தீபிகா பல்லிகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் வெறுக்கிறேன்: தீபிகா பல்லிகல்
 
)

BCCI.jpgபுதுடெல்லி: தினேஷ் கார்த்திக்கை தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் தாம் வெறுப்பதாக  ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் கூறியுள்ள நிலையில், 12 நாடுகளில் மட்டுமே விளையாடப்படக் கூடிய கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முறையை பார்த்து, மற்ற விளையாட்டு சங்கங்கள் பிசிசிஐ-யிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான ஜவாலா கட்டா அறிவுறுத்தி உள்ளார். 

 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா – ஜோஷ்னா ஜோடி, இங்கிலாந்தின் ஜெனி டுன்காஃப், லாரா மஸரோ ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இது காமன்வெல்த் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கமாகும். இதன்காரணமாக எதிர்காலத்தில் இந்தியாவில் ஸ்குவாஷ் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாடு மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய இந்திய பேட்மிட்டன் விளையாட்டு நட்சத்திரங்களான ஜவாலா கட்டா மற்றும் பி.வி. சிந்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய மூவரும், கிரிக்கெட் போன்ற மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோமோ என உணர்வதாகவும், பல தரப்பிலிருந்தும் இன்னும் கூடுதலான பாராட்டுக்களை எதிர்பார்ப்பதாகவும் கூறினர். 

ஜவாலா பேசுகையில், "நாங்கள் மிகக்குறைவான அங்கீகாரத்தையும், மரியாதையையும்தான்jwala%20katta.jpgஎதிர்பாக்கிறோம். பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் வந்திருந்தால் பேட்மிட்டனையோ அல்லது ஸ்குவாஷையோ அல்லாமல் வேறு விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்திருப்போம்.

சர்வதேச சாம்பியனாகும் விஷயத்தை விடுங்கள்...தேசிய சாம்பியன் ஆவதற்கே நம் நாட்டில் ஒருவர் நூற்றுக்கணக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. 

சீனாவை எடுத்துக்கொண்டால் அந்நாட்டு அரசு விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் ஆதரவு அளிக்கிறது. அங்கு ஒருவர் ராக்கெட்டை கையில் எடுப்பதிலிருந்து ஓய்வுபெறும் வரை அரசு அவரை மிகக் கவனமாக கவனித்துக்கொள்கிறது. நம்மிடம் ஏன் ஒரே ஒரு சானியாவும், ஒரே ஒரு சிந்துவும் உள்ளனர் என நான் மிகவும் வியப்படைகிறேன். சீனாவைப்போன்று 10 - 10 சாம்பியன்களை ஏன் வைத்திருக்க முடியவில்லை?  பேட்மிட்டன் சங்கத்திற்கு அரசாங்கம் மிகப்பெரும் தொகை கொடுப்பதாக நான் கேள்விப்பட்டேன். அந்த பணமெல்லாம் எங்கே செல்கிறது?" என கேள்வி எழுப்பினார். 

இந்திய பேட்மிட்டன் சங்கத்துடன் தமக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் பற்றி குறிப்பிட்ட ஜவாலா, "எனக்கு ஆயுள் கால தடை விதிக்கப்போவதாக மிரட்டியபோதுதான் நான் பேசினேன். உண்மையாக இருப்பதே பலம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார். 

இந்தியாவில் கிரிக்கெட்டைப்போன்று மற்ற விளையாட்டுக்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும். 12 நாடுகளில் மட்டுமே விளையாடப்படக் கூடிய கிரிக்கெட் விளையாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஊக்குவிக்கும் முறை உண்மையிலேயே மெச்சத்தகுந்தது. மற்ற விளையாட்டு வாரியங்களை சேர்ந்தவர்கள் இதனை பிசிசிஐ-யிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

dipika%20pallikal%20250(1).jpgஅவரைத் தொடர்ந்து பேசிய தீபிகா பல்லிகல், விளையாட்டுகளில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.

"என்னுடைய தாயார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, மேற்க்கிந்திய தீவு நாட்டிற்கு சென்றபோது ஒரே அறையில் 15 பேரை தங்க வைத்துள்ளனர்.தினேஷ் கார்த்திக்கை ( இவரை பல்லிகல் திருமணம் செய்ய உள்ளார்) தவிர மற்ற அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நான் வெறுக்கிறேன். ஏனெனில் அவர்கள் மற்ற விளையாட்டுகளுக்குரிய அனைத்து புகழ் மற்றும் அங்கீகாரங்களையும் திருடிக்கொள்கிறார்கள். 

 காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டதற்கான பயணப்படி மற்றும் அகவிலைப்படி ( TA DA )யில் பாதி இந்திய ஒலிம்பிக் சங்கத்திடமிருந்து இன்னும் எனக்கு வரவில்லை.  

மேலும் இங்கு (ஸ்குவாஷ்) பயிற்சி பெறுவதற்கான சரியான இடம் இல்லை. இதனால் நான் எகிப்துக்கு செல்ல வேண்டியதிருந்தது. 14 வயதில் எனது நாட்டை விட்டு வெளியே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டபோது, எகிப்தில் தனியாக இருப்பதை நான் வெறுத்தேன். நீங்கள் நினைப்பது தவறு என்று ஒவ்வொருவரிடத்திலும் நிரூபிக்க விரும்பினேன். அதுபோன்ற அனுபவங்கள்தான் என்னை மேலும் வலிமையுள்ளவளாக்கி, நான் இன்று என்ன சாதித்துள்ளேனோ அதனை அடைய வைத்தது. இந்தியாவுக்காக விளையாடுவதை தவிர வேறு எதையும் நான் பெருமையாக கருதவில்லை" என்று மேலும் பேசினார்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=31157

 

விளையாட்டு திடலில் போடா வேண்டியதை ..தீபிகா நடிகை என்று நினைத்து இங்கு பதிந்து விட்டார் போலுள்ளது...இதை சரியான இடத்துக்கு மாற்றினால் இந்த செய்திக்கு கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.