Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துர்கிஸ்தானில் படையினரிடம் சிக்கியுள்ள 39 மட்டக்களப்பு இளைஞர்கள்! மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
துர்கிஸ்தானில் படையினரிடம் சிக்கியுள்ள 39 மட்டக்களப்பு இளைஞர்கள்! மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை. 
[Tuesday 2014-08-12 11:00]
batti-meet-200-news.jpg

வேலைவாய்ப்புக்காகச் சென்ற போது துர்கிஸ்தானில் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்த சுமார் 39 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று நேரடியாக கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

  

பல்வேறு தொழில் வாய்ப்பினைப்பெற்று துர்கிஸ்தானில் தொழில் புரிந்துவந்த நிலையில் அண்மையில் இராணுவத்தினரால் அங்கு தொழில் புரிந்து வந்தோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் அனைத்து உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைதிகள் போல் நடத்தப்பட்டுவருவதாக அங்கிருக்கும் சிலர் தமது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அனைவரையும் கைது செய்து என்ன செய்யப்போகின்றீர்கள் இலங்கை போகப்போகின்றீர்களா? இங்கு வேலைசெய்யப் போகின்றீர்களா என்று கோரப்படுவதாகவும் இலங்கை செல்லப்போவதாக கூறுவோரையே சிறையில் அடைப்பதாகவும் அவர்களை வெளித்தொடர்பு அற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு வேலை செய்யப்போவதாக கூறியவர்களை படைமுகாம்களில் வேலைகளில் ஈடுபடுத்தி வருவதாகவும் தொலைபேசி மூலம் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். தாங்கள் முகவர்கள் மூலம் மூன்று இலட்சத்துக்கு அதிகமான தொகையினை செலுத்தி வெளிநாடுகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பியுள்ளபோதிலும் அவர்கள் அங்கு இராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி, 39ஆம் கிராமத்தினை சேர்ந்த இராமலிங்கம் என்பவர் தெரிவித்தார்.

தமது மகன் டினேஸ் (26வயது) என்பவர் கடந்த 9ஆம் திகதி தன்னுடன் தொடர்புகொண்டு, அதிகம் கதைக்கமுடியாது. எங்களை இராணுவம் பிடித்து வைத்துள்ளது. எங்களைப் போன்று 39 பேருக்கு கிட்ட இருக்கிறார்கள். எங்கள் அனைவரையும் வெளியாருடன் தொடர்புகொள்ள முடியாதவாறு அடைத்து வைத்துள்ளனர் என தெரிவித்தார். இதேபோன்று தாந்தாமலை 40 கட்டைப் பிரதேசத்தினை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரும் நேற்று தனது மகன் தங்களுடன் தொடர்புகொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதாக தெரிவித்தார். தாங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளோம் என்ற விபரம் தெரியவில்லையென்றும் ஆனால் ஆயுதம் தாங்கிய படையினர் தங்களை கைதிகள் போல் வைத்துள்ளதாகவும் அவர் மகன் தெரிவித்ததாகவும் தர்மலிங்கம் தெரிவித்தார்.

நேற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினை சந்தித்த அவர்கள் தங்களது பிள்ளைகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கையினை விடுத்துள்ளேன்.

துர்கிஸ்தானில் இராணுவத்தினரின் பிடியில் 39க்கும் மேற்பட்டோர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் சென்றுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் உறவினர்கள் என்ன நடவடிக்கையெடுப்பது யாரிடம் செல்வது என்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரது விபரங்களையும் திரட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114757&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.