Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுப்பிரமணியன் சுவாமி.... பார்ப்பனியத்தின் ஒரு வக்கிர முகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியன் சுவாமி.... பார்ப்பனியத்தின் ஒரு வக்கிர முகம்! 

[Tuesday 2014-07-22 11:00]
subramaniya_swami-200-seithycom.jpg

பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி என்று பெரியார் சொன்னார். அதற்கான அர்த்தத்தை நாம் எங்கள் நாட்களில் வெகுவாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழர்கள் மத்தியிலேயே, தீர்க்க முடியாத பெரு வியாதியாக... அகற்ற முடியாத பெரு வினையாக... தவிர்க்க முடியாத பெரும் வலியாக பார்ப்பனீயம் கறையான் புற்றாகப் புரையெடுத்து நிலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பேரவலங்களுக்கும், பேரிழப்பிற்கும் பார்ப்பனிய சதி வலையும் ஒரு முக்கிய காரணமாகவே தொடர்கின்றது.

  

ஒரு மதம் என்ற வகையில் இந்து மதம் தமது மக்களான தமிழர்களைக் காப்பாற்றவும், வழி நடாத்தவும் தவறியுள்ளது. தமிழர்கள் அவலங்களைச் சந்தித்த எந்தக் காலத்திலும், தமிழர்கள் அழிவுகளைச் சந்தித்த எந்தக் காலத்திலும், தமிழர்கள் மரணங்களைச் சந்தித்த எந்தக் களத்திலும் பார்ப்பனியம் தமிழர்களைச் சக மனிதர்களாகவே பேணவில்லை.

ஊழ்வினை, முன் செய் வினை என்ற முட்டாள்தனங்களுக்குள் அத்தனை கொடுமைகளையும் நியாயப்படுத்தியே வந்துள்ளது. அந்த அழிவுகளுக்குள்ளும் தனக்கானவைகளைத் தானமாகவும் பெற்றுக்கொண்டது. இறந்தவர்களுக்காகவும் இருப்பவர்கள் பார்ப்பனியத்திற்கு வரி செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களிடமும் பார்ப்பனியம் வரி வசூலிக்கின்றது. திதி என்ற சதிக்குள் தமக்குத் தானம் வழங்க நிர்ப்பந்தித்துள்ளது.

உழைப்பவர்கள் தொழிலாளிகளானார்கள். அவர்களது தொழில்கள் சார்ந்து சாதிகளும் உருவாக்கப்பட்டது. முரசறைந்து போருக்கு முழக்கமிட்ட தமிழன் பறையன் ஆனான். முகமற்றவனாய், குலமற்று வந்தேறி குடிகளாக வாழ வந்த பார்ப்பனன் உயர் குலத்தவன் ஆனான். உழைப்பற்றுச் சோம்பிக் கிடந்தவர்கள் பரதேசிகள் ஆனார்கள். பிச்சைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனாலும், தமிழர்கள் மத்தியில் உழைப்பற்று, இரந்து வாழும் நிலையிலும் பார்ப்பனர்கள் மட்டும் செழிப்பான வாழ்வு பெற்றார்கள். சமூகத்தின் அத்தனை உயரங்களிலும் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். அதிகாரத்தையும், அந்தஸ்தையும் தம் வசம் ஆக்கிக்கொண்டர்கள். ஆனாலும், தமிழ் மக்கள் நிமிர்ந்து வாழும் நிலையை எந்தத் தருணத்திலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு எதிரான வஞ்சக வலையினை விரித்தே வைத்திருக்கிறார்கள்.

ஒட்டு மொத்த பார்ப்பனியத்தின் முகங்களாக இப்போதும் அடையாளப்படுத்தப்படுபவர்கள் துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து ராம். இவர்கள் அனைவருமே தமிழகத் தமிழர்கள் நிமிர்வதற்கும், எழுவதற்கும் தடையாக நிற்கவில்லை. தமிழீழ மக்களும் தங்கள் அவலங்களில் இருந்து விடுபடுவதற்கும் குறுக்காக நிற்கின்றார்கள். தமிழீழ மக்களது எதிரிகளுடன் இணைந்து, தமிழ் மக்களுக்கு எதிரான சதிகளை வெளிப்படையாகவே மேற்கொள்கின்றனர்.

துக்ளக் சோவுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும், இந்து ராமுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எந்தத் தகராறும் கிடையாது. எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. ஆனாலும், தமிழீழ மக்களது அவலங்களை நியாயப்படுத்தி எதிரிகளுடன் கைகோர்த்துக் கொள்கின்றார்கள். இத்தனைக்கும், சிங்களம் இந்தியத்திற்கோ, பார்ப்பனியத்திற்கோ சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லை. ஆனாலும், தமிழர்களது எழுச்சி கண்டு பார்ப்பனியம் கிலி கொள்கின்றது. இரண்டே வீதமாகத் தமிழர்கள் மத்தியில் இரந்துண்டு வாழும் பார்ப்பனியத்தின் செழிப்பான எதிர்காலம் பொய்த்துவிடுமோ என்ற அச்சத்தில், எங்கள் தானத்தில் உண்டு கொழுத்த இனத்தின் வழி வந்த இந்தப் பார்ப்பனியம் எங்களுக்கெதிராக எதிரியைப் பலப்படுத்த முயல்கின்றது.

