Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் முதன்முறையாக பெண் குற்றவாளிகள் 2 பேருக்கு விரைவில் தூக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோலாப்பூர்: சுதந்திர இந்தியாவில் இதுவரை பெண் குற்றவாளிகள் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், முதன்முறையாக மகாராஷ்ட்ராவை சேர்ந்த 2 சகோதரிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ரேணுகா கிரண் ஷிண்டே மற்றும் அவரது சகோதரி சீமா மோகன் காவிட் ஆகிய 2 சகோதரிகளும், கடந்த 1990 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஏழை சிறுவர், சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி திருட வைத்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைகள் சற்று பெரிதாக வளர்ந்துவிட்டால் அவர்களை கழுத்தை நெரித்தோ அல்லது இரும்பு கம்பியால் தலையால் அடித்தோ கொன்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் 13 குழந்தைகளை கடத்திச் சென்று, அதில் 9 பேரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இதில் இருவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பின்னர் மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர்.  இந்த மனு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் அவர்களது கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் சம்பிரதாய நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் வருகிற சனிக்கிழமையுடன் முடிவடைய உள்ளதாகவும், இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை புனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகோதரிகள் hang%20rope%20200%287%29.jpgஇருவருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் சட்ட நிவாரண பிரிவுக்கும் தெரிவித்துவிட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்பது குறித்த விவகாரம் இன்னும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அரசு புள்ளிவிவரங்களின்படி இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 52 பேர்கள் மட்டுமே தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியன் மேற்கொண்ட ஆய்வோ, அந்த எண்ணிக்கை மிக அதிகம் எனக் கூறுகிறது.

1953 முதல் 1963 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே 1,422 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆவணங்களில் இருப்பதாகவும், அதே சமயம் பெண்கள் யாரும் தூக்கிலிடப்பட்டதாக ஆவணங்கள் ஏதுமில்லை என்றும்  சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியன் தெரிவிக்கிறது.

இதனிடையே மேற்கூறிய சகோதரிகளின் கருணை மனுவோடு சேர்த்து அதே மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில், 3 வயது சிறுமியை பிஸ்கட் வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேந்திர வாஷ்னிக் என்பவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவருக்கும் எந்த நேரமும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
  

http://news.vikatan.com/article.php?module=news&aid=31339

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.