சிங்கள இனவாதத்தின் கொடூரங்களுக்குள் சிக்கியிருந்த காலத்திலும், சிறுகச் சிறுக அவர்கள் அழிக்கப்பட்ட காலத்திலும், போர் ஒன்றின்மூலம் இனப்படுகொலைக்கு ஆளான போதும் பார்ப்பனியம் தமிழீழ மக்களுக்காக ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு எதிர்க் குரல் எழுப்பவில்லை. ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தவில்லை. ஆக மொத்தத்தில், தமிழ் மக்களது அழிவுகளை பார்ப்பனியம் ஆதரித்தது. அதை நிகழ்த்தி முடிப்பதற்கு, தமிழின எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டது. அது, இப்போதும் தொடர்கின்றது.

இந்தியப் பார்ப்பனியம் மட்டுமல்ல, இலங்கைப் பார்ப்பனியமும் அதிலிருந்து விலகி நிற்கவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு வந்து, முள்வேலி முகாம்களுக்குள் தமிழினம் புதையுண்டு கிடந்த காலத்தில், அங்கேயும் பார்ப்பனியம் தன்னை அடையாளம் காட்டியது. எல்லோரும் இருக்கும் இடங்களில், அவர்களுடன் கூடி வாழ முடியாது. எமக்கான தனியிடத்தை வழங்குங்கள் என்று சிங்களப் படைகளிடம் பார்ப்பனியம் இரந்து பெற்றது.

அத்தனை தமிழர்களும், அவர்களுடன் கிறிஸ்தவ போதகர்களும் எந்தவித உயர்வு தாழ்வுமற்று, அவலங்களுக்குள்ளும் மனித நேயத்தைக் கடைப்பிடித்த வேளையில், பார்ப்பனியம் தமிழினப் படுகொலையாளியிடம் யாசகம் கேட்டது. முள்வேலி முகாம்களுக்குள் முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் அவலங்களுக்குள் அல்லல்பட்ட வேளையில், பார்ப்பனியம் தம் இனத்தை விடுவிக்கக் கோரி, அதையே தானமாகப் பெற்றது.

ஆனாலும், தமிழினம் திருந்தவில்லை. இப்போதும், முதற்பணியாக, கோவில்களைப் புதுப்பித்து, பார்ப்பனர்களை மணியடிக்க வைத்து மகிழ்ச்சி கொள்கின்றது. புலம்பெயர் தேசங்களிலும், புதிதாக உருவாக்கப்படும் கோவில்களில் பார்ப்பனர்கள் பணத்தைக் குறி வைத்துப் பல தகிடுதத்தங்கள் பெய்கின்றனர்.

திருமணத்திற்கும், பூப்புனிய நீராட்டுக்கும், மரணத்தின் பின்னான திதிக்கும், பிறந்த பிள்ளையின் முப்பத்தொன்றிற்கும் பார்ப்பனர்கள் கட்டண நிர்ணயம் செய்கின்றார்கள். அதற்குப் புண்ணியதானம் என்று பெயரும் இட்டுள்ளார்கள். ஏழைக்கு வழங்கினால், பணியாளனுக்கு வழங்கினால், முதியவருக்கு வழங்கினால், அநாதைகளுக்கும், அபலைகளுக்கும் வழங்கினால்... அதுவே, புண்ணியதானம். கொழுத்த பார்ப்பனனுக்கு வழங்குவது எப்படிப் புண்ணியதானம் ஆகும்?

எங்களை எரித்தவன், எங்களை அழித்தவன், எங்களை அவலத்திற்குள் தள்ளியவன், சிங்களக் கொடியவனுக்கு இந்தியா சிவப்புக் கம்பளம் விரிக்கின்றது. ஆயிரம்ஈ ஆயிரமாக தமிழீழ நிலத்தில் இந்துக் கோவில்களை அழித்தவன், அந்த நிலத்தில் புத்த கோவில்களை நிர்மாணிப்பவன், கொடியவன் ராஜபக்சேயுக்கு திருப்பதியில் பார்ப்பனியம் சிறப்பு அபிஷேகம் நடாத்தி, அவனை வாழ்த்துகின்றது.

இன்றும், சிங்களத்துத் தலைநகரில் பார்ப்பனனிய சுப்பிரமணியன் சுவாமி தமிழீழ மக்களது அவலங்களுக்காக சிங்களத்திற்கு களிப்பூட்டும் கதையளந்து வருகின்றான்.

இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், பெரியார் கூறியதன் அர்த்தத்தினை. 'பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி' பார்ப்பனியம், தமிழர்கள் தங்கள் தலையில் சுமக்கும் பேரவமானம். அதனை, இனியாவது இறக்கித் தொலைக்கவில்லையானால், இனிமேலும் அழிவுகள் மட்டுமே எமக்கானதாக இருக்கும்.

-தமிழ்ச்செல்வன்-

http://www.seithy.com/breifArticle.php?newsID=113566&category=Article&language=tamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெனில் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தானின் வக்கிரமுகம் எனக் கொள்ளலாமா? ஏன் பெரியார் என்ற இனவெறியனின் கருத்துக்களைத் தனிப்பட்ட நபர்களைக் குறிப்பிட்ட மக்கள் அனைவரையும் அடையாளப்படுத்தப் பாவிக்கின்றீர்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.